இடுகைகள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசி எறிந்த முகமது அலி! - அமெரிக்காவை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி

படம்
  முகமது அலி பட்டாம்பூச்சி போல உடல் லாவகம், தேனீ போன்ற வலி என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை முகமது அலியின் குத்துச்சண்டையைப் பார்த்து பலரும் சொன்னது.  அமெரிக்காவின் கென்டக்கியில் காசியஸ்  மார்செல்லஸ் கிளே ஜூனியர் என்ற பெயரில் முகமது அலி பிறந்தார். 1942ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று பிறந்தவர் இந்த குத்துச்சண்டை வீரர்.  தனது 12ஆவது வயதில் உள்ளூர் விழா ஒன்றில் சைக்கிளைத் தொலைத்துவிட்டார். அப்போது உள்ளூர் போலீஸ்காரர் காசியஸை சந்தித்தபோது, அவன் திருடனை கண்டால் அடித்து பிரித்துவிடுவேன் என ஆக்ரோஷமான தொனியில் இருப்பதைப் பார்த்தார். சண்டை போடுவது சரி. அதற்கு முறையான பயிற்சி வேண்டுமே என்று சொல்லி அவனை குத்துச்சண்டை பயிற்சிக்கு வரச்செய்தார். உள்ளூரில் இருந்த ஜிம்மில் மெல்ல பயிற்சி செய்யத் தொடங்கினான் காசியஸ் . அப்புறம் என்ன உள்ளூரில் சிறந்த குத்துச்சண்டை வீரராக மாறத் தொடங்கினான் காசியஸ்.  1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டார் காசியஸ். தனது பதினெட்டு வயதிலேயே தங்கப்பதக்கம் வென்றுவிட்டார். பதக்க பெருமையுடன் லூயிஸ்வில்லேவுக்கு வந்தார். ஆனால் அமெரிக்கர்கள் அவரை ஆப்பிரிக்க அமெ

உறவுகளை சமாளித்து குற்றங்களை துப்புதுலக்கும் சாம்பு! - துப்பறியும் சாம்பு - 2 - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு - 2 தேவன்  அல்லயன்ஸ்  சாம்புடன் எழுத்தாளர் தேவன் - நன்றி - இந்து தமிழ் துப்பறியும் சாம்பு பற்றிய குறிப்பை முன்னதாகவே எழுதியிருக்கிறோம். இதனால் நேரடியாக கதைக்குள் போய்விடலாம். முட்டாள் சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறி நிறைய வழக்குகளை கண்டுபிடிக்கிறார். கூடவே இதன் மூலம் தனக்கான இனத்தில் வேம்பு என்ற பெண்ணையும் கரம் பிடிக்கிறார். அவள் மூலம் ட்ரேட்மார்க் மூக்கு கொண்ட சுந்து என்ற ஆண் பிள்ளை பிறக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் சாம்புவுக்கு சுப்பு என்ற பெண் குழந்தை பிறக்கிறது.  அதுதான் கதையா என அயர்ச்சியாக கூடாது. இம்முறை சாம்பு, இங்கிலாந்து சென்று கோமாளித்தனங்கள் செய்து அடிவாங்கியும் கூட புகழ்பெற்று வருவதோடு கடைசி அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. அதில்தான் செய்தியாக சுப்பு என்ற பெண்பிள்ளை பிறப்பதாக கூறப்படுகிறது. வேம்புவும் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்து சேர்கிறாள்.  இந்த நாவலில் பெரும்பாலும் கதைகள் எப்படி அமையும் என்றால், சாம்பு ஏதேனும் வழக்கை கோபாலன் சொல்லி எடுத்துக்கொள்வார். பிறகு தன் மனம்போக்கில் அதனை ஆராய்ந்து அடிவாங்கி பிறகு கோபாலன் மூலம் அதிலிருந்து மீண்டு வருவ

தனது நாவல் பாத்திரங்களை ஒரே நாவலில் வலம் வரச்செய்த பாலபாரதி! - கடிதங்கள் - த.சீனிவாசன்

