இடுகைகள்

ஊபா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊபா ஒடுக்குமுறை சட்டத்திற்கு அடுத்த பலி - சாய்பாபா

படம்
    ஊபா ஒடுக்குமுறை சட்டத்திற்கு அடுத்த பலி - சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவரான சாய்பாபா, மாற்றுத்திறனாளி. சக்கர நாற்காலி மூலமே நடமாடி வந்தார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவருக்கு மனைவி, மகள் உண்டு. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தார். மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ஆதரவான கூட்டங்களில் பங்கேற்றார். மனித உரிமைகளை பேசி வந்தவர், ஒன்றிய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கினார். எனவே, சாய்பாபாவை முடக்க ஒன்றிய அரசு போலியான வழக்கு ஒன்றை தொடுத்தது. பல்கலைக்கழக மாணவரை கைது செய்து அவருடைய தகவலின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுக்கும் அவருக்கும் இடையே கடிதங்களை பரிமாற மாணவர் உதவினார் என்பதே குற்றச்சாட்டு. பேராசிரியரோடு கூடவே ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவானது. 2014ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை சாய்பாபா நீதிமன்றம், சிறை என அலைந்தார். ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும் அனுபவித்தார். பிறகு உச்சநீதிமன்றம் மூலம் விடுதலையானார். ஆனால் உடல் முற்றாக சிதைந்துபோயிருந்தது. ஆறு மாதங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிவந்த நிலையில் மரணத்தை த...

ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்!

படம்
      ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்! ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிற, தலித், ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கு பாடுபடுகிற போராளிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது பயங்கரவாத சட்டமான ஊபா. இச்சட்டத்தைப் பற்றி இடதுசாரி கட்சிகள் அளவுக்கு, அதிகம் பேசியவர்கள் யாரும் கிடையாது. அவர்களின் நாளிதழ், ஊடகங்கள் அனைத்திலும் ஊபா சட்டம் பற்றிய செய்திகள் இன்று வரைக்கும் வெளியாகி வருகின்றன. ஊபா என்பது சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். எப்போதும்போல, அரசியல் கட்சிகள் இதை தம் சொந்த சுயநலனுக்கு பயன்படுத்திக்கொண்டு மனித உரிமை போராளிகளை, திட்டங்களை கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைக்க பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் இந்த வழக்குகளில் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கித்தருவதற்கு அரசு புலனாய்வு அமைப்புகள் விரும்புவதில்லை. இதனால் வழக்குகளில் இருந்து வெளியே வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசுகள், ஒருவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தவே இதுபோன்ற அ...

வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்

படம்
      வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம் அரச நீதி என்பது தனது அதிகாரத்தை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ள முயல்வது. நீதி,நிர்வாகம் தாண்டி சுயதோல்விகளைப் பற்றி விமர்சிக்கும் எவரையும் சர்வாதிகாரி விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் அரசும் தனது காலத்தில் போராட்டக்காரர்களை தேசதுரோக சட்டத்தின்படி தண்டித்தது. தலைவர்கள் பலரை சிறையிலிட்டது. நேதாஜி வழியில் சென்றவர்களை தூக்கிலிட்டது. இப்படி நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அதற்கென உருவாக்கி வைத்த சட்டங்களின்படிதான் நடந்தன. அதே சம்பவங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஜனநாயகத்தின்படி கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்க கூலிப்படை தொடங்கி அரசின் புலனாய்வு அமைப்புகள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அரச பயங்கரவாதத்தைப் முறைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று ஊபா. எழுத்தாளர் அருந்ததி ராய், அவரது நாவல் எழுத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர். அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்துமே பல லட்சம் பேரால் வாசிக்கப்படுபவை. கேட்கப்படுபவை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர...