இடுகைகள்

சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்

படம்
                சௌகதா ரே திரிணாமூல் காங்கிரஸ் சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ? இல்லை . அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் . அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு . போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு . அவருக்கு இது தெரியாதா ? தெரிந்திருக்கலாம் . அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு . அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார் . உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர் . அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார் . மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல . எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது . அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை . ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள் . இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா ? இவர்கள் யாரும் இத்தேர்தல

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா

காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1

படம்
                ஓபன் சீசன்2006 முதல் பாகம் Directed by Roger Allers Jill Culton Produced by Michelle Murdocca Screenplay by Steve Bencich Ron J. Friedman Nat Mauldin Story by Jill Culton Anthony Stacchi Based on An original story by Steve Moore John B. Carls பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ . வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல , அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான் , கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது . கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது . மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது . அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார் . அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார் . அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார் . ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது . அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க , காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது . மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெ

இனவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டம்! - மாந்தருள் தெய்வம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி

படம்
                  மாந்தருள் தெய்வம் கல்கி கிருஷ்ணமூர்த்தி காந்தியின் வாழ்க்கையை அவர் பிறந்தது முதல் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெல்வது வரையிலான அவரது வாழ்க்கையைப் பேசுகிறது நூல் இது . நூலின் சிறப்பு என்னவென்றால் , இது பள்ளிக்குழ்ந்தைகளுக்கு காந்தியை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் . பனியா என்ற இனத்தில் பிறப்பது , அவரது குடும்ப வாழ்க்கை . தொழில்வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது . சமூக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை படிக்கும் யாவரும் புரிந்துகொள்ளமுடியும் . இதனால் கஸ்தூரிபாய் காந்தி , மணிலால் காந்தி , ஹரிலால் காந்தி ஆகியோர் பற்றிய பகுதிகள் இதில் குறைவாகவே உள்ளன . அதனால் நூலைப் படிக்கும் எவருக்கும் பெரிய குறைபாடாக தோன்றாது . அந்தளவுக்கு பொதுநலனுக்கு காந்தி என்னென்ன விஷயங்களை யோசித்துள்ளார் என்பது வாசகர்களை ரசிக்க வைக்கிறது . லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்கும் பகுதி காந்தியின் வாழ்க்கையில் முக்கியமானது . இங்குதான் அவருக்கு உணவு , கலாசாரம் சார்ந்த

தம்பியின் டீம் ஜெயிக்க ஆவியாகி வந்து உதவும் அண்ணன்! - சிக்ஸ்த் மேன் 1997

படம்
            சிக்ஸ்த்மேன் 1997   Director: Randall Miller Produced by: David Hoberman Writer(s): Christopher Reed, Cynthia Carle Music by Marcus Miller Cinematography Mike Ozier பேஸ்கட் பால் விளையாட்டுதான் வாழ்க்கை . அதற்குப்பிறகுதான் பிற விஷயங்கள் என்று நினைக்கும் குடும்பம் . அதில் ஆண்டன் , கெனி என இரு சகோதர ர்கள் . இதில் அண்ணன் வெகு சாமர்த்தியசாலி . இவர்களுக்கு கோச் வேறு யாருமில்லை . அவர்களது தந்தைதான் . இந்த நிலையில் சிறப்பாக விளையாடி ஆண்டன் புகழ்பெற நினைக்கிறான் . ஆனால் ஒரு விளையாட்டில் கோல் போடும்போது மாரடைப்பு வந்து சடக்கென இறந்துவிடுகிறான் . அவன் நினைத்தபடி அவனது டீம் சாம்பியன் பட்டம் வென்றார்களா இல்லையா என்பதுதான் படம் .    படம் முழுக்க காதல் , தூக்கலாக காமெடி , கொஞ்சம் நெகிழ்ச்சி நிரம்பியுள்ளது . முழுக்க பேஸ்கட்பால் கோர்ட் , ஸ்கோர்போர்டு என்று நடைபெறுகிற படம் என்பதால் சிலருக்கு சலிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது . அதற்குத்தான் பேன்டசி சமாச்சாரத்தை சேர்த்திருக்கிறார்கள் . ஆண்டனைத் தவிர பிறருக்கு அவ்வளவு சமர்த்து பத்தாது . அல்லது அவர்களுக்கு ஊக்கம் கொடுக

காட்டு விலங்குகளை வேட்டையாடி வரும் செல்லப்பிராணிகள்! - காட்டுயிர் காணாமல் போகும் அவலம்

படம்
                    காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்ப