இடுகைகள்

ராஜதந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள உதவ வழிகாட்டும் அறிவுரைகளின் தொகுப்பு! - ராஜதந்திரம் - நிக்காலோ மாக்கியவெல்லி

    ராஜதந்திரம் நிக்கோலோ மாக்கியவெல்லி தமிழில் துளசி தினமணி நாளிதழ் வெளியீடு தமிழில் வெளிவந்துள்ள ராஜதந்திர நூல். இந்த நூலை எழுதியுள்ள நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலியைச் சேர்ந்தவர். முடியரசில் இயங்கியவர். பின்னாளில் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வறுமையில் உழன்று இறந்துபோனார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல் இதுதான். எழுத்தாளரின் வறுமை, மகிழ்ச்சி, வலி, வேதனை பற்றி தெரிந்துகொள்வது அவர் எழுதிய நூலின் அடிப்படையை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் உதவும். நூற்றி எழுபது பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல், இத்தாலி நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மாக்கியவெல்லி அரசு நிர்வாகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன் அடிப்படையில், இத்தாலி நாடு எப்படி இருந்தால் பிழைக்கும் என்பதை ஊகித்து பல்வேறு நீதிகளை எழுதினார். பிரின்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த நூல் கூட முடியாட்சியில் இருந்த அரசர் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அரசநீதி, ஆராய்ச்சி நூல்கள், கவிதைகள், நாடகங்கள் என பல துறை நூல்களை எழுதியிருக்கிறார். அரசியல் தொடர்பான நூல்களுக்கே மா...