இடுகைகள்

இயல்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?

 பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா? பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்...

மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது

படம்
              அகிம்சை வழி மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது பொதுவாக நாம் அனைவரும் வணிக திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். அதில் படம் முடியும் இறுதியில் நாயகர்கள், சிலரை அடித்து உதைக்கிறார்கள். அல்லது கொன்றுவிடுகிறார்கள். அடித்து உதைக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் மோசமானவர்கள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என திரைப்படம் சித்திரிக்கிறது. பெரும்பாலான படங்களில் இதுவேதான் இறுதிக்காட்சியாக இருந்த காலமுண்டு. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், நாயகர்கள் செய்யும் வன்முறையை, கொலையை நன்மைக்காகத்தான், நன்மையைக் காக்க இப்படித்தான் செய்தாக வேண்டும் என ஒருவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இப்படியான மனநிலை சமூகத்தில் வன்முறையை இயல்பான ஒன்றாக கருத வைக்கிறது. பேச்சாக, உளவியல் ரீதியாக, குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இனக்குழுக்கள் இடையே, நாடுகள் இடையே மாறுபட்ட கருத்துகள், செயல்கள் வழியாக வன்முறை உருவாகிறது. வன்முறையை பாராட்டி ஏற்றுக்கொண்ட சமூகத்தில் முரண்பாடுகள் வழியாக எளிதாக வன்முறை உருவாகி வளர்கிறது. இதில் பயம்,...

ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள தனித்த குண இயல்புகள்!

படம்
  மக்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு முன்னகர்த்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். உளவியலோ, அவர்களின் கடந்தகாலத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று கூறியவர் உளவியலாளர் கார்டன் ஆல்போர்ட். இவரை ஆளுமை உளவியலின் தந்தை என புகழ்ந்து பேசுகிறார்கள். மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆய்வுகளை செய்தவர்கள் என ஹிப்போகிரேடஸ், காலென் ஆகியோரைக் கூறலாம். அதற்குப் பிறகு இதுதொடர்பான அதிகளவு ஆய்வுகள் நடைபெறவில்லை. ஒருவரின் சுயமான அடையாளம், தன்முனைப்பு பற்றி மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன.  இருபதாம் நூற்றாண்டில் உளவியல் பகுப்பாய்வு, குணவியல் இயல்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து வந்தனர். இதில் மனிதர்களின் ஆளுமைகளைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன இரண்டு ஆய்வு விஷயங்களைப் பற்றியும் கார்டன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். உளவியல் பகுப்பாய்வு, கடந்தகாலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குணவியல் ஆய்வுகளில் மனிதர்களின் தனித்துவத்திற்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றார். அவர் மனித ஆளுமைகளைப் பற்றி என்ன யோசித்தார் என்று பார்ப்போம்.  மனித ஆளுமை என்பது மூன்று வகையாக உருவா...

இருத்தலியல் உளவியலின் தந்தை ரோலோ மே!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்ட்டின் ஹெய்டெகர், ஃபிரடெரிக் நீட்சே, சோரன் கியர்கெகார்ட் ஆகியோர் அன்றை சமூக நிலைக்கு எதிராக புதிய கருத்துகளை கூறினர். இதன் வழியாக மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வழி கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியது. இதை இருத்தலியம் என்று கூறலாம். தன்னம்பிக்கை, தனிப்பட்ட பொறுப்பு, அனுபவங்களை எப்படி புரிந்துகொள்வது, வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்வி ஆகியவை இருத்தலிய கொள்கையில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன. 1950ஆம் ஆண்டு, உளவியலாளர் ரோலோ மே  தி மீனிங் ஆஃப் ஆன்க்சைட்டி என்ற நூலை எழுதினார். அதில், மனிதர்களை மையப்படுத்திய உளவியல் முறையை விளக்கியிருந்தார். இதன் காரணமாக ரோலோ மே இருத்தலியல் உளவியலின் தந்தை என பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.  வாழ்க்கை என்பது முழுக்க அனுபவங்களால் நிறைந்தது. அதில் வலி, வேதனை என்பது கூட இயல்பான அனுபவங்களின் பகுதிதான். பல்வேறு அனுபவங்களை தேடுவதன் வழியாக ஒருவர். தன்னை சமநிலையுடன் வைத்துக்கொள்ள முடியும். பழக்கமான சூழலில், இலகுமான அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் உடல், மனம் என இரண்டையும் ஒருவர் சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். ...

