சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்
சௌகதா ரே திரிணாமூல் காங்கிரஸ் சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ? இல்லை . அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் . அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு . போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு . அவருக்கு இது தெரியாதா ? தெரிந்திருக்கலாம் . அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு . அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார் . உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர் . அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார் . மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல . எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது . அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை . ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள் . இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா ? இவர்கள் யாரும் இத்தேர்தல