இடுகைகள்

ஆன்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

படம்
                எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் மருதா பாலகுருசாமி இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல் , கரடுமுரடான மலைகளின் கதை , எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான் . இதில் எலிநோரா மூன்றாவது கதை . புல்வெளி , பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை . இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை . ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள் . கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன . காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன . மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது . அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது , நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது . ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம் . காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை . மூளையும் , குடலும் உள்ளன . எனவே இந்த மம்மி மனிதர்களுடன்

தன் உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்ற முயலும் நாயகன்! - டாக்டர் ஸ்லீப்

படம்
         டாக்டர் ஸ்லீப் 2019     டாக்டர் ஸ்லீப் 2019 Director: Mike Flanagan Writers: Mike Flanagan (screenplay by), Stephen King (based upon the novel by) ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் தி ஷைனிங் படம் பார்த்திருந்தால் இந்தப்படம் உங்களுக்கு தெளிவாக புரிய வாய்ப்புள்ளது. பார்க்காவிட்டாலும் இந்தப்படத்தைப் பார்க்கலாம்.தவறில்லை. ஆனால் தி ஷைனிங் படத்திற்கான ஆதார கதையை எழுதிய ஸ்டீபன் கிங் எழுதிய அடுத்த பாக நாவலை தழுவி டாக்டர் ஸ்லீப் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் படம் பார்க்கும்போது கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கும். எனவேதான் முன்னமே சொல்லிவிட்டோம். தி ஷைனிங் பார்த்தபிறகு, இந்த படத்தைப் பாருங்கள்.  டாக்டர் ஸ்லீப் 2019 டேனி, அப்பா இறந்தபிறகு அம்மாவுடன் வளர்கிறான். அவனுக்கு அடுத்து நடக்கப்போகும் விஷயங்களை முன்னரே அறிவது ஒருகட்டத்தில் சாபமாக அவனுக்குப் படுகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட பல்வேறு மோசமான அனுபவங்களின் பாதிப்பில் அம்மா இறந்தபிறகு மதுவுக்கு தீவிரமாக அடிமையாகிறான். அம்மாவின் பாசம் கிடைக்காமல், கிளப்பிலும் பப்பிலும் சுற்றுகிறான். மூளையில் தேங்கிவிட்ட அபாயகர நின

பரலோக நரகம் - அக்னியில் கொதிக்கும் ஆன்மா!

படம்
தெரிஞ்சுக்கோ! நரகம்! இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களிலும் நரகத்திற்கு முக்கியமான இடமுண்டு. புத்த மதத்தில் ஏழு பனி நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுபவர்களை அச்சுறுத்த நரகங்கள் புராணக் கதைகளில் உருவாக்கப்பட்டன. இன்று மோசமான ஆட்சியாளர் அதனை தன் வாழ்நாளில் மக்களுக்கு உருவாக்கிக் காட்ட முடிகிறது. இதையும் நாம் கர்ம பூர்வம் என்று சொல்லித் தப்பிக்க முடியும். கொடும் செயல்களை செய்பவர்களுக்கு நரகம் விதிக்கப்படுகிறது. மெசபடோனிய நம்பிக்கைப்படி, மோசமான செயல்களைச் செய்தவர்கள் கழிவுநீரைக் குடித்தபடி கற்களைத் தின்றபடி இங்கு வாழ வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் தியோபிளஸ் அடானா என்பவர், வரலாற்றில் முதன்முறையாக தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்கிறார். இதற்குப் பரிசாக பிஷப் பதவியைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் குற்ற உணர்வு பெருக்கெடுக்க, கன்னி மேரியிடம் மன்னிப்புகேட்க, சாத்தானின் ஒப்பந்தத்தை மேரி முறிக்கிறார். ஜெரிலாக் என்பவர், ஸ்பெயினில் படிக்கிறார். இவரது எதிரிகள் இவர் சாத்தானின் அருள் பெற்றவர் என பிரசாரம் செய்கின்றனர். காரணம் இவர் போப்