இடுகைகள்

வலதுசாரிகளின் கொடுங்கனவாக மாறிய காந்தி - கடிதங்கள்

படம்
  விவாதங்களின் மையப் பொருளாக இன்றும் காந்தி அன்புள்ள முருகு அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? காந்தி பற்றி மாலன் எழுதியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொள்கையை தன் உடலாகவே மாற்றிக்கொண்டு போராடிய காந்தி இன்றும் விவாதங்களின் மையமாகவே இருக்கிறார்.  கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லை. காய்ச்சல், பேதி என்று நிலைமை தீவிரமாக இருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். இன்னும் சிகிச்சைகள் முழுமையாக நிறைவு பெறவில்லை.  நாகரிகங்களின் மோதல் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாதகமானது. கட்டுரை நூலுக்காக விகடனின் விருது பெற்ற நூல் இது.  எங்களது இதழ், பல்வேறு நகரங்களில் மாணவர்களுக்கான வினாடிவினா போட்டிகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடச்சொல்லி ஆசிரியர் கூறுகிறார். இதனால் இதழ் தயாரிப்பு வேலைகள் நேரடியாக எனது தோளில் விழுந்து விடுகிறது. டைபாய்டு காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை எடுக்கவேண்டியுள்ளது. ஹீவெய் பற்றிய நூலை வாசிக்க நன்றாக உள்ளது. சாதாரண நிறுவனமாக தொடங்கி இன்று 5 ஜி வசதியை பிற நாடுகளுக்கு கொடுக்கும் வகையில் நிறுவனம்

வேட்டையாடுதல் எனும் ஆதி உணர்வு- கடிதங்கள்

படம்
  ஓநாய்குலச்சின்னம் தமிழில் சி.மோகன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? நான் இப்போது எங்கள் இதழில் வெளியாகும் சிறப்பிதழுக்காக வேலை செய்து வருகிறேன். நெற்பயிருக்கான சிறப்பிதழ். உதவி ஆசிரியர்களை நிருபர்களாக மாற்ற நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. எப்படி சாத்தியமோ? ஓநாய் குலச்சின்னம் நாவலைப் படித்து வருகிறேன். இன்னும் இருநூறு பக்கங்கள் மிச்சமுள்ளன. நாடோடியாக வாழும் மங்கோலியர்களின் வாழ்க்கைப்பதிவு இது. ஓநாய்கள் முக்கியான பாத்திரங்களாக வரும் வேட்டை இலக்கியம் இது. சி.மோகனின் அற்புதமாக மொழிபெயர்ப்பு காலம் கடந்தும் நிற்கும் என நினைக்கிறேன்.  2020 பெரும் போராட்டங்களுடன்தான் தொடங்குகிறது. விளைவு எப்படி இருக்குமோ? பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் மனதில் சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஜல்லிக்கட்டு - ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கிய படம் பார்த்தேன். கறிக்கடைக்காக கட்டப்பட்டிருக்கும் மாடு ஒன்று தப்பித்துவிடுகிறது. காட்டின் உள்ளே ஓடிவிட அதனை வேட்டையாட மனிதர்கள் ஆவேசத்துடன் கிளம்புகிறார்கள். மாட்டை வேட்டையாடினார்களா இல்லையா என்பதுதான் கதை. வேட்டையாடுதல்

வாசிப்பு நோக்கத்தை பாழாக்கும் தேர்வு! - கடிதங்கள்

படம்
  காகித மலர்கள் - ஆதவன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன்.  இன்றுதான் ஆதவன் எழுதிய காகித மலர்கள் நூலைப் படித்து முடித்தேன். நாவலில் வரும் கேள்விகளுக்கு இறுதியில் பதில் சொல்லியிருக்கிறார்  ஆசிரியர். வாசிக்க நல்ல நூல்தான் என்பதில் சந்தேகமில்லை.  அறையில் சமைத்து சாப்பிட முயற்சிகளைச் செய்து வருகிறேன். கடைகளில் அசைவப் பிரியர்களுக்கான விஷயங்களே அதிகம் உள்ளன.  ஹிட் ரெஃப்ரெஷ் - சத்யா நாதெள்ளா எழுதிய நூலைப் படித்து வருகிறேன். கணினித் துறை வளர்ச்சி, தனது மூளைவாதம் கொண்ட குழந்தையின் பராமரிப்பு, தொழில் தடைகள் என பல்வேறு விஷயங்களை நூலில் தெளிவாகப் பேசியுள்ளார். அலுவலகத்தில் இப்போது மாதம்தோறும் ஒரு நூலைப் பற்றி பேச சொல்லுகிறார்கள். அந்த வரிசையில் சத்யாவின் நூலைப்பற்றி பேசலாம் என யோசித்து வருகிறேன். எதைப்படித்தாலும் சரி, அதைப்பற்றி தேர்வு வைத்தால் வாசிப்பு நோக்கம் பாழாகப் போய்விடும் என்பது எனது கருத்து.  சாவி எழுதிய நவகாளி யாத்திரை, இந்திய சுயராஜ்யம் ஆகிய நூல்களை வாசிக்கவேண்டும். தேசியம் பற்றிய கட்டுரையில் உங்கள் உதவி தேவை என்று நினைக்கிறேன்.  ஜோ

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

துப்பறியும் கதைகளின் அணிவகுப்பு! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  சென்னையில் விநாயகர் சதுர்த்தி பாடல், சோறு, பூஜை என அமர்க்களப்பட்டது. கடலில் சிலைகளை கரைக்கச் செய்யும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். விகடன் இதழ்கள் சிலவற்றை நிறுத்துவது பற்றி அறிந்திருப்பீர்கள்.  டெலிகிராம் செயலியில் நிறைய மின்நூல்கள் கிடைக்கின்றன. தினசரி பத்திரிக்கைகளையும் இதிலேயே படித்துக்கொள்ள முடிகிறது. பத்திரிகைகள், மாத இதழ்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சரி, தவறு என்பதைவிட காலமாற்றத்திற்கேற்ப மக்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இப்படி படிக்கும் செய்திகள் மனதில் நிற்குமா என்று கேட்கிறார்கள். தேவையான விஷயங்களை இதில் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.  இணையத்தில் இந்த வகையில் ஏராளமான செய்திகள், மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  தாளின் விலையேற்றம், நூல்களை சேமிக்க முடியாதது என இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உண்டு. சத்யஜித்ரேயின் பெலுடா சீரிசில் இரண்டு கதைகளைப் படித்தேன்.  பம்பாய் கொள்ளையர்கள், தங்கவேட்டை என்று இரண்டு நூல்களும் நன்றாக இருந்தன. மொழிபெயர்ப்பு வீ.பா. கணேசன் . மொத்தம் இந்த வரிசையில் இருபது நூல்கள் உள்ளன.  வங்காளத்தில் பியோம்க