இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

தமிழ் எழுத்துருக்கள் பிரச்னை!

படம்
  அன்பிற்கினிய வாசகர்களுக்கு, வணக்கம்.  தளத்தில் பதிவேற்றிய சில கட்டுரைகளில் தமிழ் எழுத்துகள் சரிவர வரவில்லை. எழுத்துகள் அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தன. இதற்கு காரணம், நான் பயன்படுத்தும் புதிய இணைய உலாவியி்ல் தமிழ் எழுத்துரு பிரச்னை. எங்கு எதில் பிரச்னை என கண்டறியவே நேரம் நிறைய செலவானது. எனவே, பிழை பொறுக்கவும். திரு. சீனிவாசன் (கணியம் நிறுவனர்) அவர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று பிரச்னையை சரிசெய்ய முயல்கிறேன். கணினி அதிக நினைவக சேமிப்பு கொண்டதல்ல என்பதால், செயல்களை வரையறுக்கப்பட்ட வசதிகளைக் கொண்டே செய்யமுடிகிறது.  குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்கும்போதெல்லாம், உடனே தனது பணிச்சுமை கடந்து உதவியை வழங்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கு இப்பதிவு வழியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். 

மொழி - உரையாடுவோம்!

படம்
  கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது.  பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது.  காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை ம...

உரையாடல் - தோல் - அறிவியல் அறிவோம்

கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது. பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை மொழியைக் கற்றவர்கள...

ஒருவர் சாப்பிட்ட மாட்டிறைச்சியைக் கண்டுபிடித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் ஆப்!

படம்
24 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்ட மாட்டிறைச்சி!- சஞ்சார் பாட்டி ஆப் பயங்கரம்! அண்மையில், ஒன்றிய அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள கண்காணிப்பு ஆப்களைப் போல ஒன்றை வடிவமைத்தது. தொடக்கத்தில் இந்த ஆப், சிம்களை தவறாக பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பது. அதை முடக்குவது என்றே வலைத்தளமாக இயங்கியது. பிறகு, திடீரென போன்களுக்கு ஆப்பை தரவிறக்கி பதியுங்கள் என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. இறுதியாக, தகவல்தொடர்புதுறை அமைச்சர் புதிதாக தயாரிக்கும் போன்களிலும், பழைய போன்களிலும் கண்காணிப்பு ஆப் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆப்பிள் நிறுவனம், முடியாது என்ற ஒற்றைப் பதிலை சொல்லிவிட்டது. மற்றவர்கள் அமைதி காத்தனர். அமலாக்கத்துறை பயமாக இருக்கலாம். இணையத்தில், சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா இந்தியா என கேள்வி எழும்ப அமைச்சர் எப்போதும் போல ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றி மன்னிப்பு கோரி, உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். காலில் விழுவது, மன்னிப்பு கோருவது ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு புதிதல்ல. ஆனால், அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களுக்கு இன்னும் அந்த சடங்குகள் புரிபடவில்லை. சரி, இப்போது அந்த ஆப்...

சர்வதேசியவாதி - நேரு உரைகள் - மின்னூல் வெளியீடு- அட்டைப்படம் வெளியீடு

படம்
  Thanks  for wrapper image -wikimedia commons

சர்வதேசியவாதி நூலில் இருந்து

 நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது.  ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம்.  காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைப் பயணம்!

