இடுகைகள்

பிரசாத் பெஹ்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியை முன்னாள் காதலனுக்கு விட்டுத்தர முயலும் கணவன்!

படம்
              தில் பசந்த் வெப் சீரிஸ் இன்ஃபினிட்டம் இயக்கம் பிரசாத் பெஹ்ரா நடிப்பு பிரசாத் பெஹ்ரா, எப்சிபா எப்சிபா, ஒரு இளைஞனைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுக்கோ வேலை இல்லை. வேலை தேடிக்கொண்டு வந்தால், என் அப்பாவிடம் பேசலாம் என்று கூறுகிறாள். ஆனால் எதிர்பார்த்தது போல வேலை கிடைக்கவில்லை. அதேசமயம், எப்சிபாவுக்கு, சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஒருவரோடு மணமாகிறது. எப்சிபாவுக்கு அதில் விருப்பமில்லை. இருந்தாலும் அவளது அப்பாவுக்கு வேலை இல்லாத காதலனுக்கு மணம் செய்து தர விருப்பமில்லை. இப்படியான சூழ்நிலையில், அப்பாவியான அரசு ஊழியன் வாழ்க்கை என்னவானது, எப்சிபாவின் காதல் திருமணத்திற்குப் பிறகு என்னவானது என்பதை தொடர் விவரிக்கிறது யூட்யூபில் ஒருமணிநேரமாக தொடர் மாற்றப்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிடலாம். பிரசாத், அப்பாவியான அரசு ஊழியராக நடித்துள்ளார். சாதிப்பற்று கொண்ட அதேநேரம் அவரது வேலையில் நியாயமான ஆள். ஆபீசுக்கு வேலையாக வருபவர்களிடம் கூட பெண் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் அளவுக்கு, திருமணத்திற்கு துடிப்பவர். அப்படி இருப்பவருக்கு எப்சிபா மணமுடித்து வைக...

இரண்டு முறை திருமணம் நின்றுபோக.. பிரசாத் கல்யாணத்தில் கரை சேர்ந்தாரா இல்லையா?

படம்
          பெல்லி வரமண்டி இயக்கம் பிரசாத் பெஹ்ரா நடிப்பு பிரசாத் பெஹ்ரா, விராஜிதா இன்ஃபினிட்டம் மீடியா பிரசாத்திற்கு திருமணம் உறுதியாகிறது. ஆனால் திருமணத்தன்று மண்டபத்தில் இருந்து ஒருமுறை அல்ல இருமுறை பெண்கள் ஓடிப்போய்விடுகிறார்கள். இதனால் திருமணத்தின் மேல் வெறுப்போடு இருக்கிறார். அதேநேரம் அவரது காதலி கஞ்சன் என்பவர், தனது நண்பரை மணம் செய்துகொள்வதைக் கேட்டு பொறாமைப்படுகிறார். கஞ்சனை திரும்பவும் காதலிக்க முயல்கிறார். பிரசாத்திறகு மணமானதா இல்லையா என்பதே வெப்சீரிஸின் கதை. யூட்யூபில் வெளியாகும் தெலுங்கு வெப்சீரிஸூக்கு பெரிதாக பட்ஜெட் கிடையாது. அலுவலகம், வீடு என இரண்டே இடங்களில்தான் படம்பிடிக்கிறார்கள். இதற்கு முன்னர் சிவாஜி ராஜா, விராஜிதா நடித்த வெப் சீரிஸைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறோம். வெப்சீரிஸில் சிவாஜி ராஜா தனியாக போராடி காமெடி செய்திருப்பார். தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அவருக்கு துணையாக அல்லது எதிராக கவுன்டர் கொடுக்க யாருமே இல்லாத நிலையில் சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. பிரசாத் பெஹ்ராவின் எழுத்து இயக்கத்தில் பெல்லி வரமண்டி வேறு விதமாக அனுபவத்...