இடுகைகள்

விபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்

விமானங்களின் தொழில்நுட்பத்தை 5 ஜி சேவை பாதிக்குமா?

படம்
  விமான சேவையை பாதிக்கிறதா 5 G? அமெரிக்காவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, விமானங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் என விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கருதியது. இது பற்றிய அறிவுறுத்தலை, விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விடுத்தது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.  பயம் ஏன்? அமெரிக்காவில் உள்ள வெரிஸோன், ஏடி அண்ட் டி ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சி பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளன.  இதன்விளைவாக விமானங்களில் தரையிறங்க, உயரத்தைக் கணிக்கப் பயன்படுத்தும் ரேடியோ அல்டிமீட்டர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசின் வான்வழி போக்குவரத்து முகமை (FAA) எச்சரித்தது. எனவே, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி, பயணத்திட்டத்தை மாற்றின.   பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போயிங் 777 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் சிக்னல்களை 5 ஜி சேவை,  இடைமறித்து பாதிக்கும் என பலரும் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் போஸ்டன், சிகாகோ நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ

கடல் சூழலைக் கெடுக்கும் எண்ணெய்!

படம்
  தெரியுமா? கடலை மாசுபடுத்தும் எண்ணெய்! கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், விபத்துக்குள்ளாகி நீரில் எண்ணெய்யை சிந்துவது உண்டு. இதனை வேகமாக செயல்பட்டு சுத்தம் செய்யவேண்டும். இல்லையெனில், அது கடலில் பரவி கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் கடல் பரப்பில் நெருப்பு பற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக நீரை நச்சாக மாற்றுகிறது. கடல் நீரில் மிதக்கும் எண்ணெய்யை சேகரித்து எடுக்க, ஆயில் ஸ்கிம்மர் (oil skimmer)என்ற கருவி பயன்படுகிறது. இதில் சேகரிக்கப்படும் எண்ணெய்யை எளிதாக அகற்றிவிட முடியும்.  கடலில் கொட்டும் அல்லது கசியும் எண்ணெய், கடல் பறவைகள், உயிரினங்கள் உடல் மீது படிகிறது. இதன் காரணமாக அவற்றால் பறக்க, நீந்த முடியாது. அவற்றின் உணவையும் நச்சாக்குவதால், நீண்டகால நோக்கில் உணவுச்சங்கிலியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  1989ஆம் ஆண்டு எக்ஸான் வால்டெஸ் நிறுவனத்தின் டேங்கர், கடலில் 4 கோடியே 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை சிந்தியது. இதன் காரணமாக 2,100 கி.மீ. தூர கடல் பகுதி பாதிக்கப்பட்டது. இதனை கடலிலிருந்து அகற்ற 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. கடல்நீரிலுள்ள எண்ணெய் பரவாதபடி கயி

உண்மையின் விலை என்ன? - ஜல்சா - வித்யா பாலன்

படம்
  ஜல்சா வித்யாபாலன், ஷெபாலி ஷா அமேஸான் பிரைம் அடுத்தவர்கள் நேர்மையாக மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்பதை பேசும் படம்.  மாயாமேனன், வேர்ட் எனும் வலைத்தள செய்தி நிறுவனத்தின் எடிட்டர். பிறரிடம் கேள்வி கேட்டு உண்மையை வாங்குவதில் திறமையானவர். இது, நிறைய அதிகாரிகளை நீதிபதிகளை சங்கடப்படுத்துகிறது. ஆனால் மாயாவுக்கு அதுபற்றி பெரிய வருத்தமில்லை. எனது வேலை கேள்வி கேட்பது என உறுதியாக நம்புகிறார். இவரின் ஸ்ட்ரெய்ட் டாக் என்ற நிகழ்ச்சி புகழ்பெற்ற ஒன்று. இதற்காக உருவாக்கப்படும் பேனர்கள் நகரமெங்கும் வைக்கப்படுகின்றன. பின் வரும் காட்சிகளில் இந்த போர்ட்டுகளே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது. மாயாமேனன், செய்தி வலைத்தளத்தின் எடிட்டர். நெடுநேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர். வீட்டில் உள்ள அம்மா, மகன் ஆகியோரை தன் கையிலுள்ள போன் மூலமே பார்த்து எப்படியிருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறார். அனைத்துமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். ஆனால், ஒருநாள் இரவு வேலைப்பளுவால் நள்ளிரவு தாண்டி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார். ஏறத்தாழ அதிகாலை நே

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர

தசைகளுக்கு எப்போதும் பயிற்சி அவசியம்!

