இடுகைகள்

இனவெறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதா

தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  சூயஸ் கால்வாய் கட்டப்பட்டபிறகு வணிகம் அதிகரித்ததை இங்கு முன்னமே எழுதியிருக்கிறோம். இதற்கு முன்னர், ஐரோப்பியர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? தென் ஆப்பிரிக்கா வழியாக சென்று ஆசியாவை அடைந்து வணிகம் செய்தார்கள். வணிக உதவிகளுக்காக இங்கு பல்வேறு வணிக மையங்களை அமைத்து இருந்தனர். துறைமுகங்களையும் இந்த முறையில் அமைத்து வணிகம் கெடாதபடி பார்த்துக்கொண்டனர்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை இனவெறி கொண்டு பிரித்தனர். அவர்களை ஆப்பிரிக்கானர்ஸ் என்று அழைத்து வந்தனர். டேனியல் மாலன் என்பவர் அங்கு ஆட்சிக்கு வந்ததும் இனவெறிக் கொள்கையை உடனே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  இதன் மூலம் அம்மக்களை எளிதாக சுரண்ட முடிந்தது கருப்பின மக்களை பொதுவெளியில் அரசு அனுமதிக்கவில்லை. பார்த்தால் அடி உதை அபராதம் என சென்றது. இவர்களால், நாடாளுமன்றத்திற்கு கூட வரமுடியாது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பூர்விக மக்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சியாக இருக்கும்.  இவர்கள் உள்ள பகுதிகளுக்கு பந்துஸ்தான் என்று பெயர். இந்த மக்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்காத காரணத்தால் அமெரிக்கா, ஐ.நா அமைப்பு என இரண்டுமே த

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசி எறிந்த முகமது அலி! - அமெரிக்காவை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி

படம்
  முகமது அலி பட்டாம்பூச்சி போல உடல் லாவகம், தேனீ போன்ற வலி என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை முகமது அலியின் குத்துச்சண்டையைப் பார்த்து பலரும் சொன்னது.  அமெரிக்காவின் கென்டக்கியில் காசியஸ்  மார்செல்லஸ் கிளே ஜூனியர் என்ற பெயரில் முகமது அலி பிறந்தார். 1942ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று பிறந்தவர் இந்த குத்துச்சண்டை வீரர்.  தனது 12ஆவது வயதில் உள்ளூர் விழா ஒன்றில் சைக்கிளைத் தொலைத்துவிட்டார். அப்போது உள்ளூர் போலீஸ்காரர் காசியஸை சந்தித்தபோது, அவன் திருடனை கண்டால் அடித்து பிரித்துவிடுவேன் என ஆக்ரோஷமான தொனியில் இருப்பதைப் பார்த்தார். சண்டை போடுவது சரி. அதற்கு முறையான பயிற்சி வேண்டுமே என்று சொல்லி அவனை குத்துச்சண்டை பயிற்சிக்கு வரச்செய்தார். உள்ளூரில் இருந்த ஜிம்மில் மெல்ல பயிற்சி செய்யத் தொடங்கினான் காசியஸ் . அப்புறம் என்ன உள்ளூரில் சிறந்த குத்துச்சண்டை வீரராக மாறத் தொடங்கினான் காசியஸ்.  1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டார் காசியஸ். தனது பதினெட்டு வயதிலேயே தங்கப்பதக்கம் வென்றுவிட்டார். பதக்க பெருமையுடன் லூயிஸ்வில்லேவுக்கு வந்தார். ஆனால் அமெரிக்கர்கள் அவரை ஆப்பிரிக்க அமெ

2021ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூல்கள்! - டைம் வார இதழின் பரிந்துரை

படம்
 2021இல் சிறந்த கட்டுரை நூல்கள் எ லிட்டில் டெவில் இன் அமெரிக்கா நேஷனல் புக் அவார்ட் பட்டியலில் இடம்பெற்ற நூல் இது. ஹனிப் அப்துராகிப் கருப்பர்கள் பற்றியும் கலாசார வேறுபாடுகளையும் எழுதியுள்ளார். கவிதையும் கட்டுரையும் சேர்ந்த வடிவமாக கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நூலில் அமெரிக்காவின் வரலாறும் பேசப்பட்டது.  கிரையிங் என் ஹெச் மார்ட் மிச்செல் ஸானர், ஜப்பானிஸ் பிரேக்ஃபாஸ்ட் எனும் இசைக்குழுவை நடத்தி வந்தவர். தனது 25 வயதில் அவரது அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்குப்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நூலாக எழுதியிருக்கிறார். கொரிய கலாசாரத்துடனான தொடர்பு, அடையாளம் ஆகியவற்றைப் பற்றி தேடி அவர் அடையும் விஷயங்களை நூலாக மாற்றியிருக்கிறார்.  இன்விசிபிள் சைல்ட் ஆண்ட்ரியா எலியட் என்ற நிருபர், தசானி என்ற சிறுமியைப் பார்க்கிறார். நியூயார்க் நகர காப்பகத்தில் அந்த சிறுமி வாழ்கிறார். அமெரிக்காவில் நிலவும் பாகுபாடு, வீடு இல்லாத நிலை, இனவெறி ஆகியவற்றை தசானி என்ற சிறுமியின் வாழ்க்கை வழியே ஆண்ட்ரியா பிரமாதமாக எழுதியுள்ளார்.  ஆப்டர்ஷாக்ஸ் நாடியா ஆவுசு எழுதிய சுயசரிதை இது. தான்சானியா

