உறவுகளையும் உணர்ச்சிகளையும் நிலப்பரப்பு வழியாக இணைக்கும் சிறுகதைகள்! - உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகள்(சிங்களம், ஆங்கிலம்)
உறவுப்பாலம் இலங்கை சிறுகதைகள் மொழிபெயர்ப்பு கண்ணையன் தட்சிணாமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட் விலை 150 பக்கம் 254 நூலில் மூன்று பகுதிகள் உள்ளன சிங்களச் சிறுகதைகள் , தமிழ் சிறுகதைகள் , ஆங்கிலச் சிறுகதைகள் . இதில் உருப்படியாக இருக்கும் கதைகள் அனைத்தும் சிங்களம் , ஆங்கிலத்தில்தான் உள்ளன என்பதை கவனிப்பது அவசியம் . மொத்த கதைகள் இருபத்தைந்து அதில் , 18 கதைகளை நம்பிக்கையோடு படிக்கலாம் . மோசமில்லை . சிங்களச் சிறுகதைகளில் மறுபடியும் , இன்று என் மகன் வீடு திரும்புகிறான் , அக்கா ஆகிய கதைகள் சிறப்பாக உள்ளன . முதல்கதையான மறுபடியும் எழுத்தாளர் குணதாச அமரசேகர எழுதியது . பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியை ஒருவர் தனது பள்ளியை சென்று மீண்டும் பார்ப்பதுதான் கதை . இதற்குள் , அங்கு நடைபெறும் பிரச்னைகள் , அதனை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள் , உணர்ச்சிப்பூர்வமாக பள்ளி என்பதை பார்க்கும் ஆசிரியையின் கோணம் என பல்வேறு உணர்ச்சிகளின் கதம்பமாக கதை ரசிக்க வைக்கிறது . இன்று என் மகன் வீடு வருகிறான் - கருணா பெரைரா எழுதியது . இக்கதையை அங்கு நட