இடுகைகள்

மேகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெப்ப அலை என்றால் என்ன?

படம்
        அறி்வியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெப்ப அலை என்றால் என்ன? 1935-1975 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதலில், பதினைந்தாயிரம் அமெரிக்கர்கள் இறந்துபோனார்கள். எண்பதுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரத்து ஐந்நூறு பேர் இறந்துபோனார்கள். சூரிய வெப்பம் நாற்பது அல்லது நாற்பது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்வதே வெப்ப அலை ஏற்படுவதற்கு காரணம். காற்றோட்டமான இடத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் அதிக மரணங்கள் ஏற்படாது. அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் முதியோரே வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெப்பஅலை பாதிப்பை அரசு அறிவித்துவிட்டால், மக்கள் வெளியில் செல்லும்போது தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்பநிலை தொகுப்புபட்டியல் என்றால் என்ன? சூரிய வெப்பம் அதிகரிக்கும்போது, காற்றின் வெப்பநிலை மாறும். வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸ் என அதிகரிக்கும்போது, மனிதர்களுக்கு நீர்ச்சுருக்கம், வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவது ஆகிய சிக்கல்கள் ஏற்படும். இதைக் கணிக்க பயன்படுவதே வெப்பநிலை தொகுப்புபட்டியல். 1816 என்ற ஆண்டை கோடைக்...

புகையிலையை மேம்படுத்த உதவும் யூரியா? உண்மையா? உடான்ஸா?

படம்
  புகையிலைப் பொருட்களை மேம்படுத்த யூரியா உதவுகிறது! உண்மை. புகையிலையில் மனிதர்களின் சிறுநீரில் காணப்படும் யூரியா மூலக்கூறு, உரமாகப் பயன்படும் டைஅம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு, சாக்லெட் ஆகியவை உள்ளன.  இதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் புரோக்டர் ஆய்வில் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பும் (CDC) புகையிலையில் யூரியா பயன்படுவதை கண்டறிந்துள்ளது.  2050இல் இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதி ஜகார்த்தா நகரம் நீரில் மூழ்கும்! யூக உண்மை. வெப்பமயமாதல், சூழல் மாறுபாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படி அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்தக் கூற்று நடக்கலாம். நடைபெறாமலும் போகலாம். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் ஜகார்த்தா நகரம் உறுதியாக நீருக்கடியில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது.  2019ஆம் ஆண்டு வெளியான வயர் வலைத்தள கட்டுரையில், ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு பத்து அங்குலம் நீரில் முழ்கி வருவதாக எழுதப்பட்டிருந்தது.  வாழைப்பழத்தில் 500 வகைகள் உண்டு! உண்மை. நகரத்தில் பெரும்பாலும் விற்பவர்களுக்கு ம...

மிஸ்டர் ரோனி - நான்கு கேள்விகள் - அதிரடி பதில்கள்!

படம்
pixabay மிஸ்டர் ரோனி - பேக் டூ பேக் கேள்விகள் -பதில்கள் புதிய உயிரினங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்? வகைப்படுத்துவது என்பது மிகப்பெரிய நீண்ட பணி. முதலில் ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறியும் உயிரினத்தின் மரபணுவையும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய வேண்டும். இதுபற்றிய செய்திகளை நன்றாக படித்துவிட்டு மரபணு ரீதியாகவும், பிற உயிரினங்களுடன் உள்ள தொடர்பையும் அறிந்துகொண்டு அப்போதும் அது புது உயிரி என்றால் அறிவியல் இதழ்களுக்கு அறிக்கையாக எழுதி அனுப்பலாம். அப்போதும் அது புதிய உயிரினம் என்பதற்கு உறுதி கிடையாது. பத்திரிகையில் வெளியான பிறகுதான் அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிப்பார்கள். பின்னர், அதற்கான ஆதாரங்களோடு நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் அந்த உயிரினம் புதிது என கருதப்பட, நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த உயிரினத்திற்கும் நாம் தனுஸ்ரீ என பெயர் வைத்துவிட முடியாது. அதற்கும் உலக ஜூவாலஜிகல் நோமன்கிலேச்சர் என்ற அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. அப்போது பெயர் சூட்டி ஏ2பி லட்டை பரிமாறி சந்தோஷப்பட முடியும். உலகிலுள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்னாகும் ப்ரோ? ...

மேகம் திரண்டால் பூமி கூலிங் ஆகுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பருவநிலை மாற்றத்தால் மழை அதிகமாக பூமிக்கு கிடைக்கிறது. அதேசமயம் இப்படி திரளும் மேகங்களால் பூமியின் வெப்பம் குறையுமா? இப்படியெல்லாம் பாசிட்டிவ்வாக யோசிப்பதால் நீங்கள் விக்ரமன் பட ரசிகராக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மேகங்களை நீங்கள் கூறுவதுபோல முடிவு செய்ய முடியாது. இதனால் அவை பூமியின் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைக்கும் என்று எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது. பருவநிலை மாற்றத்தால் பெய்யும் மழை என்பது மேக உடைப்பு போல ஒரு மணிநேரத்தில் அந்த சீசனுக்கான ஒட்டுமொத்த மழையும் பெய்யும். இதனை நீங்கள் எப்படி நேர்மறையாக பார்க்க முடியும்? ஆய்வாளர்களும் மேகங்களை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது. காரணம் நிலையின்றி பயணிக்கும் அதன் தன்மைதான். நன்றி - பிபிசி