இடுகைகள்

மாட்டிறைச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?

படம்
 சைவர்களின் பெருமையும், ஆணவமும்! சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள். சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, ம...

விரில் என்ற அற்புத சக்தியூட்டும் ஆதாரம்- மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
                அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி விரில் என்றால் என்ன? எழுத்தாளர் எட்வர்ட் புல்வர் லைட்டன் என்பவர் எழுதிய நாவலில் இடம்பெற்ற மர்ம ஆற்றல் ஆதாரத்தின் பெயர்தான் விரில். தி கமிங் ரேஸ் என்ற நாவலில் சூழலில் உள்ள மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி வலிமையான ஆயுதம் ஒன்றை தயாரிக்க நினைப்பார்கள். அப்படியான மர்ம ஆற்றல் ஆதாரமே விரில். இப்படி எழுதிய எழுத்தின் பின்னால் எந்த அறிவியலும் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் கற்பனையை வைத்து நிறைய வேதிப்பொருட்களை இஷ்டப்படி கலந்து தயாரித்து சந்தையில் விற்றார்கள். அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தின. இப்போதைக்கு சந்தையில் போவ்ரில் என்ற பொருள் சந்தையில் கிடைக்கிறது. இறைச்சியிலிருந்து பெறப்படும் பொருள் இது. 1870ஆம் ஆண்டு தொடங்கி போவ்ரில் விற்பனையாகி வருகிறது. தொடக்க காலத்தில் இதன் பெயர் ஜான்ஸ்டன் ஃப்ளூய்ட் பீஃப். குழம்பில் வாசனைக்காக சேர்த்தனர். வெந்நீரைக் கலந்து சூடான பானமாக குடித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு பயன்பாடு கொண்ட இறைச்சி உணவு போவ்ரில். வார்டென் கிளிப் என்றால் என்ன? நிக்கோலா டெஸ்லா, வார்டென் கிளிப் என்ற இ...

சிவப்பு இறைச்சியில் கசியும் திரவம், கிராமபோன் கண்டுபிடிப்பாளர், ராட்சஷ சிலந்தி - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
        மாட்டிறைச்சியில் இருந்து வெளியாகும் சிவப்பு நிற திரவத்தின் பெயர் என்ன? மாட்டிறைச்சியை வெட்டி வைத்த பிறகு அதிலிருந்து மெல்லிய சிவப்பு நிறத்தில் திரவம் ஒன்று கசியும். அது ரத்தமோ என பலரும் பதற்றமடைகிறார்கள். அது ரத்தமல்ல. அதன் பெயர் மையோகுளோபின். இது நீரில் கரையக்கூடியது. இந்த வேதி திரவம், உடலில் உள்ள ஆக்சிஜனை தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும் வேலையை செய்கிறது. ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு, நான்கு ஆக்சிஜன் மூலக்கூறுகளை கவர்ந்திழுத்து சேமித்துக்கொள்கிறது. ஆனால் மையோகுளோபின் மூலக்கூறு, ஒற்றை ஆக்சிஜன் மூலக்கூறை மட்டுமே சேமிக்கிறது. இரண்டின் பணிகளைப் பார்ப்போம். ஹீமோகுளோபின், உடல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. ஆனால், மையோகுளோபின் தற்காலிகமாக ஆக்சிஜனை சேகரித்து வைத்துக்கொள்கிறது. கடலில் உள்ள உயிரினங்களான திமிங்கலம், சீல் ஆகியவற்றின் உடலில் மையோகுளோபின் அதிகளவில் காணப்படுகிறது. இவை. மூச்சு விடுவதற்காக சிலமுறை மட்டுமே நீரின் மேற்பரப்பிற்கு வரும். மற்ற நேரங்களில் மையோகுளோபின் சேகரிப்பு உதவுகிறது. பிட்ஸ் சிவப்பு இறைச்சியை ஒருவர் சமைக்கும்போது, அதன் சிவப்பு நிறம் ...

அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு!

படம்
                அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு! உலகில் சைவம், அசைவம் என்பதெல்லாம் வியாபாரத்திற்கு உண்டான சமாச்சாரங்கள். உணவைச் சாப்பிடும் மக்கள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது கிடையாது. பசிக்கு சாப்பிடும் உணவு கூட இன்று அரசியல்மயமாகி சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படும் அளவில் உள்ளது. உண்மையில் இந்தியாவில் சைவம் சாப்பிடும் பழக்கம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இங்கு தீவிர சைவம் என்றால் பருப்பு, காய்கறிகள், பழங்கள் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டுவிடுகிறோம். சிலர் சைவத்தில் பால், முட்டை இன்னும் பல பொருட்களை சேர்த்து அதற்காக விவாதம் செய்யவும் முயல்கிறார்கள். தீவிர சைவத்தில் பாலை சேர்க்க முடியாது. பால், விலங்கிடமிருந்து பெறும் பொருள். எனவே, அதை தீவிர சைவ பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தமுடியாது. ஆனால், அனுபவ அடிப்படையில் ஒருவர் பாலை தனது உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார். அண்மையில் இந்திய மாநிலங்களில் கிராம...

