இடுகைகள்

நாடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதை சொல்லியாகும் பொறியியல் மாணவனின் போராட்டம்! தமாஷா 2015 - இம்தியாஸ் அலி

படம்
         Directed by Imtiaz Ali Music by A. R. Rahman Cinematography Ravi Varman   நம் மனம் சொல்லும் விஷயத்தை செய்வதா, குடும்பம் சொல்லும் சமூக அழுத்தத்திற்கு இடம் கொடுத்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதா என்று சொல்லும் படம்.   பிரான்சில் கார்சிகா என்ற நகரில் டான், மோனா டார்லிங் என்ற இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பில் மோனா டார்லிங் தனது பாஸ்போர்டை, பேக்கை பறிகொடுத்துவிடுகிறாள். அவளுக்கு டான் உதவுகிறான். அறை, உணவு கொடுத்து அவளை தங்க வைக்கிறான். அவன் அங்கு ஜாலியாக நாடோடி போல தங்கி இருக்கிறான். இருவரும் ஒருவரைப் பற்றி பொய்யை மட்டும் சொல்வது என முடிவு செய்துகொண்டு ஜாலியாக ஒன்று சேர்ந்து திரிகிறார்கள்.  மோனாவுக்கு டான் மீது காதல் ததும்பி வழியும் தருணம் வரும்போது, அவர்கள் பிரிய வேண்டி வருகிறது. பிரான்சிலிருந்து கிளம்பி இந்தியாவின் கொல்கத்தாவிற்கு வருகிறாள் மோனா. ஆனால் டானை அவளால் மறக்கவே முடியவில்லை. கிளம்பும்போது கொடுத்த முத்தம் வரை அனைத்தும் அவளுக்கு பரவசத்தை அளிக்கிறது.  இந்த நிலையில் டெல்லிக்கு அலுவலக விஷயமாக வருபவள் டானை சந்திக்கிறாள். டான் இப்போது முன்னர் சந்தித்தது போல தனது பெயரை

நவீன இளைஞனை டார்ச்சர் செய்யும் வெவ்வேறு காலகட்ட மனிதர்கள்! டைம் என்ன பாஸ்? - சூப்பர் சுப்பு

படம்
            டைம் என்ன பாஸ்?     டைம் என்ன பாஸ்? சூப்பர் சுப்பு சுட்டகதை என்ற படத்தை எடுத்தவர்தான் இந்த இயக்குநர். ஏறத்தாழ அந்தப்படத்திலிருந்து பெரிய மாறுதல்கள் இல்லாமல் மற்றொரு மேடை நாடகம் போன்ற வெப்தொடரை உருவாக்கியுள்ளார்.  டைம் என்ன பாஸ்? 2019இல் வாழும் ஐடி இளைஞன் அறைக்கு வரும் பல்லவ நாட்டு உளவாளி, இஸ்ரோ விஞ்ஞானி, பிரிட்டிஷ் கால ஆங்கிலோ இந்தியன் பெண், எதிர்காலத்திலிருந்து வரும் டெக் இளைஞன் ஆகியோர் வந்தால் என்ன களேபரங்கள் நடைபெறும் என்பதுதான் கதையின் முக்கியமான மையம். இந்த வெப் தொடரை பெரிதாக எதிர்பார்ப்புகளுடன் பார்த்தால், மிஞ்சுவது வாட்ச்மேனாக வரும் சந்தோஷம் (அலெக்ஸ்), பல்லவ உளவாளி (கிள்ளிவளவன்) ஆகிய இருவர் மட்டும்தான். குழுவில் வித்தியாசமாக தென்படுவது, செவத்தபையனாக வரும் பரத்தான். மாட்டு ஊசி போடும் டாக்டர் போல என்ன செய்வதென தெரியாமல் வெப் தொடர் முழுக்க தவித்திருக்கிறார். வெவ்வேறு காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வருகிறார்கள் நிச்சயம் பட்ஜெட் பெரிதாக இருந்தால் மட்டுமே பெரிதாக ஏதேனும் சாதிக்கமுடியும். இல்லையென்றாலும் உரையாடல்களில் கூட சுவாரசியம் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வெப்தொடரில் எ

வரும் வாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஆளுமைகள், தினங்கள்!

