இடுகைகள்

அறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கல்வியை பள்ளிகள் வழங்குகின்றனவா? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி எது? - ஜே கே 1 கல்வி கற்காத மனிதன் யார்? பள்ளி செல்லாதவன், தன்னை முழுக்க அறியாதவன்தான். பள்ளி சென்றாலும் நூல்களை மட்டும் படித்தவன் முட்டாளாக இருக்க வாய்ப்புண்டு. அவன் அரசு, அதிகார வர்க்கம் தரும் தகவல்களை மட்டுமே அறிந்திருப்பான். புரிந்துகொண்டிருப்பான்.  ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் என்பது சுயமாக கற்றல் என்பதன் வழியாக சாத்தியமாகிறது. இது ஒருவரின் மனதில் நடைபெறும் உளவியல் கற்றல் செயல்முறையைப் பொறுத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குள் தன்னை உணர்ந்துகொண்டு கற்பதுதான் கல்வி என்று கூறவேண்டும்.  புத்தகங்களைப் படித்து அதிலிருந்து நாம் பெறும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் கல்வி என்று சொல்லுகிறோம். இதை யார் வேண்டுமானாலும் பெறமுடியும். புத்தகங்களை வாசிக்கத் தெரிந்தால் போதுமானது. இப்படி பெறும் அறிவு மனிதர்களிடையே கொள்ளும் மோசமான உறவு, சிக்கல்கள், எடுக்கும் முடிவு ஆகியவற்றுக்கும் முக்கியமான காரணமாகிறது. ஏறத்தாழ ஒருவரை குழப்பத்திற்குள் ஆழ்த்தி அவரை மெல்ல அழிக்கிறது.  கல்வி கற்க ஒருவருக்கு உள்ள வாய்ப்பு பள்ளி மட்டுமேதானா? நமது சமூகம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாம் பிள்ளைகளை

தசை இயக்கம் பற்றிய அறிவை ஆய்வாளர்கள் பெற உதவியவர்! - ஜீன் ஹான்சன்

படம்
  ஜீன் ஹான்சன் (Jean hanson 1919-1973) இங்கிலாந்தின் டெர்பிஷையர் நகரில் பிறந்தவர். பெற்றோர் டாம், எமிலி ஹான்சன் 1951ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் படித்து முனைவர் பட்டம் பெற்றார். தான் வாழ்நாளின் இறுதிவரை, இதே கல்லூரியில்தான் உயிரி இயற்பியலில் ஆராய்ச்சி செய்தார் ஜீன் ஹான்சன்.  1953ஆம் ஆண்டு ஹியூ ஹக்ஸ்லே என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்தார். இவரின் ஆதரவுடன்  எம்ஐடியில் ராக்ஃபெல்லர் உதவித்தொகையுடன் மின்னணு நுண்ணோக்கியில் தசைகளின் இயக்கம் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  தசை, அதிலுள்ள புரதம் சார்ந்த இயக்கம் பற்றிய ஆராய்ச்சியை செய்தார். இதற்குப் பிறகு முதுகெலும்பில்லாத உயிரினங்களின் தசைகளைப் பற்றி ஆராய்ந்தார்.   1966ஆம் ஆண்டு கிங் கல்லூரியில் உள்ள உயிரி இயற்பியல் துறையின் தலைவரானார். ஜீனின் தசை இயக்கம் பற்றிய ஆராய்ச்சி விளையாட்டு வீரர்கள் எப்படி வேகமாக ஓடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவியது. இதயத்தசைகளை அறுவை சிகிச்சை செய்வது, காயங்களிலிருந்து உடல் மீள்வது பற்றிய அறிவை அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் பெற ஜீன் உதவினார்.  https://kingscollections.org/exhibitions/archiv

உளவியலும் அதன் மேம்பாடும்!

படம்
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக உளவியல் துறை சிறப்பான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உளவியல் சார்ந்த விஷயங்களுக்கு க்ரீஸ், பெர்சியா ஆகிய நாட்டு ஆராய்ச்சியாளர்களே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர். உளவியல் துறை அடைந்த முன்னேற்றங்களைக் குறித்து பார்ப்போம். கிரேக்கம் கி.பி 1550ஆம் ஆண்டி எபிரஸ் பாபிரஸ் எனும் இதழில் மன அழுத்தம் பற்றி எழுதப்பட்டுள்ளது. கிபி 47- 370 காலகட்டத்தில் டெமோகிரைடஸ் உணர்வுகளின் மூலம் நாம் பெறும் அறிவு குறித்து உலகிற்கு அறிவித்தார். ஹிப்போகிரேட்டஸ் மனநலன்களுக்கான மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று அதற்கான விதிமுறைகளை வகுத்தார். கிபி 387 இல் பிளேட்டோ, மனிதனின் மூளைதான் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு காரணம் என்று கூறினார். 350ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில் (பிளேட்டோ மாணவர், பின்னாளில் பிளேட்டோ சொன்ன கருத்துகளை மறுத்தவர்) டி அனிமா, டபுலா ரசா  எனும் உளவியல் சார்ந்த பதங்களை அறிமுகப்படுத்தினார். விளக்கினார். 300-30 காலகட்டத்தில் ஸெனோ, ஸ்டோய்சம் எனும் மனநிலை பற்றிய தன்மையை கற்பித்து வந்தார். இதனை 1960 இல் சிபிடி என்று பழக்க வழக்கம் சார்ந்த தெரபியாக உளவியலாளர்கள் வர

இருமடங்கு புத்திசாலித்தனத்தின் விளைவு?

