அன்று மலமள்ளும் தொழிலாளி இன்று கல்லூரி பேராசிரியர்! -தலித் பெண்ணின் சாதனைக்கதை --ச.அன்பரசு
அன்று மலமள்ளும் தொழிலாளி இன்று கல்லூரி பேராசிரியர் ! - தலித் பெண்ணின் சாதனைக்கதை -- ச . அன்பரசு " உன் அப்பா என்ன வேலை செய்கிறார் ? துப்புரவு வேலை செய்பவர்தானே ? போய் கழிவறையை கழுவிவிடு . வகுப்பில் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய் ?" என்று கேட்ட ஏழாம் வகுப்பு சமஸ்கிருத ஆசிரியரின் அமில வார்த்தைகள் அந்த தலித் சிறுமியை தீயாய் சுட்டபோதும் அணுவளவும் நம்பிக்கை தளரவில்லை . ஹரியானாவின் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமஸ்கிருத வகுப்பில்தான் இந்த தீண்டாமைப் பேச்சு . இன்று அச்சிறுமி ஜாதி அச்சுறுத்தல்களை கடந்து மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியையாகி சாதித்திருக்கிறார் . தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடு , தன் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் தலித்துகள் தீண்டாமை அவலத்தை மென்று செரித்து கண்ணீரை உரமாக்கி முன்னேற வேண்டியுள்ளதுதான் . ஹரியானாவில் கைதல் மாவட்டத்தில் ராஜூண்ட் கிராமத்தில் பால்மிகி ஜாதியில் மலமள்ளும் தொழிலாளிக்கு பிறந்த கௌஷல் பன்வார் , மேலே சொன்ன சம்பவம் நடந்த அடுத்த நாளும் வகுப்புக்குச் சென்றார் . அச்சுறுத்தியும் அடித்தும் அசராத கௌசலை வே