90 நொடியில் மண்ணில் இயல்பை அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத்...

நிலப்பரப்பு சார்ந்த இயல்புகளைக் கண்டறிந்த ஆய்வாளர்! - ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன்

படம்
ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன் (Frank Marian Anderson 1863-1945) ஃபிராங்க், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஏழாவது பிள்ளை. பெற்றோர், சிறுவயதில் காலமாகிவிட மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். தான் வாழ்ந்த ரோக் ரிவர் வேலி பகுதியில் உள்ள கனிமங்கள், படிமங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1889ஆம் ஆண்டு ஒரேகானின் சேலத்தில் இருந்த வில்லமெட்டெ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பள்ளியில் ஆசிரியராகி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருந்தபோதுதான் பேராசிரியர் தாமஸ் காண்டன் அறிமுகம் கிடைத்தது. போர்ட்லேண்டில் நடைபெற்ற டேவிட் ஸ்டார் ஜோர்டான் என்பவரின் உரையைக் கேட்டபிறகு, புவியியல் துறையை தொழிலாக ஏற்றார் ஃபிராங்க்.  அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஜே.எஸ். டில்லரின் உதவியாளராக பணியாற்றினார். 1897இல் எம்.எஸ். பட்டத்தைப் பெற்றவர்,  கலிஃபோர்னியா மாகாண சுரங்க அமைப்பில் களப்பணி உதவியாளராக பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு, கிரிடாசியஸ் டெபாசிட்ஸ் ஆஃப் நார்த்தர்ன் ஆண்டிஸ் (Cretaceous deposits of northern andes) என்ற ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றார். துலேர் (...

போன்சாய் மரங்களின் இயல்பு, வாசனை உணர்த்துவது என்ன? - வினோத ரச மஞ்சரி

படம்
போன்சாய் மரங்கள், சிறு தொட்டியில் வளர்க்கும்படியானவை. இவற்றை சாதாரணமாக வளர்த்தால் பெரிய மரமாகும் வாய்ப்புண்டு. ஆனால் அதன் வளர்ச்சியை சிறு தொட்டியில் கட்டுப்படுத்துகின்றனர். போன்சாயின் வேர்கள், தொட்டிக்குள் குறிப்பிட்ட அளவு வளர்கின்றன. அவற்றின் தண்டு, கிளை ஆகியவையும் பெரிய மரங்களைப் போன்ற தன்மையில் மினியேச்சர் வடிவில் உள்ளன.  வாசனைகளை முகர்ந்ததும் அது இனிமையானதா, ஆபத்தானதா என்று நாம் யோசிப்பது நமக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களை வைத்துத்தான். சமையல் எரிவாயு கசியும்போது, நாம் முகரும் வாசனை மோசமானது அல்ல. ஆனால் அதை ஆபத்தானது என உடனே உணர்கிறோம்.  நாம் முகரும் வாசனை மிகவும் திடமாக இருந்தால், அதனை ஆபத்தோடு இணைத்து பார்த்து எச்சரிக்கையாவது மனித இயல்பு.  எறும்புகளுக்கு நுரையீரல் இல்லை. எறும்புகள் மட்டுமல்ல பல்வேறு பூச்சிகளும் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இதன் பெயர், ஸ்பைராகில்ஸ் (spiracles).  மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும்போது, நமக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முன்னதாக பார்வை மங்குவது, குமட்டல், வியர்ப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மன அழு...