இடுகைகள்

பூமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா தடுப்பூசி? - உண்மையும் உடான்ஸூம் அறிவோம்!

படம்
              உண்மையும் உடான்ஸூம்! ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்ற கருப்பின அடிமைகள் உலகம் முழுக்க பரவினார்கள் ரியல் : ஆப்பிரிக்கா என்பது ஓர் நாடு என சிலர் நினைப்பது போலவே இதுவும் தவறான நம்பிக்கை . ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கருப்பினத்தவர்கள் விற்கப்படவில்லை . ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கருப்பினத்தவர்கள் அடிமை வணிகம் தொடங்கியது . தங்கம் தேடி ஆப்பிரிக்காவிற்கு சென்ற போர்ச்சுக்கீசியர்கள் 1442 ஆம் ஆண்டு தங்கள் நாட்டிற்கு பத்து ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர் . பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கானாவில் எல்மினா எனும் அடிமைகள் விற்குமிடத்தை தொடங்கினர் . அங்கு அடிமைகள் விற்பனையோடு , தங்கம் , யானைகளின் தந்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன . 1619 ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியர்களால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் . நம் கைகளிலுள்ள கைரேகைகள் பொருட்களை இறுக்கமாக பிடிக்க உதவுகின்றன ரியல் : நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிய நம்பிக்கை இது . ஆனால் இது உண்மையல்ல .

பால்வெளியில் ரேடியோ அலைகளின் வீச்சு! - ஜாலியாக அறிவியல் கற்போம்!

படம்
இயற்பியல் பால்வெளியில் ரேடியோ அலைகள்! கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என நாளிதழில் அறிவியல் செய்திகள் படிக்கும்போது, பலருக்கும் சந்தேகம் வரும்; அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் வானியலாளர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றனர். பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக, வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன. ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன? பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான் அணுக்கள், ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது. ரேடியோ அலைகள் அரித

வெப்பமயமாதலால் அழியும் பூமி!

படம்
அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளை விட ஆபத்தானது. வெப்பமயமாதல் பிரச்னைகள்தான். இவைதான் இன்று நாட்டின் ஒரு பகுதியில் மேக உடைப்பையும் மற்றொரு இடத்தில் வறட்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 1600 களில் ஏற்பட்ட வெப்பமயமாதல் பல்வேறு உயிரிகளை துடைத்து அழித்தது. தற்போது ஏற்பட்டு வரும் 1 டிகிரி செல்சியஸ் உயர்வும் இத்தகையை பாதிப்பை ஏற்படுத்தும வாய்ப்பு உள்ளது. மே 2019 ஆம் ஆண்டு கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு மில்லியனில் 415.39 எனும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கார்பன் டை ஆக்சைடு  3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயர்ந்துள்ளது. கார்பன் டை ஆக்சைடின் உயர்வை 2050க்குள் 0 அளவுக்கு கொண்டு வருவது அவசியம். உலகம் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டால் கடல் நீர் மட்டம் 230 அடி உயரும். தொண்ணூறுகளோடு ஒப்பிட்டால் இன்று 500 சதவீத அளவுக்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகிவருகின்றன. மேற்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகினால், கடல் நீர் மட்டும் 8.2 அடி அளவுக்கு உயரும். நன்றி: க்வார்ட்ஸ்

பூமி சுற்றுவதை நாம் ஏன் அறிய முடிவதில்லை?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பூமி சுற்றுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை? காவேரி ஆற்றை படகில் நீங்கள் கடக்கிறீர்கள் என்றால் அப்போது ஆற்றில் ஏற்படும் சுழலை நீங்கள் உணர்வீர்கள். காரணம் அதன் வலிமை அப்படி. படகில் செயல்படும் துடுப்பு விசையை விட சுழலின் விசை அதிகமாக இருக்கும்போது அதனை நீங்கள் உணர முடியும்.  பூமி, விண்வெளியில் சுற்றும் வேகம் மணிக்கு ஆயிரம் கி.மீ வேகம்(இங்கிலாந்து அடிப்படையில்). இதனை உணர முடியாத தற்கு காரணம், நம்மீது செயல்படும் ஈர்ப்புவிசைதான்.  நன்றி: பிபிசி

நிலவு இல்லாத பூமி?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிலவு இல்லையென்றால் என்னாகும்? நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. ஒருவேளை நிலவு இல்லாதபோது, பூமியில் என்ன மாற்றம் நடக்கும்? கடல் அலைகளின் எழுச்சி குறையும். சூரியனின் ஈர்ப்பு விசை மட்டுமே பூமியைப் பாதிக்கும். தினசரி நேரத்தில் 0.002 நொடி வித்தியாசம் ஏற்படும். இப்போது பூமி 23.5 டிகிரி கோணத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசை இதனை இந்த இடத்தில் பொருத்தியுள்ளது. ஆனால் நிலவு இல்லாதபோது, இந்நிலை மாறும். செவ்வாய் 60 டிகிரி கோணத்தில் அதன் வட்டப்பாதையில் சாய்ந்துள்ளது ஈர்ப்புவிசை வலிமையற்ற துணைக்கோள்களால்தான். நன்றி: பிபிசி

மூளையில் மின்னல் வெட்டுதா?

படம்
Pexels.com பொதுவாக மூளை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் உண்மைத்தன்மையும் மிகச்சிக்கலான தன்மை கொண்டவை. விளக்கப்புகுந்தால் அதை கூறுபவருக்கு மட்டுமல்ல; புரிந்துகொள்ள நினைப்பவருக்கும் பூமி வலமிருந்து இடமாக சுற்றி பொறி கலங்கும். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நியூரான்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன. மின் துடிப்புகளாக செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளை அறிய முற்படுவதற்கு முக்கியக் காரணம், பார்கின்சன் மற்றும் அல்சீமர் தொடர்பான நோய்களுக்கு இவை உதவுமே என்பதுதான். மனித மூளையின் எடை 1.4 கி.கி மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை - 100 பில்லியன் உடலின் இருபது சதவீத ஆற்றல் மூளையின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இதுவே மின்தூண்டுதலுக்கு ஆதாரம். ஒரு நியூரானிலிருந்து 70 மில்லிவோல்ட் மின்சாரம் உருவாகிறது. இசிடி சிகிச்சையில் 450 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கடல் உயிரினமான ஈல், இரண்டு மில்லி செகண்டுகளில் 860 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது. நன்றி: க்வார்ட்ஸ்