     சென்னைப் பயணம் - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... மாணவர் நாளிதழில் வேலை செய்து அதைவிட்டு விலகிய பிறகு, நேர்காணல் ஒன்றுக்கு ஒருமுறை சென்னைக்கு சென்றதோடு சரி. அதற்குப்பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருமுறை, பாத்திரங்களை எடுக்கச் சென்றபோது மெட்ரோ ரயில் காரணமாக மயிலாப்பூர் குதறப்பட்டிருந்தது. அப்போது, பேருந்துகள் எங்கே சென்று எங்கே திரும்புகின்றன, எது பேருந்து நிறுத்தம் என்றே தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் மயிலாப்பூர் அன்றைக்கு இருந்தது.அன்று அறையில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் முழுக்க எடுக்கமுடியவில்லை. பாதி பாத்திரங்களை அய்யங்கார் எங்கே உள்ளது என மறந்துவிட்டார். பிறகு, நாங்கள் ஊருக்கு வந்தபிறகு பாத்திரங்கள் தன்னுடைய அறையில்தான் உள்ளன என்று பொறுப்போடு தெரிவித்தார். அந்த முறை பயணத்தில் அம்மாவும் உடன் பயணித்தார். இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியது. ஓரியண்ட் ஃபேனை எல்லாம் ஒருவழியாக சரக்கு கட்டணம் கொடுத்து கொண்டு வந்துவிட்டோம். ஆனால் சென்னையில் மிச்சமுள்ள பாத்திரங்களை போய் எடுத்துவா என்று அம்மா, சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில பாத்திரங...

சுயநலம் கொண்ட பணக்கார குழுக்களால் ஏற்படும் பேராபத்து!

படம்
அமெரிக்கா, முன்பு போல வலிமையான நாடு கிடையாது. அங்கு 85 மில்லியன் மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடையாது. அரசு பள்ளிகள் பலவீனமாகி வருகின்றன. அரசு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு மூடப்பட்டு விட்டது. இனவெறி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போலி வதந்திகள் உருவாக்கப்பட்டு பரவி வருகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர், பணக்காரர்களுக்கு சரக்கு வாகன ஓட்டுநர், செவிலியர் ஆகியோரை விட குறைந்த வரியை விதிக்கிறார். இதற்கு காரணம் என்ன, சர்வாதிகாரம் எப்படி பணக்கார தொழிலதிபர்களால் நடைமுறைப்படுத்தப் படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விளக்கி எழுதியிருக்கிறார். வலதுசாரி இன மதவாதம் வளருவது பற்றி கவலை கொள்கிறீர்களா? இந்த நூல் உங்களுக்காகவே!

wrappers ...ara press

படம்
 

wrapper images... ara press

படம்
 

இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

படம்
  பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா... இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார்.  பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள்.  இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுக...

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!

 டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக் சேஜ் பதிப்பகம் இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.  டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல.  எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபா...

வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே

படம்
  விஜிலாண்டே மாங்கா காமிக்ஸ்  கொரியா இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது.  கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான த...

தலைவர்களை உருவாக்கும் நிறுவனம்- Hindustan unilever

படம்
நூலாசிரியர் தான் வேலை செய்யும் நிறுவன கொள்கைகளை பற்றி 106 பக்க நூலாக எழுதி இருக்கிறார். இதில் நிறுவனத்தின் நிறை குறை என இரண்டுமே உண்டு. அத்தியாய நிறைவில் கற்க வேண்டிய பாடங்களை சுருக்கமாக கூறியிருக்கிறார். இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் நேர்மை பற்றி இறுதி அத்தியாயத்தில் ஏன் கூறினார் என்று தெரியவில்லை. நூலில் பெரும்பாலான அம்சங்கள் நேர்மறையாகவே உள்ளன. நிர்மாவை எப்படி வென்றோம் என்று கூறும் சம்பவங்கள், கிசான் கெட்ச்அப், ஜாம் விற்பனை அனுபவங்கள், விளம்பரங்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதெல்லாம் சிறப்பாக இருந்தது.

new eBook....

படம்
https://books2read.com/u/382Nkw

அடுத்தவார வெளியீடு...

படம்

புதிய மின்னூல் வெளியீடு

படம்
https://www.amazon.in/dp/B0G3B72D65

new eBook release....now wrapper

படம்

இருளில் இரு கண்கள் - மின்னூல் வெளியீடு

படம்
Kobo - smash words

கருப்பு பெட்டி - புதிய மின்னூல் வெளியீடு...

