இடுகைகள்

தனியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன....

பசுமைப்பாதையில் பயணிக்கத் தொடங்கும் இந்திய ரயில்வே!

படம்
  பசுமைமயமாகும் ரயில்துறை! இந்திய ரயில்வே, 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.  இந்திய ரயில்களில் தினசரி பல லட்சம் மக்கள் குறைந்த கட்டணத்தில் நாடெங்கும் பயணித்து வருகின்றனர். 13 ஆயிரம் ரயில்கள் 67 ஆயிரத்து 956 கி.மீ தொலைவுக்கு சென்று பல்வேறு தொலைதூர நகரங்களை இணைக்கின்றன. இப்படி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சற்றே குறைவானதுதான். பொதுப்போக்குவரத்திற்காக 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 115.45 லட்சம் கிலோ லிட்டர் அதிவேக டீசலை ரயில்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  2019/20 காலகட்டத்தில் டீசல் ரயிலில் 43 சதவீத பயணிகளும், மின்சார ரயிலில் 57 சதவீத பயணிகளும் பயணித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை டீசல் ரயிலில் பயணிக்கும் மக்களின் சதவீதம் 43.5லிருந்து 35.3 சதவீதமாக குறைந்துள்ளது. ‘’’எதிர்வரும் 2030ஆம் ஆணடு ம...

மாடர்ன் பிரெட்டின் கதை! - இந்தியா, சிங்கப்பூர், மெக்சிகோ என மூன்று நாடுகளை சுற்றி வந்த பிரெட்!

படம்
  இந்திய பிரெட்டின் கதை மாடர்ன் பிரெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட அதனை ஒருமுறையாவது சாப்பிட்டிருப்பார்கள். அந்தளவு ஏராளமான வெரைட்டிகளில் பிரெட்டையும், பன்களையும் விற்றுவருகிற தனியார் நிறுவனம் அது. 1965ஆம் ஆண்டு மத்திய அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. பின்னாளில் இங்கிலாந்தைச் சேர்ந்த யூனிலீவர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம் என்ற சர்ச்சை இன்றுவரை தீரவில்லை. மத்திய அரசு தொடங்கி நடத்திய உணவு நிறுவனம், லாபகரமாக இயங்கியது பலருக்கும் ஆச்சரியம்தான். இதனை 2000ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு சுருக்கமாக பாஜக அரசு முதலீடுகளைக் குறைத்துக்கொண்டு தனியார் நிறுவனமான ஹெச்யூஎல்லுக்கு விற்றது. இந்த நிறுவனம், மாடர்ன் பிரெட்டை விரிவாக்கி ஏராளமான புதிய  வெரைட்டிகளை கொண்டு வந்தது. பிறகு, 2016இல் சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான எவர்ஸ்டோன் குளோபலுக்கு விற்றது.  தற்போது இந்த நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பிரெட் தயாரிப்பு நிறுவனமான குருப்போ பிம்போவுக்கு மாடர்ன் நிறுவனத்தை விற்றுவிட்டது. என்ன விலை என்பது தெரியவ...

தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!

படம்
  தற்போது,  இந்திய அரசின் நிர்வாகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட  பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்களிடம் விற்கப்படலாம் அல்லது மூடப்படலாம் எனும் நிலையிலுள்ளன. மத்திய அரசு, நிதி ஆயோக் அமைப்பின்  அறிக்கைப்படி பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைக்கவிருக்கிறது. மொத்தமாக மூன்று அல்லது நான்கு பொது நிறுவனங்களை மட்டுமே அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவிருக்கிறது.  அரசிடமுள்ள பொது ஆதார நிறுவனங்களாக எரிபொருள் (பெட்ரோல், நிலக்கரி), மின்சாரம், விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி, கனிமம் ஆகியவற்றைக் கூறலாம். இத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு தன்னுடைய முதலீட்டை விலக்கிக் கொள்ளவிருக்கிறது. மேலும் இந்நிறுவனங்களை தனியாருக்கு விற்க  திட்டமிட்டுள்ளது. இப்படி விற்பதன் மூலம் தனியார் துறையினரின்  வழியாக அந்நிய முதலீடும் இந்தியாவுக்கு கிடைக்கும்.  பொது நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பதன் மூலம் அரசுக்கு அதிகளவு வருமானம்...

தனியார் வழங்கும் கல்வி உதவுமா?

படம்
  தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில்  அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.   அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள்  நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.   ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் ச...

நாங்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்! - நரேந்திரசிங் தோமர்

படம்
            நரேந்திரசிங் தோமர் விவசாயத்துறை அமைச்சர் பஞ்சாப் விவசாயிகள் குறைந்தபட்ச விலை கொள்முதல் வாக்குறுதியை வலியுறுத்தி வருகிறார்களே ? விவசாயிகள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை . குறைந்தபட்ச கொள்முதல் விலை திட்டம் அப்படியே தொடரும் . இதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி தர தயாராக உள்ளோம் . இதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை . அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை எப்படி அறிவிக்கப்போகிறது ? இன்றுவரை எங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை . அரசு அதனை நிர்வாகரீதியான முடிவாக அறிவிக்கும் . நீங்கள் இப்படி சொன்னாலும் கூட விவசாய சங்கங்களுக்கு உங்கள் அமைச்சரவை ஒரு கடிதத்தைக் கூட அனுப்பவில்லையே ? அப்புறம் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்பீர்கள் ? நாங்கள் இப்போதே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடிதான் இருக்கிறோம் . அவர்களின் பல்வேறு கோரிக்கை அம்சங்களை பரிசீலித்து வருகிறோம் . இதில் எங்களுக்கு தெளிவு கிடைத்தால் அவர்களின் மாற்றங்களை சட்டத்தில் புகுத்தி மாற்றி அவர்களைப் பார்க்க அ...

கர்நாடகத்தை உயர்த்தும் சிறப்பு கல்விப் பயிற்சி!

படம்
கல்விப் பயிற்சி ஆசிரியர்கள் கல்விச்சாதனைக்கு உதவும் தனியார் நிறுவனங்கள்! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கல்விப் பயிற்சியை தனியாரும், அரசு நிறுவனங்களும் இணைந்து வழங்கி தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் கனவுகளைத் தேர்ந்தெடுக்க அனைத்து வகுப்புகளிலும் கவனமாகப் படித்து தேர்ச்சி பெறுவது மிக முக்கியம்.  துறைசார்ந்த பொதுத்தேர்வுகளில் பங்கேற்றவும் இத்தகுதி அவசியம். கர்நாடகாவிலுள்ள தேவனஹலி, நெலமனகலா நகரங்களில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளனர். பள்ளிகளில் நடுப்பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைத்தான் எஸ்எல்எல்சி மாணவர்கள் பெற்றனர். ஆனால் ஆண்டு இறுதித்தேர்வில் மேற்சொன்ன இருநகரங்களும் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன.  எப்படி?  குறைந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு பெங்களூரு சர்வதேச விமானநிலை நிறுவனம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சமூகநலத் திட்டத்தின்படி கொடுத்த கல்விப்பயிற்சிதான் இதற்கு காரணம். இப்படி 1,983 மாணவர்களுக...