படம்
    10 திடீரென நேர்ந்த விபத்து ! 26.2.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? அறிவியல் நேர்காணல்களை எழுதிக் கொண்டு இருக்கிறேன் . இதனை ஓராண்டுக்கு முன்னரே எழுதினேன் . நான் வேலை செய்யும் தினசரிக்காக எழுதினேன் . ஆனால் அங்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது தனி நூலாக மாற்றி வெளியிட நினைத்துள்ளேன் . புத்தக காட்சியில் காமிக்ஸ் நூல்களை தேடிப்பார்க்க வேண்டும் . இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அங்கு செல்வேன் என்று நினைக்கிறேன் . எனது ஆசான் குங்குமம் ஆசிரியர் கே . என் . சிவராமன் அவர்களை சந்திக்க நினைத்தேன் . ஆனால் அவர் ஏதோ விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் இருந்தார் . அவரது அம்மாவின் நலம் பற்றிக் கேட்டபோது அடிபட்ட தகவலை சொன்னார் . வருத்தமாக இருந்தது . டிஸ்கவரி இந்தியா நூலை மெல்லத்தான் படிக்கக முடிகிறது . நடப்பு ஆண்டில் உடல் மனம் உள்ளே போன்ற இயல்பிலான உளவியல் நூலை எழுதி தொகுக்க வேண்டும் . நான் எழுதிய மருத்துவம் சார்ந்த நூல்களில் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றிய நூல் அதுவே . 2021 ஆம் ஆண்டில் நூலை செம்மைப்பட

குழந்தையின் கையில் வானவில்! - த.சீனிவாசன் - அன்பரசு கடிதங்கள்

படம்
  இதனை நூல் என்று முழுமையாக சொல்ல முடியாது. அன்பரசு, அவரது நண்பரான அல்லது அப்படி நினைத்துக்கொண்ட திரு. த.சீனிவாசன் அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இக்கோப்பை இன்டர்நெட் ஆர்ச்சீவ் வலைத்தளம் மூலம் அணுகி வாசிக்கலாம். இதனை தரவிறக்கம் செய்யக்கூட அவசியம் இல்லை என்பது வாசகர்களுக்கு சாதகமான அம்சம். கடிதங்களை ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தியவர் த.சீனிவாசன் என்பதை மறக்க முடியாது. இதனை அவர் ஆவணப்படுத்தியதால்தான் இப்போது வலைதளத்தில் சுலபமாக பதிவிட முடிகிறது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பேரிறையின் அருள் உரித்தாகுக!  இதை கிளிக் செய்து வலைத்தளத்திற்கு செல்லலாம்... https://archive.org/details/kuzhathaiyin-kaiyil-vanvil-letters இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும் நூலை வாசிக்கலாம்.. நன்றி https://www.qrcode-monkey.com/ www.canva.com

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என

கோமாளித்தனமான சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறும் கதை! - துப்பறியும் சாம்பு - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு 1 தேவன் அல்லயன்ஸ் வெளியீடு துப்பறியும் சாம்பு நூல், வங்கியில் வேலை செய்யும் சாதாரண எழுத்தர் எப்படி புகழ்பெற்ற துப்பறிவாளர் ஆகிறார் என்பதை விவரிக்கிறது. சாம்பு, நீளமான பினாச்சியோ மூக்கு, விளாங்காய் மண்டை, கோட், வேஷ்டி கட்டிய பிராமணர். முகத்திலேயே அசடு வழிபவரை பார்த்தவுடனே யாரும் முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். இப்படி இருக்கும் ஒருவர் அதிர்ஷ்டத்தால் தொட்டது அனைத்தும் துலங்கி புகழ்பெற்ற துப்பறிவாளர் எப்படி ஆகிறார் என்பதுதான்  முதல்பாக துப்பறியும் சாம்புவின் மையக்கதை.  பதினான்காவது பதிப்பு 2021இல் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தில் 27 அத்தியாயங்கள் உள்ளன. இதில்தான் வங்கியில் வேலை செய்யும் சாம்பு, அவமானப்படுத்தப்படுகிறார். அதற்காகவெல்லாம் அவர் ரொம்ப துடிக்கவில்லை. சோறு முக்கியமே என அதனை சகித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வங்கி மேலாளர் அலுவலக காரை பயன்படுத்தி தகிடுதத்தம் செய்கிறார். அதை சாம்பு ஊழ்வினை காரணமாக மோப்பம் பிடிக்கிறார். அதை மேலாளரிடமே உளறி வைக்க அவர் பணத்துடன் தப்பியோடுகிறார். உடனே வங்கியின் தலைவர் அந்த கோபத்தில் சாம்புவை வெளியே போடா முட்டாள் என்கிறார்.

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படி