படம்
 புதிய மின்னூல் வெளியீடு https://www.amazon.com/dp/B0FZFYQSRJ

புதிய மின்னூல் வெளியீடு - அட்டைப்படம்

படம்

தமிழ் மென்பொருட்கள்!

 தமிழ் மென்பொருட்களை ஒரே இடத்தில் பயன்படுத்த வேண்டுமா? கீழே உள்ள வலைதளத்தை அணுகலாம். https://tamilpesu.in/ta/kural/

மின்னூல் வெளியீடு....

படம்
நூலை வாசிக்க...https://www.amazon.com/dp/B0FX7WC8YV

தீபாவளி 🎁

படம்
தீபாவளியன்று காலையில் வயல்களில் குத்தகை ஆட்கள் வேலை செய்கிறார்கள். இந்திய ஆட்சித்தலைவரின் தீபாவளி பரிசு இம்மக்களுக்கு கிடைக்கவில்லையோ? பலரும் வாண வேடிக்கைகளுக்கு மாறிவிட்டனர். திரி பட்டாசு குறைந்துவிட்டது.

அதிமேதாவியின் பார்வையில் உலகம்!

படம்
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...

நவம்பரில் வெளியீடு....

படம்
புதிய மின்னூல் வெளியீடு....

மினி டிராமா பெண்களின் பாத்திரம்

படம்
சீனா நாடகங்களுக்கு அரசு பெரும் இடவசதியில் தொன்மை அரசு கட்டடங்களை உருவாக்கித் தந்துள்ளது. பாராட்ட வேண்டியதுதான்.ஆனால் கதை என்றால் அப்படியே ஒரே ஐடியாவை தொடர்கிறார்கள். காப்பி அடிக்கிறார்கள். குடும்பம் என்றால் அடித்து உதைத்தாலும் அதை மகன் மகள் ஏற்கவேண்டும். பெண்ணை பாம்பு கடித்தால் அதுதான் சிறந்த காதல் காட்சி. 70,80களில் தமிழில் வரும் பாம்பு விஷத்தை வாயில் எடுத்து துப்புவது...இதை கம்யூனிச அரசு எப்படி அனுமதிக்கிறது.....

புதிய மின்னூல் வெளியீடு -அட்டைப்படம் இப்போது....

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம இஎக்ஸ்டி நூலின் அட்டைப்படம்.... விரைவில் நூல் அமேசானில் வெளியீடு.

உப்பு தின்றால்....

தூத்துக்குடி யில் தயாரித்து வரும் ****ன் என்ற பிராண்டில் சிறு கற்கள் எப்போதும் காண கிடைக்கின்றன. கமிஷன் கொடுத்து கடையில் பொருட்களை சரியாக தரமாக கொடுக்க முடியவில்லை. இனி உப்புக்காக வேறொரு பிராண்டை தேடிப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் லாபத்தை பற்றி மட்டுமேயும் மக்கள் ஏமாற்றப்பட்டு காசுக்கான மதிப்பு குறையாத பொருட்களை தேட வேண்டியுள்ளது. உப்பை தூய்மை செய்யக்கூட கருவிகள் இல்லையா? எப்போதும் போல உள்ள இந்திய அலட்சியமா என்று தெரியவில்லை.

இந்தியவரலாறு - காந்திக்கு பிறகான காலகட்டம்

இந்த நூலை காங்.கின் வீழ்ச்சி பற்றிய வரலாறு அல்லது பார்ப்பன பாசிச கட்சியின் வரலாறு என்றும் கூறலாம். இனப்படுகொலை என தில்லி சீக்கியர்கள் படுகொலை -ராஜிவ் காந்தி மற்றும் முஸ்லீம் படுகொலை - நடப்பு பாசிச இயக்க இந்திய ஆட்சித்தலைவர் என துணிச்சலாக எழுதி உள்ளார். அடிப்படையில் இந்திராகாந்தி பற்றிய சம்பவங்களே அதிகம். வட இந்தியாவையே முழுக்க மையப்படுத்தி உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் சாரதி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...