இடுகைகள்

டாக்டர் ராஜசேகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சிமருந்து கண்டுபிடிக்கும் பேராசிரியர் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களை நண்பனுக்காக பலியெடுக்கும் கதை!

படம்
 ஆயுதம் தெலுங்கு ராஜசேகர், குர்லின் சோப்ரா, சங்கீதா பேராசிரியர் சித்தார்த்தன், தனது ஆருயிர் நண்பனைக் கொன்ற மூன்று அதிகார பலம் பெற்றவர்களை நேரம் குறித்து சவால்விட்டு கொல்கிறான். கொல்வதில் எப்போதும் போல பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக சித்தார்த்தனின் நண்பன் இறந்தான் என்பதே ஒரே சுவாரசியம். டாக்டர் ராஜசேகரின் படம். படம் முழுக்க அவரின் ஆதிக்கம்தான். குர்லின் சோப்ராவுக்கு பக்கத்து ஊர் தலைவரின் மகள் வேடம். நடிப்பிற்கு வாய்ப்பில்லை. காட்சிகளில் கவர்ச்சி காட்டி பாடல்களை பார்க்கும்படி செய்கிறார். சொந்த மாமன் மகள் சங்கீதாவுக்கும் இதே வேலைதான். அடிக்கடி திகைப்புக்கு உள்ளாக்கும்படி கவர்ச்சிப் பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வந்தே மாதரம் ஶ்ரீனிவாஸி்ன் இசை கேட்கும்படி இருக்கிறது. படத்தில் சித்தார்த்தன் பாத்திரம், விவசாய மருந்துப்பொருள் கண்டுபிடிப்பாளர். படத்தின் தொடக்க காட்சியில், தொழிலதிபரின் வீட்டில் அவரது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அவர்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காட்ட வேலைக்கார சிறுமியை வல்லுறவு செய்கிறார்கள். அதுவும் மூன்றுபேர். எதற்கு இதுமாதிரியான ...

வன்முறை வழியாக அகிம்சையைத் தேடும் கல்லூரி பேராசிரியர்!

படம்
       மனிதா மனிதா இயக்கம் பி கோபால் டாக்டர் ஆர் ராஜசேகர், நக்மா இசை ஏஆர்ஆர் இரண்டு ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் கல்லூரி பேராசிரியரான நாயகன் இறங்குகிறார். அது சாத்தியமானதா என்பதே கதை. படத்தில் ஒரே நல்ல விஷயம், ரஹ்மானின் இசைதான். வேறெந்த விஷயமும் சரியாக இல்லை. இயக்குநர் பி கோபாலைப் பொறுத்தவரை வணிக வெற்றிப்படங்களை சிரஞ்சீவி, பாலைய்யா ஆகியோருக்கு கொடுத்திருக்கிறார். விமர்சன ரீதியாக பார்த்தால் பெண்களை கவர்ச்சிப்பொருளாக, பாதுகாக்க வேண்டியவர்களாக, பிள்ளை பெறும் எந்திரங்களாக பார்க்கும் பார்வையை உருவாக்குகிற காட்சிகளை வசனங்களைக் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார். கல்லூரியில் பேராசிரியராக உள்ள நாயகனுக்கு, அப்பகுதியில் உள்ள ரவுடியிடமிருந்து சந்திக்க அழைப்பு வருகிறது. அதை மறுக்கிறார். இதனால், கல்லூரியில் அடிதடி தொடங்குகிறது. அந்த ரவுடியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளைக் கொல்ல மற்றொரு ரவுடி முயல்கிறான். அதற்கு நிறைய முன்கதைகள் உள்ளன. இதை அறியாத நாயகன் இருவரையும் சமாதானப்படுத்தி சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த நினைக்கிறான். ஆனால், அ...