ஆர்எஸ்எஸ்ஸின் நிழலுடன்தான் எதிர்க்கட்சிகள் போரிட்டு வருகின்றன! - பத்ரி நாராயணன், சமூக வரலாற்று அறிஞர்
பத்ரி நாராயணன் சமூக வரலாற்று அறிவியலாளர் பத்ரி நாராயணன் , ஆதி திராவிடர் மற்றும் இந்துத்துவா பற்றி பல்வேறு கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளார் . அண்மையில் ரீபப்ளிக் ஆப் இந்துத்துவா என்ற நூலை எழுதியுள்ளார் . இதில் எப்படி இந்துத்துவா தன்னை மறுகட்டமைப்பு செய்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைக் கூறியுள்ளார் . இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பவர்கள் , அதன் நிழலுடன்தான் போரிடுகிறார்கள் . இந்துத்துவ தத்துவத்தின் கர்ப்பகிரகம் என ஆர்எ்ஸ்எஸை நீங்கள் கூறியுள்ளீர்களே ? தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கம் , தாராளமயமாக்கம் அறிமுகமானது . அப்போதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பை நவீன காலகட்டத்திற்கு ஏற்றபடி தனது கொள்கைகளையும் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றி அமைத்து வருகிறது . இன்று ஒருவர் பல்வேறு சமூக பிரச்னைகள் சார்ந்து ஆர்எஸ்எ்ஸ் அமைப்பை கேள்விகள் கேட்டாலும் அதனிடம் அதற்கான பதில்கள் உள்ளன . அண்மையில் கூட அதன் தலைவர் மோகன் பகவத் , கோல்வால்கரின் பேச்சுகள் அடங்கிய தொகுதியில் கூற்ப்பட்ட சில கருத்துகளை நாம் மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . காலமும் , மக்களும் ம