படம்
            தசை அமைப்புகள்தான் எலும்புகளில் பொருந்தி நாம் உடலை அசைக்கவும் எழுந்து நிற்கவும் பல்வேறு வேலைகளை செய்யவும் உதவுகின்றன . வயிற்றுக்குள் உணவு செல்லவும் , நுரையீரலுக்கு காற்று செல்லவும் , ரத்தம் உடலெங்கும் செல்லவும் உதவுகின்றன . ஆனால் சரியான பயிற்சி இல்லாதபோது தசைகள் தங்கள் பலத்தை இழந்துவிடுகின்றன . புவியீர்ப்பு விசையும் தசைகளின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தன்மையை ஏற்படுத்துகின்றன . ஒருவரின் உடல் எடையில் தசைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது . விபத்துக்குள்ளாகி அல்லது நோயில் ஒருவர் படுத்த படுக்கையாகி மீண்டும் எழும்போது உடலில் வித்தியாசத்தை உணரலாம் . அதாவது , உடல் நடக்கவும் , நிற்கவும் தடுமாறும் . இதற்குக் காரணம் , தசைகளுக்கு சிறிது காலம் எந்த பயிற்சியும் கொடுக்காமல் இருப்பதே . இதனை தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும் . இல்லையென்றால் அதனை இழந்துவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள் மருத்துவர்கள் . ஒருவர் வெய்ட் லிப்டிங் பயிற்சி செய்யும்போது அதில் 700 சிறு தசைகள் இணைகின்றன என்கின்றனர் . உடல் பல்வேறு வேலைகளை செய்யும்போது அதில் தசைகள் மு

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

இடம்பெயரும் யானைகள்!

படம்
  இடம்பெயரும் யானைகள்! நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாய நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் யானைகளின் வாழிடம் சுருங்கிவருகிறது. இதன் விளைவாக ஆசிய யானைகள் (Elephas maximus), இமாலய மலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அறிவியல் இதழ் டைவர்சிட்டி அண்ட் டிஸ்ட்ரிபூஷன் தகவல் வெளியிட்டுள்ளது.  இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆசிய யானைகளில் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 26,330 முதல் 37,770 வரையிலான யானைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் யானைகள் வாழ்ந்து வந்த 2,56,518 ச.கி.மீ வனப் பரப்பு (41.8%) அழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகரித்துவருவதோடு, பஞ்சமும் அடுத்த சவாலாக எதிரே நிற்கிறது. எனவே, யானைகள் நீர், உணவுக்கு பிரச்னை இல்லாத மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. யானைகள் நடமாடும் 101 பகுதிகளிலுள்ள மனிதர்கள், உணவு தேடிவரும் யானைகளை கண்டு திகிலில் உள்ளனர்.  தகவல்: DowntoEarth

ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!

படம்
              ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர் ! கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று , சிவ்பால் சிங் , தனது இரண்டரை வயது மகனை விபத்தில் இறந்தார் . விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் , மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது . இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங் , ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார் . மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் . சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார் . இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும் , இவர் மட்டுமே 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர் . ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும் . ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம் என்றார் சிவ்பால்

தானியங்கி கார் ஆராய்ச்சி உண்மையில் நிஜமாகும் வாய்ப்புள்ளதா?

