மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

 
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா?

ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன.

அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா?

முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது.

ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லும் வலிமை கொண்டது எது?
பாக்ஸ் ஜெல்லி, இந்த மீன் ஒருவரைத் தாக்கினால் அவரைக் காப்பாற்றுவது மிக கடினம். பொதுவாக ஜெல்லி மீன்கள் விஷத்தன்மை கொண்டவை. அவை தாக்கினால் உடலில் எரியும் உணர்வு உருவாகி பல மணி நேரங்களுக்கு நீடிக்கும். தோலில் ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றும்.

சிலந்திகள் எத்தனை முட்டைகளை இடும்?

நூறு முதல் இரண்டாயிரம் வரை முட்டைகளை இடும். சிலந்திகளின் இனத்தைப் பொறுத்து முட்டைகளின் எண்ணிக்கை மாறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!