இடுகைகள்

-Mr.ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சப்ளிமெண்டுகளை சாப்பிடுவது அவசியமா?

படம்
pixabay சப்ளிமெண்டுகள் நமக்குத் தேவையா?   உணவில் போதிய சத்துகள் உங்களுக்கு கிடைக்காது என எபாங்க் சபாங்க் பானங்கள் வெகு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வருகின்றன. மேலும் அதே நிறுவனங்கள் தனி பிராண்டுகளாக சத்து மாத்திரைகளையும் பிரபல நடிகர்களை வைத்து விளம்பரங்களைச் செய்து வருகின்றன.  உண்மையில் இந்த மாத்திரைகள் நமக்கு தேவைதானா? என நாற்பது வயதுக்குப் பிறகு நமக்குமே தோன்ற ஆரம்பிக்கும். அதைப்பற்றி அறிவோம் வாங்க.  உண்மையில் நமக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் நாம் இயற்கையில் பெறுவது மிகவும் கடினம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பெரும்பாலானவை உலோகங்களை பகுதிப் பொருட்களாக கொண்டவை. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று அப்பொருட்களை டப்பா செட்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டால் விரைவில் உங்கள் அலுவலக நண்பர்கள் மனமகிழ்ச்சியுடன் உங்கள் கல்லறையில் மலர்வளையம் வைத்து விடுவார்கள். எனவே நாம் அவர்கள் அந்த மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. உடலை அவ்வப்போது சோதித்து பக்கவிளைவு குறைவான, அடிப்படை விளைவுகள் அதிகமான மருந்துகளை சாப்பிடலாம். காரணம், நாற்பது வயதிற்குப்

பீர் பெல்லிக்கு என்ன கார ணம் அறிவீர்களா?

படம்
பிக்சாபே பீர் பிற மதுபானங்களை குடிக்காத நேர் வகிடு எடுத்து சீவிய நல்லவர்கள் கூட பீர்தானே ஆல்கஹால் குறைவு என கல்பாக எடுத்து அடிப்பார்கள். அந்தளவு நல்லவனா கெட்டவனா என பலருக்கும் புரியாத மதுபானம், பீர். இதனை மனிதர்களே தயாரித்தனர் என்பது நமக்கான பெருமை.  பொதுவாக அனைத்து பானங்களும் எப்படி தயாரிக்கப்படுகின்றன? தானியங்கள் அல்லது பழங்கள்தானே! இதுவும் அப்படித்தான். தானியங்களை சூடான நீரில் ஊறவைத்து அவற்றிலுள்ள சர்க்கரையைப் பெற்று பீர் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு பதப்படுத்தும் நிலைகள் உள்ளன.  இன்று காமராஜர் சாலைகளிலுள்ள பேக்கரிகளில் ஃப்ரூட் பீர் ஏகபோகமாக விற்கப்படுகிறது. அதனை அனிமேஷன் படிக்கும் அண்ணாத்தைகள் வாங்கிப் பருகி மகிழ்கின்றனர். இதில் ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே டாஸ்மாக்கில் வைக்கப்படவில்லை. அப்படி வந்தாலும் மால்களில் உள்ள எலைட் கடைகளில் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். நம் அந்தஸ்து கூட்டத்தில் முட்டிமோதி கெட்டுவிட்டால் என்னாகும்? ஜென்டில்மேனாக பீர் குடித்தாலே வரலாறு நம்மை மறக்காது.  பீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மினரல்கள் பல்வேறு விஷயங்கள் உள்ள

இன்ஸ்டன்ட் காபி ரெடியாவது இப்படித்தான்!