படம்
              தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம் ! டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது . தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது . ’’’ தானியங்கி முறையில் இயங்கும் காரில் , தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது . எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள் . கவனமாக இருங்கள்’ ' என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன . தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது . ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின . தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின . ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை . இதற்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன ? தானியங்கி

ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் புதிய வடிவமைப்பிலான சென்சார்! - தொழிற்சாலை, மருத்துவப் பயன்பாடுகளுக்கானது.

படம்
            ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் சென்சார் ! பட்டாம்பூச்சியின் இறக்கையில் உள்ள போட்டோனிக் நானோ அமைப்பை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர் . தற்போது , அந்த வடிவமைப்பில் ஹைட்ரஜன் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யிலாஸ் சப்ரி , அஹ்மது கன்ட்ஜானி ஆகிய ஆராய்ச்சியாளர்களே இதன் பிரம்மா . புதிய ஹைட்ரஜன் சென்சார் , தொழில்துறையிலும் , ஹைட்ரஜன் வாயுவை சேமிக்கும் இடங்களிலும் , மருத்துவச்சோதனைகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது . புதுப்பிக்கும் ஆற்றல் மூலமான ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கி சேமித்து வருகின்றனர் . எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாக வாயுவாக ஹைட்ரஜன் உள்ளது . எனவே , அதன் கசிவை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட சென்சார்களின் தேவை உள்ளது . தற்போது சந்தையில் கிடைக்கும் சென்சார்களில் உள்ள உலோக ஆக்சைடு அடுக்குகள் ஹைட்ரஜனை கண்டுபிடிக்க உதவுகின்றன . இவற்றில் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன . 150 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலையில் செயல்படும் இவை , பல்வேறு

தானியங்கி கார்களின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் சுணக்கம் ஏன்? முக்கியமான காரணங்கள் இவைதான்!

படம்
              தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம் ! டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது . தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது . ’’’ தானியங்கி முறையில் இயங்கும் காரில் , தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது . எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள் . கவனமாக இருங்கள்’ ' என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன . தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது . ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின . தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின . ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை . இதற்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன ? தானியங்கி

மாற்றுத்திறனாளி தன் குறைகளை மறைத்து சாதாரண மனிதராக காதலித்து வாழ முடியுமா? வேர் ஸ்டார்ஸ் லேண்ட்? கொரிய டிவி தொடர் 2008

படம்
    வேர் ஸ்டார்ஸ் லேண்ட் sbs tv தொடர் 16 எபிசோடுகள் October 1 to November 26, 2018 Genre: Romance, Melodrama Written by: Kang Eun-kyung Directed by: Shin Woo-chul இன்ச்கான் விமானநிலையம். கதை முழுக்க இங்குதான் நடைபெறுகிறது. இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு ஆண்டாக சென்று வந்துகொண்டிருக்கிறாள் மிஸ் ஹான். வேலை பார்ப்பது சரியில்லை என இவளை மிஸ் யாங் குழுவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது மிஸ் யாங்கின் சீனியர் ஆபீசர் லீ செய்யும் வேலைதான். அவருக்கு ஹானைப் பார்க்க, தான் பயிற்சி கொடுத்த மிஸ் யாங்கை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது போலவே இருக்கிறது. ஹானைப் பொறுத்தவரை விமானங்களை நட்சத்திரமாகவே பாவிக்கிற கனவு ஜீவி. நன்றாக தூங்குவது அடித்து பிடித்து ஆபீஸ் வருவது, அங்குள்ள அலுவலகங்களை பார்த்து மிரள்வது, அனைத்துக்கும் ஸாரி கேட்டு மேனேஜர் காங்கை ரத்த அழுத்தம் வரும்படி அலறவைப்பது என ஏகத்தும் செய்கிறாள். பயணிகளின் சேவைப்பிரிவு ஹானுக்கு புதியது. அங்கு வரும்போது, லீ சூ என்பவரை சந்திக்கிறாள். லீ சூ காசு கொடுத்தால் கூட பேசாத ஆள். அவர் ஹானை முன்னமே சந்தித்த  அனுபவம் கொண்டவர். ஹானைப் பொறுத்தவரை எப்படியோ வேல