தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்(ஆ- டான் ஃபைனாரு)
வடக்கு கிரீசில் தொடர்ந்து படமெடுப்பதை குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்? எனக்கு தெரியவில்லை. ஏன் இந்த நிலப்பரப்பு மழையும் மூடுபனியும் கொண்டு ஒரு சோகத்தை மனதில் இது பரப்புகிறது என்று நினைப்பேன். எனவேதான் இது தனித்துவமானதாக எனக்குப் படுகிறது. பாரீஸில் வெயில் இருக்கும் காலங்களைவிட மழைபெய்யும் போதுதான் எனக்கு அந்த இடம் மிகப்பிடித்தமானதாக இருக்கிறது. தங்களின் சூழ்நிலைத் தேர்வு அன்டோனியோனி உருவாக்கிய ‘போ வேலி ’ படத்தின் தன்மையை ஒத்தது போல இருக்கிறதே? அப்படியும் இருக்கலாம். படங்களை உருவாக்கத் தொடங்கிய காலம் முதல் இயற்கையான இந்த நிலக்காட்சி விஷயங்கள் என்னுள் தங்கிவிட்டது என்று கூறுவேன். தேனீக்காவலர் படத்தில் நீங்கள் பயன்படுத்திய இடங்கள் உங்களது முந்தைய படங்களிலும் வந்துள்ளது. உதாரணமாக – லேனினா. ஆம், அது உண்மைதான். மறுகட்டமைப்பு படத்தில் இரு காதலர்கள் லேனினாவில்வில் உள்ள விடுதி ஒன்றில் சந்திப்பார்கள். பயணிக்கும் வீரர்கள் படத்திற்காக அங்கு மீண்டும் சென்றேன். வேட்டைக்காரர்கள் படத்திற்காக லேனினாவை அடுத்துள்ள ஏரிக்குச் சென்றேன். உண்மையில் இதில் ஆச்சர்யகர