இடுகைகள்

ஓமியோபதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீண்டகால நோய்களுக்கு தீர்வு!

படம்
    மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதியின் மருந்து வீரியமுறை சற்று சிக்கலானது. இதில் இடம்பெறும் மூலிகைகள் அனைத்தும் பச்சையாக இருக்கும்போது அரைத்து சாறு எடுக்கப்பட்டு அதை சர்க்கரை அல்லது சாராயத்தில் கலக்கிறார்கள். ஓமியோபதி மருந்துகள் பலவும் சர்க்கரை அல்லது சாராயத்தில் கரைக்கப்பட்டவையாகவே இருக்கும். சில மருந்துகளை கொடுக்கும்போது சாராயத்தில் நனைத்துக் கொடுப்பார்கள். மருந்தை வீரியமாக்கவே இந்த முயற்சி. சர்க்கரை, சாராயம் என இரண்டுமே மருந்துகள் வீரியமிழப்பதை கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான மூலிகைகள் பச்சையாக இருக்கும்போது சாறு எடுக்கப்படுவதற்கு, காரணம் அதில்தான் சாரம் இருக்கும். வலிமை இருக்கும் என்பதே. காய்ந்த மூலிகையில் வலிமை கிடையாது. அது பொடியாக இருந்தாலும் அல்லது வேறு வகையாக இருந்தாலும் சரி. மருந்துகளை நீர்த்துப்போன வடிவமாக்கி தாய் திராவகம் தயாரிக்கிறார்கள். சாராயத்தில் உள்ள மூலிகைச் சாறின் அளவு நீர்த்துப்போன அளவு கூடும்போது குறையும். 0 எனும்போது உள்ள மூலிகைச்சாறு மூலக்கூறு அளவு, 30சி, 200சி எனும்போது இருக்காது. இப்படி இருக்கும்போது கொடுக்கப்படும் மருந்து நோயைத் தீர...

ஓமியோபதி மருத்துவ முறையை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் வரலாறு!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை 1755ஆம் ஆண்டு, ஓமியோபதியை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் பிறந்தார். பிறந்த தேதி ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி. இவரது தந்தை பீங்கானில் பல்வேறு ஓவியங்களை தீட்டும் திறமை கொண்ட கலைஞர். புனித ஆஃப்ரா என்ற பள்ளியில் செவ்வியல், நவீன மொழிகளைக் கற்றார். ஆங்கில மருத்துவமுறையை உருவாக்கியவரான ஹிப்போகிரேடஸின் மருத்துவ விளக்க நூல்களை படித்தார். அவரின் மருத்துவ தத்துவத்தை வைத்தே ஓமியோபதியின் மருத்துவத்தை உருவாக்கினார். ஒத்தது ஒத்ததை குணமாக்கும் என்பதே கொள்கை, ஒத்தது அல்லது எதிரானது நோயைத் தீர்க்கும் என ஹிப்போகிரேடஸ் கூறினார். 1775ஆம் ஆண்டு சாமுவேல், மருத்துவப் படிப்பை படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் பிளென்சிஸ் ஆதர்சமாக இருந்தார். அந்த காலத்தில் பிளென்சிஸ், மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை செய்தவர். 1779ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம்தேதி, சாமுவேல் மருத்துவப்பட்டம் வென்றார். எர்லாங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டத்தை வழங்கியது. 1781ஆம் ஆண்டு சாமுவேல் மாவட்ட மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஹென்ரிட் என்ற பெண்ணை திருமணம...

நோயில்லாத ஒருவருக்கு செய்யப்படும் மருந்து சோதனை!

 மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருத்துவமுறையை உருவாக்கிய சாமுவேல், பல்வேறு மருந்துகளை தன்னுடைய உடலில் செலுத்தி அதன் அறிகுறிகளை குறித்து வைத்துக்கொண்டே பல்வேறு நூல்களை எழுதினார். இந்த மருத்துவமுறையில் உள்ள அனைத்து மருந்துகளுமே நோயில்லாத ஒருவரின் உடலில் செலுத்தி, அதன் அறிகுறிகளை பார்த்து, கேட்டு எழுதிய பிறகே நோயுள்ளவருக்கு வழங்கப்படுகிறது. இப்படியான சோதனைகள் நடைபெறாமல் மருந்துகளை நேரடியாக நோயாளிக்கு பரிந்துரைக்க கூடாது. மருத்துவர் சாமுவேல் கூடுதலாக ஒரு நிபந்தனையையும் கூறுகிறார். அதாவது, ஓமியோபதி மருத்துவர் தனக்கு தேவையான மருந்துகளை தானே தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிறார். நவீன காலத்தில் அவரின் அறிவுரை எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மருத்துவர், நோயாளிக்கான மருந்தை தானே தயாரிக்கவேண்டும். அதன் தரம், தூய்மை, வீரியம் பற்றிய கவலைகள் காரணமாக இருக்கலாம். ஒவ்வாமைக்கு எனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அனைத்துமே உள்மருந்துகள்தான். வெளியே பூச ஏதுமில்லை. எனக்கு தொடக்கத்தில் குழப்பமாக இருந்தது. மருத்துவர் அதைப்பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. நானும் மருந்துகளை ஏதாவது கொடு...

மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

படம்
   மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...

ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்த...

ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

      மருந்து = நஞ்சு ஓமியோபதி ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும். தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது. சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய...

சாமுவேல் ஹானிமன் எழுதிய ஆர்கனான் ஆஃப் மெடிசின் தமிழில்... நூல் விமர்சனம்

படம்
    ஆர்கனான் சாமுவேல் ஹானிமன் தமிழில் வி ஆர் மூர்த்தி, எஸ்என்கே மூர்த்தி கும்பகோணம் ஓமியோபதி இன்ஸ்டிடியூட் விலை ரூ.3 தமிழ்நாடு அரசின் மின்னூலகத்தில் கிடைத்த ஓமியோபதி நூல். நூலை தரவிறக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், கோப்பின் அளவுதான் அதிகமாக உள்ளது. அதை நிர்வாகம் சற்று குறைத்தால், அல்லது வேறு கோப்பு வடிவில் நூல்களை வழங்கினால் நன்றாக இருக்கும். டேட்டா செலவு சற்று குறையும். நூலைப் பார்ப்போம். இந்த நூல், ஜெர்மனியைச்சேர்ந்த ஓமியோபதியின் தந்தையாகிய சாமுவேல் ஹானிமன் எழுதியது. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதற்கு ஆறு திருத்தப்பட்ட பதிப்புகள் வந்துவிட்டன. அதாவது, அவரது ஆயுள்காலத்திலேயே.. அந்த நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நூலின் மொழி, எழுதப்பட்ட காலத்தில் உள்ள வடமொழி, தமிழ் சங்கமமாக உள்ளது சிலசமயங்களில் உறுத்தலாக உள்ளது. மறுக்க முடியாது. ஆனால், நூலின் அடிப்படை விஷயத்தை மருத்துவர் ஹானிமன் கூற விரும்பியதை அறிந்துகொள்வது அந்தளவு கடினமாக இல்லை. நூலில், ஓமியோபதி மருத்துவத்தின் அடிப்படை என்ன, அது எப்படி செயல்படுகிறது., நோயைத் தீர்க்கிறது, அதற்கான மருந்துகளை எப்...

