திகட்ட திகட்ட கொலை - இரு சகோதரர்களின் அட்டூழியம்!
அசுரகுலம் கென்னத் பியான்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மலையில் திடீரென 12 முதல் 28 வயதுள்ள பெண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்படத் தொடங்கின. இருவர் இக்கொலைகளுக்கு காரணம் என போலீஸ் கண்டுபிடித்தது. அதில் ஒருவர்தான் கென்னத். மேற்சொன்ன மலையருகே நிறைய பெண்களின் பிணங்களை காவல்துறை கர்மசிரத்தையாக எடுத்து மார்ச்சுவரியில் அடுக்கியது. பின்னர் கிடைத்த விஷயங்களை வைத்து ஆராய்ந்தபோது, பெண்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு குறிப்பாக வல்லுறவுக்கு பின்னரே கொல்லப்பட்டிருந்தனர். அங்கு செய்த கொலைகளைக் காட்டிக் கொடுத்து போலீஸ் விசாரணை செய்ய விசில் ஊதியவன் ஓர் சிறுவன்தான். அவன் அந்த இடத்திற்கு புதையல் கண்டுபிடிப்போம் என்ற விளையாட்டிற்காக வந்தான். அங்கு வந்தபின்தான், அவனது பதினான்கு வயதிற்கு ஒத்த இரு சிறுமிகள் நிர்வாணமாக கட்டிவைக்கப்பட்டிருப்பதை பார்த்தான். அருகில் போய் பார்த்தபோது, இருவரின் உடலின் சதைகளும் கெட்டு புழுக்கள் வெளிவந்துகொண்டிருப்பதை பார்த்து திகைத்துப் போனான். பின்னர் இக்காரியத்தை செய்த இருவரையும் போலீசில் காட்டிக்கொடுத்தான். கென்னத், அவரது சகோ