இடுகைகள்

மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா வைரசில் இவர்கள் எந்த வகை?

கொரோனா பாதிப்பு நமக்கு நம்மையே கண்ணாடி மாதிரி அடையாளம் காட்டியிருக்கிறது. நாம் யார், எப்படிப்பட்ட ஆள், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன மாதிரியான ஆள் என்பதை இந்த இக்கட்டான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அப்போதுதான் கொரோனாவை விட கொடுமையான ஆள் இவன் என பொட்டில் அறைவது போல சில வில்லங்க ஆட்களின் விஸ்வரூபம் நமக்கு தெரிய வரும்.  உலகிலேயே இந்தியர்கள் தனித்துவமானர்கள்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. பின்னே, ஊரே கொரோனா பயத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தது. அந்த நேரத்திலும் பர்சேஸூக்காக அண்ணாச்சி கடைக்கு சென்னை மக்கள் போகிறார்கள் என்றால், எங்கண்ணனுக்கு தில்லு பார்த்தியா மொமண்ட்தான் நினைவுக்கு வருகிறது. சிலரது நம்பிக்கையை எப்பாடு பட்டாலும் அசைக்க முடியாது. சிலர் கொரோனாவை போலிச்செய்தி என நினைப்பார்கள். இன்னும் சிலர் பூமி மாதா நம்மை விழுங்கப்போறா என புராணக்கதையை பாட்காஸ்டில் ஒலிபரப்பியபடி இருப்பார்கள். தமிழர்கள் ஸ்டாலின் போல வெயில் வந்தா போதும். நோயெல்லாம் ஒழிஞ்சிடும் என வம்பாக கற்பனை வளர்த்து திரிவார்கள்.   சானிடைசரே நமக!

உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!

படம்
டாக்டர் எக்ஸ். விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா? விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார். இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன. விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அதிக காலம் காத்தி

மர்ம தேசம் ஏரியா 51! - டேட்டா

தெரிஞ்சுக்கோ! கனவு தேசம் ஏரியா 51 அண்மையில் ஃபேஸ்புக்கில் ’நெவடாவில் ஏரியா 51 பகுதிக்குச்சென்று போராடுவோம். அயலுலக வாசிகளை காணும்வரை இப்போராட்டம் நீடிக்கும்’ என ஃபேஸ்புக் கிண்டல்கள் வெடித்தன. அதுவரை என்னமோ நடக்குது என வேடிக்கை பார்த்த மக்களும் பேரணி நடக்குமோ என விவாதம் செய்யத் தொடங்கினர். அமெரிக்க அரசு, அப்படியெல்லாம் அங்கு எந்த ஆராய்ச்சியும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது. அவை பற்றிய சின்ன டேட்டாவைப் பார்ப்போம். அமெரிக்க அரசின் விமானத்துறை பயிற்சித்தளம்தான் ஏரியா 51. அதாவது அதில் அடங்கியுள்ள ஒரு பகுதி. இப்பகுதி கனெக்டிகட் மற்றும் டெலாவேர் பகுதிகளை விட பெரியது. ஏரியா 51 பற்றி ஃபேஸ்புக்கில் கருத்துப் பகிர்ந்து கிண்டல் செய்தவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியன். ஏறத்தாழ இருபது லட்சத்திற்கும் அதிகம். அமெரிக்க அரசு, அயலுலகவாசிகளை வைத்து ஆராய்ச்சி செய்கிறது என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நம்பியது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட யு2 விமானம் பறக்கும் தோராய வேகம் மணிக்கும் 692 கி.மீ. இந்த உளவு விமானம் 18,300 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 1864 ஆ

மனிதர்களை சோதிப்பதில் ஏன் தடைகள்?

படம்
மேரிலாண்டில் ஆராய்ச்சியாளர் சோதிக்கிறார் அறிவியல் சோதனைகளின் எதிர்காலம்? புற்றுநோய்க்கு எதிராக நடைபெற்ற ஐந்து சோதனைகள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதன் பொருள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் விரக்தி அடைந்துவிட்டார்கள் என்பதல்ல. மருந்துகளைச் சோதித்துப் பார்க்க நோயாளிகள் முன்வரவில்லை. 1975 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிழைக்க வாய்ப்பு குறைவு. இன்று அதன் சதவீதம் 36 மாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகிறார்கள். காரணம், மனிதர்களின் உடல்களில் சோதிக்க சரியான ஏற்பாடுகளை இதுவரையிலும் செய்யவில்லை. இதனால் ஆராய்ச்சிகளை தொடங்கி முன்னேறினாலும் அதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், விலங்குகளைச் சோதித்து மனிதர்களை சோதிக்கும் நிலையில் நோயாளிகள் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை. பின் எப்படி மருந்துகள் சந்தையில் கிடைக்கும்? அரசின் விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. எனவே லெவைன் புற்றுநோய் கழகம், புற்றுநோய் ஆராய்ச்சி நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஃஎப்டிஏவை அணுகி, விதிகளை தளர்த்த கோரியுள்ளன. இந்த ஆண்டு பைடன்

குணத்தை மாற்றும் மூளை ஒட்டுண்ணி!

படம்
பூனைகளிடமிருந்து பரவும் டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி எலிகள், பிற விலங்குகளிடமிருந்து பரவி மனிதர்களையும் தாக்கியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி பாதிப்பு கொண்டவர்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஒட்டுண்ணி பாதிப்பால்  சிசோபெரெனியா, குணமாறுபாடு, தற்கொலை எண்ணம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது நேரடியான பாதிப்பை ஒருவருக்கு உடலில் ஏற்படுத்துவதில்லை. டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி ஒரு செல்லைக் கொண்டது. பறவைகள் முதல் பெலுகா திமிங்கலங்கள் வரை பாதிக்கிறது. பெரும்பாலும் பூனைகளிடமிருந்து பிற விலங்குகளுக்கு பரவுகிறது. முக்கியமாக பரவும் வழி, பாலுறவு. பூனைகளின் மலம் மூலமாக பிற விலங்களுக்கு பரவுகிறது. காற்று ஊடகமும் இதற்கு ஒத்துழைக்கிறது. மூளை, இதயம், கபாலத் தசை ஆகியவற்றை இந்த ஒட்டுண்ணி பாதிக்கிறது. டோக்ஸோபிளாஸ்மா, பாதித்த எலி பூனையைக்கண்டு பயப்படாமலிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதிர்ந்தனர். இந்த ஒட்டுண்ணியின் பாதிப்பு மறைமுகமாக ஏடிஹெச்டி பாதிப்பு ஏற்படவும் காரணம் என மற்றொரு வகையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றி : தி கன்ச