இடுகைகள்

என்கவுன்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!

படம்
  எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி! மகான்காளி ராஜசேகர், மாதுரிமா இயக்கம் கார்த்திகேயன் இசை சின்னா என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார். மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார். படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் ...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...

உண்மையைப் பேசினால் உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் -ஜூவாலா கட்டா

படம்
ஜூவாலா கட்டா, பாட்மின்டன் விளையாட்டு வீரர். காமன்வெல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர். தெலங்கானாவில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டார் என்று போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்களின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க மக்கள், ஊடகங்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்விளைவாக அவர்கள் தப்பித்துச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை போலீசார் அடுத்த நாள் ஊடகங்களிடம் கொடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் ஆதரித்தாலும், மனித உரிமைக்கு எதிரானது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த என்கவுன்டர் அழித்துவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஜூவாலா கட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை. என்ன காரணம்? இந்தியாவில் கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். என்னைப் பாருங்கள். எனக்கு தவறு என்று தோன்றும் விஷயங்களில் நான் தைரியமாக பேசுவேன்....