நவீன குழந்தைகளுக்கு ஏற்றபடி கதைகளை மாற்றும் காமிக்ஸ் நிறுவனங்கள்! - மாற்றங்கள் ஏன்?

படம்
  அமர்சித்ரகதா மாற்றம் பெறும் காமிக்ஸ் மற்றும் குழந்தைகளின் நூல்கள்! உலகமெங்கும் உள்ள காமிக்ஸ் நூல்களின் மையப் பொருள் மாறுதல் பெறத் தொடங்கியுள்ளன. மாற்றுப்பாலினத்தவர், கருப்பினத்தவர்களையும் மெல்ல முக்கியமான பாத்திரங்களாக மாற்றுவதற்கு கதை எழுத்தாளர்கள் முன்வந்துள்ளனர். இதனை பதிப்பிக்கும் நிறுவனத்தினரும் இதனை ஏற்றுள்ளனர். ஒருவகையில் மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வணிகத்திற்கு அவசியம் என்பது உண்மை.  கூடுதலாக வாசகர்களும் தொன்மையான நீதிகளை, விதிகளை பேசும் நூல்களை வேண்டாம் மாற்றம் வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக்ஸ், ஃபிளேவே பே போன்ற இதழ்களும் கூட மாற்றங்களுக்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடத் தொடங்கியுள்ளன. இயற்கை சார்ந்த விஷயங்கள் மெல்ல காமிக்ஸ் வடிவத்தை பெற்று வருகின்றன. ரோகன் சக்ரவர்த்தி க்ரீன் ஹியூமர் என்ற பெயரில் தனி வலைத்தளத்தில் தனது இயற்கை சார்ந்த விஷயங்களை எழுதி  வரைந்து வெளியிட்டு வருகிறார். இந்து ஆங்கிலம் தேசிய நாளிதழிலும் இவரது கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வருகிறது.  டிங்கிள் காமிக்ஸ்  விலங்குகள் பேசுவது போல இவரது காமிக்ஸ்க

டீன் ஏஜ் இளைஞர்களுக்கான நூல்கள் 2015-2017

படம்
  2015 சிக்ஸ் ஆப் கிரௌஸ்  லெய் பர்டுகோ புனைவுக்கதையில் நாயகர்களுக்கும் எதிர்மறை பாத்திரங்களுக்கும் இடையிலுள்ள குண வேறுபாடுகளை லெய் நூலில் விளக்கியுள்ளார்.  2016 சால்ட் டு தி சீ ரூடா செப்டிஸ் கிழக்கு ப்ருஸ்யாவில் நடைபெறுகிற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு படகு வழியாக மூன்று பாத்திரங்கள் எப்படி செல்கிறார்கள், இவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள்தான் கதை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பிறகு நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது.  2016 தி சன் ஈஸ் ஆல்ஸோ எ ஸ்டார் நிக்கோலா யூன் நியூயார்க்கில் நடைபெறும் காதல் கதை. எழுத்தாளர் டேவிட் யூன் மற்றும் நிக்கோலாவின் கணவர் ஆகியோருடனான காதல் சம்பவங்களை இந்த நாவல் தழுவியுள்ளது.  2016 வீ ஆர் தி ஆன்ட்ஸ் சாவுன் டேவிட் ஹட்சின்சன் பள்ளியில் கடுமையாக கேலி செய்யப்படும் ஹென்றி, உலகை காப்பாற்ற முயலும் கதை. உலகை ஹென்றி காப்பாற்றுவானா என்பதுதான் முக்கியமான அம்சம்.  2016 வென் தி மூன் வாஸ் அவர்ஸ்  அன்னா மேரி மெக்லெமோர் இரண்டு இளம் வயதினர் தங்களுக்குள் கொள்ளும் காதல் உறவுதான் கதை. உலகையே மறந்து இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள்தான் முக்கியமான அம்ச

டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்

படம்
            நேர்காணல் ஜி போவ்மன்   உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது . பிரெக்ஸிட் , இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது . இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா ? நான் அப்படி நம்புகிறேன் . இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது . இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம் , மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன் . 2017 ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார் . ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே , அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா ? நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம் . அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது . ஆனால் ஆச்சரியப்படவில்லை . ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை , நோலன் மட்டும் எப்படி பேசுவார் ? இப்போது நமக்கு இருக்கும் சவால் , இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்

தீவிரவாதிகளை சீரியல் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா? - சைக்கோ டைரி

படம்
            சைக்கோ டயரி தீவிரவாதிகளை தொடர் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா ? அறிவியல் முறையில் இல்லை என்று தான் கூறவேண்டும் . ஆனால் சிந்தனை முறையில் ஆம் என்று கூறலாம் . குடும்ப வாழ்க்கை , சமூக வாழ்க்கை என இரண்டிலும் வேறுபாடு கொண்ட தனியாக வாழ்க்கையை தொடர் கொலைகாரர்கள் கொண்டுள்ளனர் . தீவிரவாதிகளில் தற்கொலை செய்துகொள்பவராக மாறி தன்னை வெடிக்க வைத்து பெரும் திரளான மக்களை கொல்வது என்ற சிந்தனை தொடர்கொலைகாரர்களுடன் ஒத்துப்போவதுதான் . அதில் மாற்றமில்லை . இவர்கள் கொலை செய்வதில் குறிப்பிட்ட ஐடியா , முறை , சில முன்னோடிகள் என இருக்கும் . இப்படி கொலை செய்வதன் வழியாக இவர்கள் தங்களை முக்கியமானவர்களாக நினைக்கிறார்கள் . பிறருக்கும் இதே தகவல்களை தெரிவிக்கிறார்கள் . தற்கொலைப்படை தாக்குதல்கள் , அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகின்றன . இதில் கொல்லப்படும் மக்கள் பலியாவதற்கு தகுதியானவர்கள் என்றே தீவிரவாதிகள் நினைக்கின்றனர் . ஆவேசமும் , கோபமும் கொண்ட இளைஞர்களை எளிதாக மூளைச்சலவை செய்து அவர்களை மாற்றி விட முடியும் . தீவிரவாத இயக்கங்கள் பல்லாண்டு காலமாக இதனை செய்துவருகின்றன . உலக நாடுகளில்

பாகுபாடுகளை வெளிக்காட்டும் இமோஜி ஐகான்கள்! - புதிய இமோஜிகள் வெளியீடு

படம்
 செய்திஜாம்  ஆஹா! தேர்வில் வெற்றி! மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில், 99.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ”15,75,806 மாணவர்கள் பத்தாவதில் இணைந்தனர். இவர்களில் 15, 75,752 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 4.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது” போர்டு தலைவர் தின்கர் பாடீல் தெரிவித்தார்.  https://www.thenewsminute.com/article/maharashtra-board-class-10-results-declared-9995-students-pass-152459 இனவெறி கூடாது இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஸ்போர்டுக்கு ஆதரவாக திரண்டு குரல் கொடுக்கும் ஆதரவாளர்கள் இடம் பிரிட்டன், மான்செஸ்டர் அப்படியா!? என்ன உயரம்! சீனாவைச் சேர்ந்த பேஸ்கட்பால் வீராங்கனை ஸாங் ஸியூ, தனது அபார உயரத்தாலும், திறனாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பதினைந்து வயதுக்குட்பட்ட தேசிய பேஸ்கட்பால் போட்டியில் ஸாங் பங்கேற்றார். ஏழு அடி நாலு அங்குல உயரத்தில் உள்ள ஸாங், போட்டியில் 45 புள்ளிகளை எடுத்து தனது அணியை

வேலையை கைவிடும் அமெரிக்கர்கள்! - காரணம் என்ன?

