பத்திரிகையில் வேலை கிடைச்சிருச்சேய்! - பதிப்பக பணி
மனமறிய ஆவல் - கடிதங்கள் பத்திரிகையில் வேலை என்பது கடைசி புகலிடமாக இருக்கும் என நினைத்தேன். காரணம், நாவல்கள் படித்தாலும் அது பற்றி எழுதினாலும் சரி அது மற்றவர்களுக்கு தெரிய பத்திரிகைதான் ஒரே வழி. இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று வந்தாலும் அன்று எனக்கு அதில் ரெஸ்யூம் அனுப்பி வேலை வாங்கும் யுக்தி தெரியவில்லை. சிறுபான்மை இதழ் ஒன்றில் தட்டச்சு செய்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எழுதுபவனுக்கு தட்டச்சில் என்ன வேலை? மூத்த பெண் இதழியலாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அதுவும் சென்னையில் கோட்டூர்புரத்தில் நேர்காணலுக்கு சென்றபோதுதான். எப்போதும் போல நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு முன்னும் பின்னுமான நான்லீனியரில் பதில் சொல்லியதில் அவர்களே ஒரு காஃபி எனக்கும் மட்டும் என ஆர்டர் செய்து குடித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என அனுப்பி விட்டார்கள். பிறகு இரு மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்து இப்படி இதழ் ஒன்றில் வேலை செய்கிறீர்களாக என்று கேட்டார். சரி என்றேன். அப்புறம் கிடைத்ததுதான் தட்டச்சுப்பணி. வேலை, ஆசிரியர் என இரண்டுமே சரியில்லைதான். ஆனால் அலுவலகத்தில் இருந்த நூல்கள