இடுகைகள்

லெனின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோவியத் யூனியனை கட்டமைத்த லெனினின் வாழ்க்கை வரலாறு!

படம்
  லெனின் மருதன்  கிழக்கு பதிப்பகம் ஸ்டாலின் நூலுக்குப் பிறகு லெனின் நூலுக்கு வந்திருக்கிறோம். இந்த நூல் லெனின், எப்படி ரஷ்யா ஜார் அரசை புரிந்துகொள்கிறார் என்பதில் இருந்து தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆசிரியர் வழியாக செய்தி வருகிறது. அவரது அண்ணன் அரசர் ஜாரைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிட்டான். கொல்லப்போகிறார்கள் என. அந்த நாள் தொடங்கி அவரும் சகோதரி ஆன்னா, தாயார் ஆகியோர் படாதபாடுபடுகிறார்கள். லெனின், தனது அண்ணன் வழியாக கற்ற வி்ஷயங்களை அசைபோட்டுப் பார்க்கிறார். இந்த வகையில் நூல் சுவாரசியமாகவே உள்ளது.  நூலில், லெனினின் நூல் வாசிப்பு ஆர்வம், பிரசாரம், நாளிதழ் வெளியீடு - இஸ்க்ரா, பிராவ்தா, போராட்டம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தெளிவாக கூறப்படுகிறது. சில இடங்களில் ஸ்டாலின் நூலில் வந்துள்ள பகுதிகளை அப்படியே எடுத்து வைத்துள்ளார்களோ என்று கூட தோன்றுகிறது. சம்பவங்கள் ஒன்றாக இருந்தாலும் அதுபற்றிய தோற்றத்தை கோணத்தை சற்றே வேறுபடுத்தி எழுதியிருக்கலாம்.  லெனின் சட்டப்படிப்பு படித்தவர். தன் வாழ்க்கை முழுவதும் அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவர். ஸ்வ...

ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

படம்
  சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...