பெண்களை தலையில் அடித்து மயங்கச்செய்வதற்கான காரணம்! - சைக்கோ டைரி
பின்தொடரும் நிழலாய்.. இப்படி சொல்வது ரெமோ சிவாண்ணா ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஒத்துவரும். ஆனால் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உடல் தன் எல்லையை தாண்டி வதையை அனுபவித்து அலறவேண்டும். பிறரை பின்தொடருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்., நீங்கள் அவர்களுக்கு கொஞ்சமேனும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதுதான். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் நேரத்தை அவர்கள் விரயம் செய்வதில்லை கிடைத்த வாய்ப்பில் இரையை கடத்திக் கொண்டுபோய் சித்திரவதை செய்து கொல்வதுதான் ஒரே நோக்கம். உங்களுக்கு உதவட்டுமா? எப்படி பெண்களை மடக்குவது? அதற்கு இயக்குநர் சேரன் பாத்திரங்கள் போல பத்தி பத்தியாக பேசவேண்டுமா என்ன? சீரியல் கொலைகாரர்களைப் போல ஒன்லைன்தான். உங்கள் பைகளை தூக்கி வரட்டுமா? உங்கள் போனை பயன்படுத்திவிட்டு தரட்டுமா? என்னுடைய போன் தொலைந்துவிட்டது உங்களை கூட்டிக்கொண்டு செல்லட்டுமா? நானும் அந்த வழியாகத்தான் போகிறேன். என்னுடைய நாய்குட்டியை பார்க்கிறாயா? இப்படிக் கேட்டுத்தான் பலநாட்கள் பின்தொடர்ந்த இரையை மடக்குகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் பழைய ஐடியாக்கள். இப்போது இணையத்தில் டேட்டிங் சைட்டுகள், ப