படம்
  அமெரிக்கர்கள் வேலை என்பது வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாக கருதுவதில்லை. அதைத்தாண்டிய விடுமுறை, பார்ட்டி, காதல் என வேறு புறம் சென்றுவிட்டார்கள். இந்த இடத்தை தான் இந்தியர்கள் பிடித்தனர். லீவே போடாமல் வேலைக்கு போய் அமெரிக்கர்களின் நிறுவனத்திற்கு இந்தியர்கள் இன்று இயக்குநர்களாக வந்துவிட்டனர். வளர்ந்து நிற்கின்றனர் என்று கூறலாம். ஆனால் அதேசமயம் ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் மன ஒற்றுமை இருக்கிறதா என்றால் கிடையாது.  இரக்கமில்லாமல் வேலை வாங்குவது, அதிக வேலைப்பளு, இனவெறி, சம்பளம் கூடாதது என பல்வேறு காரணங்களால் அமெரிக்க பணியாளர்கள் வேலையைக் கைவிட்டு வருகின்றனர். அதுவும் ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் அங்கு நடைபெறும் இனவெறி தாக்குதல்களால் 30 சதவீதம் பேர் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்கள். இப்போது தகவல்களைப் பார்ப்போம்.  ஏப்ரல் 2021இல் மட்டும் 4 மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வேலையிலிருந்து விலகிக்கொண்டனர். மருத்துவத்துறையில் மட்டும் 7,40, 000 பேர் இப்படி விலகிக்கொண்டு சென்றுவிட்டனர்.  தனியார் துறையில் 3.2 சதவீதம் பே

மருத்துவத்துறையில் இனவெறி அரசியல் உண்டு! - மலோன் முக்வெண்டே - மருத்துவ மாணவர்

படம்
                    மலோன் முக்வெண்டே இருபத்தொரு வயதான மலோன் முக்வெண்டே , லண்டனில் மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அங்கு அவருக்கு மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளையர்களைப் பற்றியதே . இதில் மிகவும் குறைவாகவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் , பழுப்பு நிறத்தவர்கள் இருந்தனர் . இவர்களை கருத்தில் கொள்ளாமல் எப்படி நோய்களைப் பற்றிய முழுமையான முடிவுக்கு வருவது என்று நினைத்த மலோன் , இதற்காக நூல் ஒன்றை உருவாக்கியுள்ளார் . இணையத்தில் வலைத்தளம் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார் . அவரிடம் பேசினோம் . மைண்ட் தி கேப் என்ற முயற்சியைப் பற்றி கூறுங்கள் . எங்கள் கல்லூரியில் நாங்கள் தோலில் ஏற்படும் நோய்களைப் பற்றி படித்தபோது கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளை இனத்தவர்களுடையது . எனக்கு அப்போது தோன்றிய கேள்வி , பிற இனத்தவர்களுக்கு இந்த நோய் மாறுபடுமே , அவர்களுக்கும் இதேபோல இருக்குமா என்பதுதான் . இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு்ம் பதில் தெரியவில்லை . எனவே ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் இணைந்து கிடைத்த புகைப்படங்களை இணைத்து கருப்பு நிறத்தவர்களின் தோலின் நி

வாழ்க்கையை அழித்த வசை! - இனவெறி, கருப்பினத்தவர்களின் குற்றங்கள், பெண் கொலைகாரர்கள், சிறுவயது சைக்கோ கொலைகாரன் ...

படம்
                  மனதைக் கொல்லும் வார்த்தை ! உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது , கோபத்தை , பொறாமையை , விரோதத்தை , வன்மத்தை , பகையை நேரடியாக வெளிப்படுத்துவது அதற்கான விளைவுகளை கூடவே எடுத்துவரும் . அதற்கான உதாரணம் எட்மண்ட் கெம்பர் . இவரைப் பற்றி அசுரகுலம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது . இப்போது அவரது வாழ்க்கையை சுருக்கமாக பார்க்கலாம் . அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாத குழந்தை . ஆறடி ஒன்பது அங்குல ஆளுமை . ஆனால் மனதளவில் அன்பும் அங்கீகாரமும் கிடைக்காத காரணத்தால் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை கொல்வதே அவர்கள் தன்னை மறுக்காமலிருக்கும் வழி என முடிவுக்கு வந்தவர் . இதற்கு ஒரே காரணம் , அவரது அம்மா . தினந்தோறும் சித்திரவதையான வார்த்தைகள் , தண்டனைகள் என அம்மாவிடம் இருந்து கிடைத்த அத்தனையும் மனதில் வன்முறையாக மாறத் தொடங்க , விலங்குகளை துன்புறுத்தி மகிழத் தொடங்கினார் . கொன்று புதைப்பது , உயிரோடு புதைப்பது என தொடங்கிய பழக்கம் மெல்ல முன்னேறி இறந்த உடல்களில் அருகில் சுய இன்பம் அனுபவிப்பது வரை வளர்ந்தது . பள்ளியில் பலரும் சூப்பர்மேன்களாக மாறி மக்களைக் கா