இடுகைகள்

அருங்காட்சியகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலையை ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கவேண்டும்!

படம்
    நேர்காணல் கலை ஆய்வாளர் சர்யூ வி தோஷி எழுத்து, பயணம், உரை, திட்டமிடல், வழிகாட்டுதல் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறீர்களே? சுற்றுலா துறையில் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான கமிட்டியில் கூட பங்காற்றியுள்ளேன். எனக்கு பல்வேறு செயல்பாடுகளை செய்யப்பிடிக்கும். உரை, பேச்சு, கண்காட்சி, கலை விழாக்கள், நாடகம், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கேற்றுள்ளேன். நிறைய மனிதர்களை சந்திப்பது பிடித்தமானது. எனது வீட்டில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுவதற்கான இடமாகவே இருந்துள்ளது. என்னுடைய மாமியார் வீடு செவ்வியல் இசை, மராத்தி நாடகங்களை போற்றுபவர்கள். இது கலைக்கான காலம். கலையில் புதிய ஆற்றல் உருவாகி வருகிறது. இதன் காரணமாகவே துக்ளக் நாடகத்திற்கான உடை வடிவமைப்பை நான் செய்யும் சூழல் உருவானது. மும்பையைச் சேர்ந்த சபயாச்சி முகர்ஜி உங்களுக்கு கலை பற்றிய தொலைநோக்கு பார்வை உள்ளதாக கூறியுள்ளார்? நேரடியான பார்வையை தாண்டி கலைப்படைப்பில் மறைந்துள்ள மர்மங்களை கண்டறிய முயல்கிறேன். அதைத்தான் அவர் கூறியுள்ளார் என நினைக்கிறே...

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன....

ஆராய்ச்சியில் கிடைத்த புதிய கனிமம்

படம்
  புவியியல் பூமியிலிருந்து கிடைத்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ....