பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?
பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா? பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்...