இடுகைகள்

அல்லரி நரேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி!

படம்
                பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி! தொங்கலா பண்டி அல்லரி நரேஷ், தன்யா அல்லரி நரேஷின் படங்கள் அனைத்துமே வேடிக்கையான வேறு உலகில் நடப்பவை. சின்ன பட்ஜெட் படம் என்பதால், கதை ஆந்திரப் பிரதேசத்தில்  நடக்கும் பாடல்கள் மட்டுமே வெளிநாடுகளில் காட்சிபடுத்தப்படும். அதேதான் இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார்கள். கதையைப் பார்ப்போம். மூன்று திருட்டு நபர்களின் வாரிசுகள் ஒன்றாக கூடி தங்களது தாத்தா சேகரித்து வைத்த பொக்கிஷங்களை எப்படி கையகப்படுத்துகிறார்கள் என்பதுதான் கதை. பொக்கிஷங்களை தேடிச்செல்லும் கதை என்றால், புனைவாக அழகாக புதிர்களை வைத்து உருவாக்கியிருப்பார்கள் என நினைத்தீர்களா? அப்படியெல்லாம் கிடையாது. அனைத்துமே எளிமையாக நரேஷின் காமெடி டைமிங்கை வைத்து நடந்தேறுகிறது. நாயகன் ஒரு திருடன், அவன், அவனது மாமா, மாமா பிள்ளை என வம்சமே திருடர்கள். இதுபோலவே இன்னொரு பெண்கள் குழு இயங்குகிறது. அதற்கு கோவை சரளா தலைவி. அவரின் இரு தங்கைகளில் ஒருவரே நாயகி. நாயகியை இருமுறை கட்டிப்பிடித்தே காதல் வர வைக்கிறார் நாயகன். காதல் வந்தபிறகு எப்படி புர...

நேசிக்கும் காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க கொடுக்க முன்வரும் காதலன்!

படம்
  சீகா ஃப்ரம் ஶ்ரீகாகுளம்  இயக்குநர் - eshwar அல்லரி நரேஷ், மஞ்சரி, ஷ்ரத்தா தாஸ், வேணு, எம்எஸ் நாராயணா நரேஷ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு உடல் பலம் குறைவு என்றாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அதிகம். அதைப் பயன்படுத்தி கல்லூரியில் பெண் ஒருத்தியை வல்லுறவு செய்பவனை தடுக்கிறான். இப்படியானவன், அங்கு படிக்கும் பேரழகியான பெண்ணை பிளான் செய்து மடக்குகிறான். ஆனால் பிறகுதான் தெரிகிறது. அவளின் அப்பா ஊரிலேயே பெரிய ரௌடி என. உயிரு முக்கியம்ப்பா என முடிவெடுத்து காதலெல்லாம் வேண்டாம். உனக்கு உங்கப்பாவே நல்ல பையனா பார்ப்பாரு கட்டிக்கோ என சொல்லி ஜகா வாங்குகிறான். ஆண் காதலிப்பது பிரச்னையில்லை. அந்த ஆணை பெண் காதலிக்கத் தொடங்கினால்தானே கதை தாறுமாறாக ட்விஸ்ட் ஆகிறது. அதுதான் இங்கும் நடக்கிறது. அந்தப்பெண் கட்டினால் நரேஷைத்தான் காதலிப்பேன் என அடம் பிடிக்கிறாள். இறுதியாக நரேஷ் தனக்கு நிச்சயம் முடிந்து கல்யாணம் ஆகும்வரை ஊரில் வந்து இருந்தால் போதும். தான் அவனை விட்டுவிடுகிறேன் என கூறுகிறாள். அது எப்படியான பொறி என தெரியாமல் நரேஷ் அவளுடைய ஊரான கர்னூலுக்கு செல்கிறான்.  அங்கு என்ன ...