படம்
டாக்டர். எக்ஸ் நாம் இப்போது இருப்பதை விட புத்திசாலியாக இருந்திருந்தால்..... ஜியோமி போன்களை நோக்கியாவுக்கு முன்பே கண்டுபிடித்திருப்போம். 48 எம்பி கேமராவை வைத்து கிளு கிளு வீடியோக்களை உருவாக்கி பஞ்சாயத்து செய்திருப்போம். பிட்காயின்களில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்திருப்போம். ஹாலோகிராமில் பல்வேறு வித்தைகள் செய்திருப்போம். விண்வெளியில் காலனிகள் அமைந்திருக்கும் என ஏகமாக கற்பனைகள் பறக்கிறதா? பத்தொன்பதாம் நூற்றாண்டு புத்திசாலி ஆய்வாளரான ஐசக் நியூட்டனுக்கு கூட நாம் ஐக்யூ டெஸ்ட் செய்யவில்லை. அதிபுத்திசாலி என்பதால் ஐக்யூ டெஸ்ட் 200 மதிப்பெண்களுக்கு வைக்கப் போவதில்லை. புத்திசாலித்தன காரியங்களை விட அதை நிரூபிக்கத்தான் அதிக விஷயங்கள் செய்யவேண்டியிருக்கிறது இல்லையா?

நூல் வெளி

35 இந்தியப்பிரிவினை சினிமா யமுனா ராஜேந்திரன் உயிர்மை பதிப்பகம்                                                      பக்சி இந்நூலில் பிரிவினையைப்பற்றிய பிரச்சனைகளைப்பேசும் 7 படங்கள் அவற்றின் கதை, அது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய முழுமையான விளக்கம் என நம்முன் வைக்கிறது. இதில் நான் முழுமையாக பார்த்திருப்பது தீபா மேத்தா இயக்கிய எர்த் படம் ஒன்றைத்தான். 1999 ல் வந்த இப்படம் பாப்ஸி லபித்வா எனும் பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய Cracking India   எனும் நாவலை மூலமாக கொண்டது. இதில் வரும் காட்சிகள், பிரிவினை கலவரங்களை சூழல்களை ஓரளவு உணர்த்தும்படியான காட்சிகளைக்கொண்டுள்ளன என்று கூறலாம். கதையைக்கூறும் லெனி தன் உறவினரான சிறுவனோடு எதிரில் உள்ள சிறுவனோடு நிகழ்த்தும்   காட்சி எனக்கு பிடித்தமானது என்பேன்.   லெனியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பில் துக்கம், மகிழ்ச்சி, வலி என   அத்தனையையும் அந்த முகம் வெளிப்படுத்துகிறது. அமீர்கான் முஸ்லீம் மக்கள் இந்துமக்களை கொன்று குவிப்பதை சிரிப்புடன் ரசிக்கும் காட்சியில் பதறும் நந்திதாதாஸின் முகபாவம் ஒன்றேபோதும்; அவரது நடிப்பிற்கு சான்றுகூற. இது

நூல் வெளி

பாரதிபுரம் ஆசிரியர்: யு. ஆர். அனந்தமூர்த்தி பதிப்பகம்: அம்ருதா, சென்னை.                                            ஜெர்ரி – ப்ளம்      பிராமணக்குடும்பத்தில் பிறந்த ஜகன்னாத ராயன் லண்டனில் மேற்படிப்பு படித்துவிட்டு, பாரதிபுரம் எனும் அவனது சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு மனிதர்களை அடிமைபோல கசக்கிப்பிழியும் சாதி மனோபாவம் எங்கும் துளிர்விட்டிருக்க, அதைக்களைய பல்வேறு வழிகளில் அவன் முயற்சிக்கிறான். என்னவானது அவன் முயற்சிகள்? போராட்டத்தில் வென்றானா என்று கூறுகிறது நாவலின் உச்சப்பகுதிகள்.      நாவல் பயணிப்பது ஊருக்கே முதல்வனான மஞ்சுநாத சாமியைக் காப்பாற்றும், போற்றும் குடும்பத்து மனிதனின் பார்வை வழியில் என்பதைத்தெரிந்துகொள்ளவேண்டும். முழுக்க ஐரோப்பிய வழியில் படித்தவர்களின் அறிவுசார்ந்த தளத்திலான தேடல்கள், தவிப்புகள், சிந்தனைகள், உரையாடல்கள் அமைகிறது. புராணிகர் பேசுவது அதன் தன்மை கெடாத வகையில் ஆங்கிலத்தில் வருகிறது.      உயர்ஜாதியினைச்சேர்ந்தவனின் மனதளவில் ஒரு செயலினைச் செய்ய நினைப்பதற்கும், அதனைச்செய்யும்போது ஏற்படும் சமூகத்தின் எதிர்வினைக்கான பதட்டத்தினையும், பலம், பலவீனத்தைய