இடுகைகள்

நூல் வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல் வெளி

37 சரித்திரத்தில் படிந்த நிழல்கள் தமிழவன் அடையாளம் பிரஸ்                                                                                      சகலன் இது பின்காலனிய நாவல். தமிழகத்தில்   பல நிகழ்வுகளை கடும் பகடியாக நிகழ்ச்சியாக மாற்றுகிறது. பாக்கியத்தாய் ராணி, பச்சைராஜன் ராஜா, ஆளும் நாடு தொகிமொலா என புனைவாக பலதும் நல்ல திட்டமாக உருவாக்கப்பட்டு, பல அரசியல் நிகழ்வுகள், இத்தளத்தில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.   இவர்களுக்கு இருமகன்கள் சொல்லின் பொருள், மலைமீது ஒளி என இருவரின் செயல்பாடுகள், பச்சைராஜனின் இரண்டாம் ராணி சங்கல்ப ராணி என பலரின் செயல்பாடுகளை புனைவுலகின் மற்றொரு புனைவுச்செயல்பாடாக வர்ணிக்கப்பட்டு சுவாரசியமாக பயணிக்கிறது கதை. அடுத்தது என்று எதிர்பார்க்க வைக்கும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. கதையினை உண்மை என்று நம்ப வைக்க பல அறிஞர்களின் பெயர்கள், நூல்களின் பெயர்கள் அடிக்குறிப்பாக காட்டப்படுவதால் நம்பி பயணிப்பதைத்தவிர வேறு வழியேதுமில்லை.   இதனிடையே பழைய வடுவூராரின் நூல்களைப்போல இடையே வரும் ஆசிரியரின் குரல் வாசகரை திசை திருப்பும் பல பதில்களைக்கொண்டுள்ளது

நூல் வெளி

35 இந்தியப்பிரிவினை சினிமா யமுனா ராஜேந்திரன் உயிர்மை பதிப்பகம்                                                      பக்சி இந்நூலில் பிரிவினையைப்பற்றிய பிரச்சனைகளைப்பேசும் 7 படங்கள் அவற்றின் கதை, அது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய முழுமையான விளக்கம் என நம்முன் வைக்கிறது. இதில் நான் முழுமையாக பார்த்திருப்பது தீபா மேத்தா இயக்கிய எர்த் படம் ஒன்றைத்தான். 1999 ல் வந்த இப்படம் பாப்ஸி லபித்வா எனும் பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய Cracking India   எனும் நாவலை மூலமாக கொண்டது. இதில் வரும் காட்சிகள், பிரிவினை கலவரங்களை சூழல்களை ஓரளவு உணர்த்தும்படியான காட்சிகளைக்கொண்டுள்ளன என்று கூறலாம். கதையைக்கூறும் லெனி தன் உறவினரான சிறுவனோடு எதிரில் உள்ள சிறுவனோடு நிகழ்த்தும்   காட்சி எனக்கு பிடித்தமானது என்பேன்.   லெனியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பில் துக்கம், மகிழ்ச்சி, வலி என   அத்தனையையும் அந்த முகம் வெளிப்படுத்துகிறது. அமீர்கான் முஸ்லீம் மக்கள் இந்துமக்களை கொன்று குவிப்பதை சிரிப்புடன் ரசிக்கும் காட்சியில் பதறும் நந்திதாதாஸின் முகபாவம் ஒன்றேபோதும்; அவரது நடிப்பிற்கு சான்றுகூற. இது

நூல் வெளி

நூல் வெளி  ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்                                 சுந்தர ராமசாமி                                            கான்ஞ்ஞா      இந்தப்புத்தகம் முழுக்க தடாகைதி ஒருவருக்கு சு.ரா எழுதிய கடிதங்களைப்பற்றிப்பேசுகிறது. இதில் இதற்கு முன் படித்தவர் பல கோடுகளைப்போட்டு மேற்கோள் திரட்டி புத்தகமே பள்ளி மாணவன் தேர்வுக்கு தயார் செய்ய பயன்படுத்தியது போலாகிவிட்டது. சு.ரா எளிய மனிதனாய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள உதவும் ஒரு படைப்பு என்று இதனைக்கொள்ளலாம்.      இயல்பான தன் மனப்போக்கில் தன் தவறுகளை உணர்ந்துகொள்கிற ஒரு மனிதனின் தடத்தை இந்த எழுத்துகளில் தரிசிக்க முடிகிறது. அதுதான இந்நூலின் பெரிய பலமே.      கடிதங்கள் என்றால் இருவரும் எழுதியதைப் பதிவு செய்திருந்தால் அது படிப்பவர்களுக்கு இன்னும் வாசிப்பு அனுபவம் உருவாக உதவியிருக்கும். இந்த கடிதத்திலிருந்து சு.ராவுக்கு கடிதம் எழுதியவரின் கடிதங்கள் என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும் என்பது காலச்சுவடின் நோக்கமா என்று தெரியவில்லை.      சு.ராவின் எழுத்துக்களை வெகுநாட்களாக வாசிக்காமல் இருந்து இப்போது வாசித்ததில் புத்