இடுகைகள்

தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை தலையில் அடித்து மயங்கச்செய்வதற்கான காரணம்! - சைக்கோ டைரி

படம்
  பின்தொடரும் நிழலாய்.. இப்படி சொல்வது ரெமோ சிவாண்ணா ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஒத்துவரும். ஆனால் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உடல் தன் எல்லையை தாண்டி வதையை அனுபவித்து அலறவேண்டும். பிறரை பின்தொடருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்., நீங்கள் அவர்களுக்கு கொஞ்சமேனும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதுதான். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் நேரத்தை அவர்கள் விரயம் செய்வதில்லை  கிடைத்த வாய்ப்பில் இரையை கடத்திக் கொண்டுபோய் சித்திரவதை செய்து கொல்வதுதான் ஒரே நோக்கம்.  உங்களுக்கு உதவட்டுமா? எப்படி பெண்களை மடக்குவது? அதற்கு இயக்குநர் சேரன் பாத்திரங்கள் போல பத்தி பத்தியாக பேசவேண்டுமா என்ன? சீரியல் கொலைகாரர்களைப் போல ஒன்லைன்தான். உங்கள் பைகளை தூக்கி வரட்டுமா? உங்கள் போனை பயன்படுத்திவிட்டு தரட்டுமா? என்னுடைய போன் தொலைந்துவிட்டது உங்களை கூட்டிக்கொண்டு செல்லட்டுமா? நானும் அந்த வழியாகத்தான் போகிறேன்.  என்னுடைய நாய்குட்டியை பார்க்கிறாயா? இப்படிக் கேட்டுத்தான் பலநாட்கள் பின்தொடர்ந்த இரையை மடக்குகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் பழைய ஐடியாக்கள். இப்போது இணையத்தில் டேட்டிங் சைட்டுகள், ப

ட்ரோன்களுக்கு அனுமதி! - மத்திய அரசின் புதிய முடிவு!

படம்
  மத்திய அரசு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சான்றிதழை எளிமையாக அளிக்கும்படி விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டு உலகளவிலான ட்ரோன் மையமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகளிலும் பொருளாதாரம் வளரும் என நம்புவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் நாம் வானில் பறந்து வரும் ட்ரோன் டாக்சிகளை பார்க்க முடியும் என ஜோதிராவ் சிந்தியா கூறியுள்ளார். இவர்தான் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.  500 கி.கி அதிகமுள்ள ட்ரோன்களை பயன்படுத்தலாம் என அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 300 கி.கி எடையுள்ள ட்ரோன்கள்தான் அனுமதிக்கப்பட்டது.  சரக்குகளை கொண்டு செல்வதற்கு இனி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட  வாய்ப்பு அதிகம்.  இதில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் ஒரு லட்சம் என்று விதிக்கப்பட்டுள்ளது. பிற விதிகள் மீறும்போது அபராதம் கூடுதலாக இருக்கலாம்.  ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான விதிகள் மஞ்சள், பச்சை, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் பகுதியில் 12 முதல் 45 கி.மீ வரையில் பயன்படுத்தக்கூடாது என்றும், பச்சை பகுதியில் 8 முதல் 12 கி.மீ தொலைவு வரை பயன்படுத்தக்கூடாத

நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

படம்
        அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான் . தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம் . சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது , கொப்புளஙகள் ஏற்படுவது , அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது , பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம் . இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம் . வளர்ந்து வரும் நாடுகள் , வளரும் நாடுகள் , வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான் . இதையும் தாண்டி மலக்கட்டு , வயிற்றுப்போக்கு , குழந்தைகளின் அதீத செயல்பாடு , மைக்ரேன் தலைவலி , மன அழுத்தம் , ஆஸ்துமா , கண்களில் நீர் கொட்டுவது , கண் எரிச்சல் , ரைனிடிஸ் ( மூக்கில் ஏற்படும் பாதிப்பு ), உடல் சோர்வு , தோலில் அரிப்பு , எடை குறைவு ஆகியவை ஏற்படும் . பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா , கண் , மூக்கு எரிச்சல் , தோல் அரிப்பு , உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன . இதற்கு அறிகுறிகளை மட்டும

நோய் எதி்ர்ப்பு சக்தி செயல்படுவதை அறிந்துகொள்ளுங்கள்!

படம்
                  நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது எப்படி ? வைரஸ் பாக்டீரியா , பூஞ்சை என அனைத்து நுண்ணுயிரிகளையும் எதிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்திதான் . தடுப்பூசி என்பது கூட நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நோய் கிருமிகள் பற்றி அறிமுகப்படுத்தி வைப்பதுதான் . இதனால் மறுமுறை நோய்க்கிருமிகள் உடலில் தட்டுப்பட்டால் எளிதாக எதிர்கொள்ள முடியும் . உடலில் பரவி வரும் வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம் உள்ளது . இதனைப் புரிந்துகொண்டால் நோ்ய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொண்டு உடல்நலம் காக்கலா் . ம் . உடலிலும் உடலுக்கு வெளியிலும் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன . இவற்றை எதிர்த்து தாக்கி உடலைக் காப்பது என்பது எளிதான பணியல்ல . இந்த நோய் எதிர்ப்பு பணியில் உடலிலுள்ள பல்வேறு பாகங்களும் செயலாற்றுகின்றன . குறிப்பாக தோல் முதல் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வரை நோய்த்தடுப்பில் உதவுகின்றன . ஆனால் இது நிலையாக இப்படித்தான் செயல்படும் என்று கூற முடியாது . நோய் எதிர்ப்பு சக்திக்கு உள்ள நினைவுத்திறன்தான் நோயை எதிர்க்க பெரும்பாலும் பயன்படுகிறது . தோல் பற்றி முன்னமே எழுதியது ப

மூளையில் சுரக்கும் எக்ஸ்ட்ரா டோபமைன் குற்றத்திற்கு ஆதாரமூலமா?