செயற்கையாக நோயை உருவாக்கி, இயற்கை நோயை விரட்டலாம்!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவ முறை வெறுமனே ஹோமியோபதி மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, அதன் மூலம் என்று படித்தால் அதில் எந்த அர்த்தமும் கிடையாது. வலைப்பூவில் ஓமியோபதி பற்றி எழுதப்படுவதற்கு முக்கியக் காரணம், அம்முறை வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பரவலாகி வருகிறது. மருத்துவர்கள் எளிதாக கிடைப்பது, மருந்துகள் விலை குறைவு என அரசு தரப்பில் நிறைய காரணங்கள் இருக்கலாம். அடிப்படையில் அரசு ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது. இன்று மக்களுக்கு வரும் நோய்கள் அந்தளவு தீவிரமாக மாறிவிட்டன. கூட்டு மருத்துவ சிகிச்சையே இனி பயனளிக்க கூடியது. இப்போதைக்கு ஓமியோபதி பற்றிய தெளிவை பெறுவோம். ஓமியோபதி பற்றிய தகவல்களை ஆங்கிலம், தமிழ் நூல்களிலிருந்தும், என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தும் கூறுகிறேனே ஒழிய, நான் பட்டம் பெற்ற மருத்துவன் அல்ல. மருத்துவர்களுக்கு உதவியாளனும் அல்ல. உங்களுக்கு ஓமியோபதியில் சந்தேகம் வந்தால், மருத்துவரை அணுகலாம். நூல்கள் தேவை என்றால் தமிழக அரசின் மின்னூலகத்தை அணுகலாம். நூலகத்தில...

உறக்கமின்மையைப் போக்கும் சாமோமில்லா

படம்
        மருந்து = நஞ்சு ஓமியோபதி ஆர்னிகா மன்டனா இந்த தாய் திராவகத்தை ஒருவர் உடல் அளவில் சிராய்ப்பு, காயம், பிள்ளை பெற்ற பெண்மணிகள், காய்ச்சலால் உடல் நலிவுற்றவர்கள் பயன்படுத்தலாம். இதுவும் தாவரத்தை முழுமையாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்து. ஆர்னிகா, டெய்சி எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக உழைப்பு காரணமாக திசுக்கள் சேதமடைந்தால் அதை ஆர்னிகா சீர்ப்படுத்தும். அதிர்ச்சி, உடல் ரீதியான காயங்களை உள்ளும் புறமும் சரிசெய்யும். இதோடு கூடுதலாக ருஷ் டாக்ஸ், ஹைபெரிகம் ஆகிய மருந்துகளை உடல் சேதத்தைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம். குழிப்புண்கள் போல காயம் இருந்தால் அதற்கு லேடம் என்ற மருந்து பயன்படும். நோயாளியின் நோய் அறிகுறிகளை நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். ஆர்செனிகம் ஆல்பம் இதை வெள்ளை ஆர்செனிக் என்று அழைக்கிறார்கள். அடிப்படையில் ஆர்செனிக் என்பது உயிர்கொல்லும் விஷம். ஆனால் அர்ஸ் ஆல்ப் என்பது ஓமியோபதியில் மருந்து. மனப்பதற்றம் கொண்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்படுபவர்கள், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைந்து பதற்றமாகவே இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, எரிச்சல் மனநிலை ஆகியவை அற...

தேனீயின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் எரிச்சல், வீக்கத்திற்கான ஓமியோபதி மருந்து!

படம்
       4 மருந்து = நஞ்சு ஓமியோபதி அல்லியம் செபா என்ற மருந்தைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்னர், ஓமியோபதி மருந்துகளை முறையாக மருத்துவரின் பரிந்துரைகளின்படி சாப்பிடவேண்டும். அல்லாதபோது, அதன் பக்கவிளைவுகளை ஒருவர் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஓமியோபதி மருத்துவரிடம் மருந்துகளை வாங்கினாலும் கூட, மருந்தின் ஆபத்தான பக்க விளைவுகளைப் பொறுத்து, அதை கூறும்படி தொலைபேசி எண்களை கொடுப்பதுண்டு. மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளுக்கு ஏற்ப மருத்துவர், மாற்று மருந்துகளை அல்லது அதை சமாளிக்கக்கூடிய பரிந்துரைகளை வழங்குவார். ஓமியோபதி மருந்துகள் சர்க்கரை, மதுவை சாரமாக கொண்டு பக்குவப்படுத்துதல் முறையைக் கொண்டவை. ஆனால் மருந்து என்பது என்பது மருந்துதான். அதை மறந்துவிடாதீர்கள். சிவப்பு வெங்காயத்தில் இருந்து எடுக்கப்படும் தாய் திராவகமே அல்லியம் செபா. பொதுவாக வெங்காயத்தை சளிக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு. பருவகாலங்களில் கடுமையான பூக்களின் நறுமணம் வீசும்போது, மகரந்தம் மூலம் ஒவ்வாமை உருவாகி தும்மல் கடுமையாக தொடரலாம். கூடவே கண், மூக்கில் நீர் வடியும். காய்ச்சலும் கூட லேசாக வரக்கூடும். தும்மல், ...

மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை

படம்
           3 விஷம் = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் முன்னர், நோயாளிகளிடம் நிறைய பேசவேண்டும். சிலர் தங்களின் செயல்பாடுகளைக் கூறுவார்கள். சிலர் கூற மாட்டார்கள்.ஒருவரின் செயல்பாடுகள், குணங்கள் தெரிந்தால் ஓமியோபதியில் மருந்துகளைக் கொடுப்பது எளிது. தொடக்கத்தில் மருத்துவ அட்டவணை உதவியது. இன்று கணினியில் மென்பொருட்களை பயன்படுத்தி மருந்துகளை வழங்குகிறார்கள். நவீன காலத்தில் மருந்துகள் கூடிவிட்டன. ஓமியோபதியை பயிலும் மாணவர்களும், அதை பயிற்சி செய்பவர்களும் கூட தொடர்ச்சியாக பயின்றுகொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை. அதுதான் நோயாளிகளுக்கு நல்லதும் கூட. அரசு மருத்துவமனைகளுக்கு வட இந்தியா, தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஓமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரளத்தில் அரசு கூட்டுறவு ஓமியோபதி நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை தமிழ்நாடு அரசின் டாம்ப்கால் நிறுவனம் வாங்கி வருகிறது. ஓமியோபதி மருந்துகள் எந்தளவு தூய்மையாக உள்ளனவோ, அந்தளவு வீரியம் அதிகமாக இருக்கும். தனியார் மருந்துகடைகளில் ஓமியோபதி ...

ஓமியோபதி மருந்துகளை எப்படி சாப்பிடுவது?

படம்
        ஹோமியோபதியில் நான் சிகிச்சைக்கு சென்றபோது, ஆறே மாதம் நோய் தீர்ந்துவிடும் என மருத்துவர் சூளுரைத்தார். இதை தன்னம்பிக்கை அல்லது அகங்காரம் என எப்படி வகைப்படுத்துவது என தெரியவில்லை. பரவாயில்லை. ஆனால், அவர் சொன்ன காலகட்டம் எல்லாம் எப்போதே தாண்டிவிட்டது. தற்பெருமை கொண்டவர்களிடம் அவர்களின் திறமையின்மை பற்றி சொல்லக்கூடாது. கோபம் கொண்டுவிடுவார்கள். அடிப்படை தத்துவத்திற்கு வருவோம். உங்களுக்கு ஒரு நோய் உள்ளது. அந்த நோயை எந்த காரணி உருவாக்குகிறதோ, அதை நீரைச் சேர்ந்து நீர்த்துப்போன வடிவமாக மாற்றி மருந்துகள் உருவாக்கப்படுகிறது. பிறகு, மருந்தின் வீரியத்தை காக்க சர்க்கரை, ஆல்கஹால் என இரண்டில் பதப்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளிலும் அதன் தூய்மை, வீரியம் சார்ந்து மருந்துகளின் விலை பல்லாயிரம் வரை செல்கிறது. குறிப்பாக தாய் திராவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் மதர் டிங்க்சர் என்று கூறலாம். தாய் திராவகத்தை மருத்துவர் உள்ளுக்கும் சாப்பிடச்சொல்வார். வெளியில் கூட தடவலாம். ஏதாகிலும் அதை மருத்துவரே பரிந்துரைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகள் மூன்று நா...