படம்
pixabay அகஸ்டோ போல் மார்ச் 16,1931 பிரேசில் நாட்டு நாடக கலைஞர்.  இடதுசாரி கருத்துகளைச் சொல்ல தியேட்டர் ஆஃப் தி ஆப்ரஸ்டு என்ற நாடக அமைப்பைத் தொடங்கினார். நாடக வடிவங்களைப் பற்றியும், தனது அரசியல் செயற்பாடு பற்றியும் நூல்களை எழுதியுள்ளார். தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16,1995 இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று போலியோ இல்லாத நாடாக இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. நோர்பட் இல்லியக்ஸ் மார்ச் 17, 1806 நோர்பட் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், வேதியியல் பொறியியலாளர். இவர், சர்க்கரை தொழில்துறைக்காக கண்டுபிடித்த மல்டிபிள் எஃபக்ட் எவாபெரேட்டர் இவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எகிப்து நாட்டின் தொன்மை வரலாறு பற்றிய ஆய்வையும் செய்து வந்தார். ரிச்சர்ட் பி ஸ்ட்ராங் மார்ச் 18, 1872 அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பிளேக், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள

நாட்டின் சகிப்புத்தன்மை சிதைந்து அச்சம் கூடியுள்ளது

படம்
Youtube மகேஸ் எல்குஞ்ச்வர், விஜய் டெண்டுல்கருக்கு அடுத்து பெரிதும் மதிக்கப்படும் நாடக ஆளுமை. அண்மையில் மகிந்திரா எக்சலன்ஸ் ஆஃப் தியேட்டர் விருதை, வாழ்நாள் சாதனைக்காக வென்றிருக்கிறார்.  விஜய் டெண்டுல்கர், விஜயா மேத்தா, சத்யதேவ் துபே ஆகியோர் மகாராஷ்டிராவில் நாடக இயக்கத்தை உருவாக்கி இருக்கியிருக்கிறீர்கள். இப்போதுள்ள நாடகங்களை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்.  வெளிப்படையாக சொல்வதென்றால், எனக்கு அதுபற்றி எந்த கருத்துமில்லை. நான் தற்போது நாக்பூரில் வசித்து வருகிறேன். இதனால் நாடக இயக்கங்களோடு பெரியளவு தொடர்புகள் கிடையாது. எனக்கு இருக்கும் தற்போதைய ஆதங்கள், எழுத்தாளர்களும் இயக்குநர்களும் நாடகத்தில் ஆழமாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை எனபதே. விஜய் டெண்டுல்கர் ரங்காயன் எனும் குழுவை உருவாக்கி நாடகங்களை உருவாக்கி வந்தார். பிறரும் அப்படித்தான். விமர்சகர்கள் உங்களை விஜய் டெண்டுல்கருடன் சேர்த்துத்தான் பேசுகின்றனர். ஒருவகையில் நீங்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளீர்கள். இதில் உங்களை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறீர்கள்? எனக்கு ஆச்சரியமே

நாவலின் வடிவம் வேறு சினிமாவின் வடிவம் வேறு

சாத்கூன் மாஃப், ஹேப்பி நியூ இயரில் நடித்த விவான் ஷா இப்போது நாவல் ஆசிரியராக மாறியிருக்கிறார். கொலை குறித்த மர்மங்களைக் கொண்ட லிவிங் ஹெல் என்ற நூலை பெங்குவின் பிரசுரித்துள்ளது. அதுபற்றி விவானிடம் பேசினோம். இந்த நாவலை எழுத உங்களைத் தூண்டியது எது?  நான் சிறுவயதிலிருந்து துண்டு துக்காடவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் நாடகங்கள் சிலவற்றை எழுதினேன். பின்னர், கட்டுரைகளுக்கு நகர்ந்தேன். நான் இலக்கியம் படித்தவன் என்பதால் இது எளிதாக சாத்தியமானது. நான் கலைப்படைப்புகளை உருவாக்க பேனாவும் பேப்பரும் இருந்தாலே போதும். சாத் கூன் மாஃப் படத்தின் ஆக்கத்திலும் பங்களித்திருக்கிறீர்கள். அதோடு எட்கர் ஆலன்போவின் கதைகளை நாடகமாக்கிய திறமையும் கொண்டவர். இருண்ட கதைகள் ஏன் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.  காரணம், நான் தொடக்கத்தில் கற்ற படித்த இலக்கியங்கள் நேர்மறையான தன்மை கொண்டவை அல்ல. அறிவியல் ஆய்வாளன் கண்டுபிடித்த ஆய்வு உண்மையைப் போலவே கலைஞனும் உண்மையைத் தேடவேண்டும். நம் வாழ்க்கையைப் பாருங்கள். அவ்வளவு எளிதில் நேர்மறையான விஷயங்களை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியாது. கலை என்பது ஆன்மிக ரீதியா