படம்
          குற்றமும் மனமும் டெட் பண்டியைப் பற்றி நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள் . அமெரிக்காவில் பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொல்வதில் புகழ்பெற்றவர் . குற்றம் செய்வதில் டாக்சி டிரைவர் ஜெஸ்பர்சனைப் போன்ற மனமுடையவர் . முதல் குற்றம் , இரண்டாம் குற்றம் என அவரது கொலை செய்வதின் அடிமைத்தனம் கூடிக்கொண்டே சென்றது . டெட் பண்டியைப் பற்றிய குறிப்பிடதக்க அம்சம் , செய்த குற்றத்தை புத்திசாலித்தனமாக செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டியதுதான் . 1978 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிப்ரவரி மாதம் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் தங்குமிடத்தில் நுழைந்தார் . அங்கு நான்கு பெண்களை படுகாயப்படுத்தி இரு பெண்களைக் கொன்றார் . 1976 ஆம் ஆண்டு டெட்டுக்கு பெண்களை கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்றது . அப்போதே அவர் டஜன் கணக்கிலான பெண்களை கொன்றிருந்தார் . ஆனால் அப்போது நீதிமன்றம் அவர் எப்படிப்பட்ட கொலைகாரர் என்பதை அறியவில்லை . பல்வே்று உளவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலிலிருந்து காயங்களைப் பார்த்து கொலை செய்தவர் ஆபத்தான மனிதர் என முடிவுக்கு வந்தனர் . இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் அல் கா

புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

படம்
                நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க . பூர்ணச்சந்திரன் காலச்சுவடு பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள் , நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார் . 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது . படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம் . அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார் . மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது , அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது . அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது . ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோ

இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்

படம்
                  பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன் ! மொகமது டெய்ப் மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம் , கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது . இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது . ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார் . பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் , மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து . இல்லை . பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார் . . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது . அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர் . மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட

பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை எப்படியிருந்தது?

படம்
                கொரோனா காலத்தில் உறவுகளின் நிலை ! கொரோனா காலம் ஒராண்டை பறித்துக்கொண்டுவிட்டது . பிற நாடுகளில் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு நோயைக்கூட விழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ளது . இந்த காலத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலையிழப்பு , சம்பள வெட்டு , பணி அழுத்தம் , வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் வெறுமை் என நிறைய சிக்கல்களை ஒருவர் சமாளிக்கவேண்டும் . கூடுதலாக மணமானவர்கள் அதிகநேரம் வீட்டிலேயே செலவழிக்க வேண்டியுள்ளது . இதன் காரணமாக அவர்களுக்குள் இன்ஸ்டன்ட் சண்டைகள் அதிகரித்துள்ளன . குழந்தைப் பிறப்புகள் குறைந்துள்ளன என்று ஆய்வுகள் கூறினாலும் அதேயளவு குடும்ப வன்முறைகளும் கூடி உள்ளன . நாம் இதில் பெண்களின் நிலை பற்றி பார்ப்போம் . வீட்டில் பெண்களுக்கு தங்களது ஆபீஸ் வேலைகள் தவிர வீட்டு வேலைகளும் இந்த காலகட்டத்தில் குறையவில்லை . அவர்களுக்கும் மன அழுத்தம் , நிதிசார்ந்த சிக்கல் , பெற்றோராக கடமைகள் என அனைத்தும் குவிகின்றன . பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது . ரேஷ்குர்ரம் படத்தில் விரக்தியான போலீஸ்காரராக காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடித்திருப்பார் . அந்த

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்ன

எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது! - ரோன் மால்கா, இஸ்ரேலிய தூதர், இந்தியா

படம்
            ரோன் மால்கா இஸ்ரேல் தூதர் , இந்தியா     இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது . இதனை எப்படி அறிந்தீர்கள் ? எங்களது அமைப்பு மிகவும் வேகமாக தகவல்களை அறியக்கூடியது . அதனால் குண்டுவெடிப்பு நடந்தவுடனே அதிகாரிகளிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துவிட்டது . இப்படி நடந்திருப்பதால் நாங்கள் விழிப்புடனும் , அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகவே இருக்கிறோம் . கடந்த சில நாட்களாகவே நாங்கள் பல்வேறு மிரட்டல்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம் . இந்த வெடிகுண்டு மூலம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் யூகித்துவிட்டோம் . எனவே தேவையான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் உங்களுக்கு வந்த மிரட்டல்களை பற்றி சொன்னீர்கள் . அதனை விரிவாக சொல்ல முடியுமா ? இவையெல்லாம் இஸ்ரேல் தொடர்புடையதுதான் . நாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் . இதனால் ஈரான் அரசு , லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன . நாங்கள் எங்கள் எதிரிகளை குறை்த்து மதிப்பிடவில்லை . நாங்கள் இவற்றை தீவிரமாகவே அண