படம்
pixabay காபி எங்களது பத்திரிகை அலுவலகம் உள்ள காம்ப்ளக்சை மணக்க வைப்பது சத்யா காபிக்கடைதான். இத்தனைக்கும் காபி தயாரித்து வழங்கும் கடை அல்ல. காபி பொடியை அரைத்து விற்கும் கடைதான். நூற்றுக்கணக்கு மேலான கடைகள் இருந்தாலும் அந்த கட்டடத்திற்கு அடையாளமாக அந்தக் காபிக்கடை மாறிவிட்டது.    கொஞ்சம் தள்ளி நடந்து வந்தால், மயிலாப்பூரில் டீக்கடைகளுக்கு செம போட்டியாக இருப்பது, லியோ காபி, கிரைண்ட் காபி, கோத்தாஸ் காபி கடைகள்தான். இதில் லியோ காபி, கிரைண்ட் காபி ஆகியவை காபி பொடியோடு காபியையும் தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர்.  காபிகளில் இரண்டு வகை உண்டு. அராபிகா, ரோபஸ்டா. இதில் அராபிகா விலை அதிகம். மெதுவாக வளரும் காபி இனம். காஃபீன் அளவும் அதிகமாக உள்ளது.  காபிச்சொடி வளர்ந்து காபி கொட்டைகளை அறுவடை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவை. பச்சையாக இருக்கும் கொட்டைகளின் மேலோடு சிவப்பாக மாறியபின் அறுவடை தொடங்கும். சிவப்பாக உள்ள மேலோடு வெயிலில் காய வைத்து அகற்றப்படுகிறது. இதிலுள்ள பீன்ஸ் முதலில் பச்சையாகவே இருக்கும். பின் அதனை வறுத்து பக்குவப்படுத்தும்போது அதன் நிறம் கருப்பாக மாறுகிற

பழச்சாறு vs ஸ்மூத்தி Vs கார்பன் பானங்கள் எது சிறந்தது?

படம்
pixabay உடனுக்குடன் பிழியப்பட்ட பழச்சாறு, பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கான்சென்ட்ரேட் என இரண்டு இருக்கிறது. இவற்றில் எது நல்லது? இரண்டிலும் வித்தியாசம் ஏதுமில்லை. கான்சென்ட்ரேட்டில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதாவது ப்ரக்டோஸ். இது கலோரி அளவைக் கூட்டுகிறது. இது சிறுவர்களின் பற்களை பெருமளவு பாதிக்கிறது. பெப்சி, கோலா இவற்றைவிட பழரசம் சிறப்பானது என நினைப்பீர்கள். ஆனால் பழரசத்தில் சர்க்கரை அளவை குறைத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு போன்ற பிரச்னைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். இல்லையெனில் நீரிழிவு பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல ப்ரூட்மிக்ஸ் குடிக்கிற சிறுவர்களுக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது. பழங்கள், காய்கறிகளை கலந்து செய்யும் ஸ்மூத்தி பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை கவனமாக தயாரிக்கவேண்டும். ஒவ்வொரு பழங்களுக்கும் உள்ள தன்மையைப் பொறுத்தே அவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். இவற்றைக் குடித்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் இதிலுள்ள இயற்கையான சர்க்கரையும் கூட பற்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பழச்சாறுகளையோ

உணவுத்துறையில் பயன்படும் பூஞ்சைகள்!

படம்
பூஞ்சைகளை அறிவோம்! பூஞ்சைகள் நுண்ணுயிரிகளில் முக்கியமானவை. இவை காளான்களை புரதம் மிக்க உணவாக மாற்றுகின்றன. நேரடியாக இல்லாவிட்டாலும் பிரெட், சீஸ், சோயா சாஸ் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. பூஞ்சைகள் பல்வேறு உணவுப்பொருட்களை பதப்படுத்துதலில் பயன்படுகின்றன.  பூஞ்சைகளில் நூற்றுக்கும் அதிகமான நச்சு இனங்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருகளில் பூஞ்சைகள் பயன்படுகின்றன. விஷமுள்ளவை, விஷமற்றவை என்பதில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. கவனமாக காளான் குடைகளை பார்த்தால் மட்டுமே அறிய முடியும். இதில் உருவாகும் நச்சை மைக்கோடாக்சின் என்கின்றனர். மைக்கோடாக்சின் என்பது பொதுப்பெயர்தான். காளான்களில் மட்டுமே உருவாகும் நச்சை அமாடாக்சின் என்கிறார்கள். வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் ஆஸ்பெர்கில்லஸ் பேவஸ் எனும் பூஞ்சை வளருகிறது. இதனை கவனிக்காமல் விலங்குகளோ மனிதர்களோ சாப்பிட்டு விட்டால் கல்லீரல் கெட்டு இறப்பு நேரும். மனிதர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்