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ...

பசுவைக் காக்க படாதபாடு படும் இந்தியா அரசு! - அமலுக்கு வரும் அவசியமான விதிகள்!

படம்
      cc     கால்நடைகள் விரைவில் முறைப்படுத்தப்படவிருக்கின்றன. வாயில்லாத ஆனால் பாலை பாக்கெட் நிறைய கொடுக்கும் ஜீவன்களை காப்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம். கால்நடைகளைப் பற்றிய சிறிய டேட்டா இதோ! 13.6 கோடி கால்நடைகள் இந்தியாவில் உள்ளன. இதில் 2.4 லட்சம் கால்நடைகள் தலைநகர் டில்லியில் வாழ்கின்றன. பசுக்கள் தினசரி தலா 15-30 கிலோ அளவில் சாணியையும் சிறுநீரையும் வெளித்தள்ளுகின்றன. இவை பெரும்பாலும் குப்பையில் வீசப்படுகின்றன. இல்லையெனில் பாவம் தீர்க்கும் கங்கையின் பாகமாக இவையும் மாறுகின்றன. இக்கழிவிலிருந்து அம்மோனியா, சல்பைடு, ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் வெளியாகின்றன. புதிய விதிகள் பசுவின் சாணி, சிறுநீரை சாக்கடையில் அள்ளி வீசக்கூடாது. நகராட்சி மாநகராட்சி இதற்கென தனி இடங்களை உருவாக்கி அதில் அவற்றை கொட்டுவார்கள். இதிலிருந்து வறட்டி, எரிவாயு தயாரிக்கும் புதிய ஐடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கால்நடைக்கு 150 லிட்டர் நீர் மட்டுமே என ரேஷனில் அரிசி நிறுப்பது போல அளவிட்டு வழங்கப்படும். கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். கோசாலைகள் குட...

எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? டேட்டா கார்னர்

படம்
  cc உணவு இனி எதிர்காலத்தில் நமக்கு பிடித்த உணவு என்று ஒன்றை சாப்பிட முடியாது என்றே கிடைக்கும் செய்திகள் நினைக்க வைக்கின்றன. பொதுவாக நமக்கு பிடித்த காய்கறிகளை சாப்பிடுகிறோம். இறைச்சி பிடித்திருக்கிறவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். ஆனால் இனி கார்பன் வெளியீடு குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடச்சொல்லி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலாம். அதனை அரசு விதிகளாக கூட மாற்றலாம். குறிப்பிட்ட விளைபொருட்களை விளைவிக்க கார்பன் வெளியீடு அதிகரிக்கிறதா என்று பார்த்து அதனை ஸ்டிக்கராக ஒட்டிக்கூட பொருட்களை விற்பார்கள். உணவகங்களில் கார்பன் வெளியீடு அதிகம் கொண்ட இறைச்சி உள்ளிட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். பிரான்சில் நடந்த யெல்லோ வெஸ்ட் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களுக்கு கார்பன் வரியை இம்மானுவேல் மாக்ரான் விதித்தார். நாடே போராட்டங்களால் தடுமாறிவிட்டது. அதுபோன்ற சமாச்சாரங்கள் உணவு விஷயங்களில் நடைபெறலாம். குறிப்பிட்ட பெருநிறுவனங்களின் கைகளில் விவசாய நிலங்கள் செல்லும்போது, அவர்கள் இதனை சாத்தியப்படுத்துவார்கள். அதாவது, மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்யும...

உருளைக்கிழங்கே உணவு- பொருளாதார தாக்குதலில் ஈரான்!

படம்
pixabay ஈரானில் உணவு பரிதாபம்! வளமான, போர்களைச் சந்திக்காத நாடுகளில் உருளைக்கிழங்கு என்பதற்கு பொருள், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல் மட்டுமே. ஆனால் வறுமை, சர்வாதிகாரம், பொருளாதாரத் தடை ஆகியவற்றைச் சந்திக்கும் நாடுகளுக்கு உருளைக்கிழங்குதான் உணவாதாரமே. எனவேதான் உடல்பருமனுக்கு உருளைக்கிழங்கு பெருமளவு இகழப்பட்டாலும், அதன் உற்பத்தியை குறைப்பதில்லை. காரணம், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஈரான் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக வெளிநாடுகளில் வாங்கி வந்த சோளம், அரிசி, பார்லி ஆகியவை அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அங்கு மக்களுக்கு உணவாதாரத்திற்கு உருளைக்கிழங்குதான் ஒரே வழி. 2009 ஆம் ஆண்டு பிரதமரான ஈரான் அதிபர் மஹ்மூத் ஆமடினேஜாட் ஆட்சியில் மக்கள் கடும் பிரச்னைகளைச் சந்தித்தனர். இதன் விளைவாக, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டும்படி, நமக்கு உருளைக்கிழங்கு வேண்டாம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அலறினர். ஏறத்தாழ உருளைக்கிழங்கு என்பதே அங்கு மறைந்து வந்த நேரத்தில் மீண்டும் அதனை மக்கள் நாட வேண்டிய சூழ...