இடுகைகள்

படுகொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங் சன் சூகி மீது தொடங்குகிறது ஐ.நா வழக்கு!

படம்
honghong free press 2017ஆம் ஆண்டு மியான்மரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தீவிர இன அழிப்பு செயல்முறைகளை செயல்படுத்தினர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. வாழ்வதற்கான சூழ்நிலை இல்லாத அம்மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். இவர்களின் எண்ணிக்கையை மியான்மர் அரசு, 5 லட்சம் என்கிறது. ஆனால் வங்கதேசத்திற்கு அகதியாக வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் ஆகும். 2018ஆம் ஆண்டு மியான்மரில் முஸ்லீம்கள் மீது நடந்த ராணுவ வன்முறை மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி செய்தி எழுதிய இரு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தது அந்நாட்டு அரசு. இதைப்பற்றி மூச்சு கூட விடாமல் இருந்தார் அந்நாட்டின் பிரமரான ஆங்சன் சூகி. இதன்விளைவாக அவரின் மீது உலகம் கொண்ட அபிமானமே தகர்ந்து போனது. இதனால் கனடா அரசு சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் மனித உரிமைக்கு பாடும் ஆம்னெஸ்டி அமைப்பும் தான் முன்னர் அமைதிக்காக பாடுபடும் வகையில் சூகிக்கு கொடுத்த உயர்ந்த விருதை திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டது.  வரும் டிச. 10-12 தேதிகளில் ஐ.நா வழக்கில் ரோஹிங்கியா

நேர்மையான அதிகாரிகளை பறையர்களைப் போல நடத்துகிறது இந்திய அரசு!

படம்
நேர்காணல் தினேஷ் தாக்கூர் அமெரிக்காவில் ரான்பாக்சி மீது குற்றச்சாட்டு எழுப்பி அதனை அபராதம் கட்ட வைத்திருக்கிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம் என நினைக்கிறீர்களா? அமெரிக்காவில் உள்ளது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் சாத்தியமாகலாம். இடுப்பெலும்பு மாற்று சாதனங்களை தரம் குறைந்து ரான்பாக்சி தயாரித்து விற்றது. இது காசு கொடுத்து வாங்கும் மக்களை ஏமாற்றுவதல்லவா? அதற்காகத்தான் நான் அந்த நிறுவனத்தை குற்றம் சாட்டினேன். அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு சட்டங்கள் பற்றி பேசுவது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசுவது போல. ரான்பாக்சியின் ஊழியர் என்ற லேபிளில் இருந்துகொண்டு எப்படி குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள். அரசின் சட்டப்பாதுகாப்பு எனக்கு கிடைத்தது. குற்றச்சாட்டை எழுப்பியவர் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அதனால்தான் என்னால் சுதந்திரமாக சில விஷயங்களை பேச முடிந்தது. இந்தியாவில் புகார் கொடுப்பவர்களை காப்பாற்றுவார்கள் என நினைக்கிறீர்களா? அசோக் கெம்கா என்ற ஐஏஎஸ் அதிகாரி (ஹரியானா), உத்தர்காண்டைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்ற அதிகாரிகளை இந்திய அரசு, பறையர்

சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த ராபர்ட் கென்னடி!

படம்
ராபர்ட் கென்னடி ராபர்ட் கென்னடி ஜான் எஃப் கென்னடியின் சகோதரர். 1925 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர். சகோதர ருக்குப் பின்னர் தேர்தலில் நிற்க நினைத்தார். ஆனால் சதிகார ர்களால் படுகொலை செய்யப்பட்டார். சகோதர ரின் ஆதரவுடன் அவரது ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக, பதவி வகித்தார். 1925 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் கென்னடி, 1960 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். பின்னர், சகோதரர் படுகொலையான பின்னர் நியூயாரக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் முயற்சியிலும் இருந்தார். 1968 ஆம் ஆண்டு ஜூன் 5 தாக்கப்பட்டு படுகாயமுற்றார். அடுத்தநாள் இறந்துபோனார். ராபர்ட்டின் தந்தை ஜோசப் சீனியர், தொழிலதிபர். இவரின் அம்மா ரோஸ், போஸ்டன் நகர மேயர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் அனைவரும் செல்வச்செழிப்பான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். ஜோசப்பிற்கு பிரிட்டனில் அமெரிக்கத்தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் ஏற்க, குடும்பம் இங்கிலாந்திற்கு பயணமானது. பின்னர் இரண்டாம் உலகப்போர் வெடிக்க, வேகமாக அமெரிக்காவுக்குத

உண்மையை விசுவாசியுங்கள் இந்தியர்களே! - சேட்டன் பகத்

படம்
எங்களைக் காப்பாற்றுவதாக கூறும் அரசியல்வாதிகளே, சமூக ஆர்வலர்களே உங்கள் அனைவரின் நோக்கத்திற்காக உங்களை வணங்குகிறேன். நாங்கள் அணிந்துள்ள தொப்பி உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாங்கள் கலவரத்தில் பட்ட காயங்கள், அதில் எங்களை ஈடுபடுத்திய உங்களது குற்றவுணர்வு நழுவாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தியா ஜனநாயகப்பூர்வ குடியரசு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பான்மையினருக்கு அதே நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. வாக்குவங்கிக்காக பல்வேறு இனக்குழுக்களை நாட்டின் விரோதிகளாக முன்னே நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர்களின் வாட்ஸ் அப் கூட இன்று உளவு பார்க்கப்படுகிறது. நல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்தானே?  கல்வி, தொழில் என அனைத்திலும் நாங்கள் இன்று பின்தங்கவில்லை. பெரும்பான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு நிகராக நாங்களும் வளர்ந்துள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு, நண்பர்களின் ஆதரவு ஆகியவை பின்னணியாக உள்ளன. என்னை நீங்கள் இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள். பாஷா, அப்துல்லா, சாதிக் அலி, சித்திக் அலி, நிஜாமுதீன் என ஏதாவொரு பெய

பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்

படம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும்  கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர். அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் க

காஷ்மீரில் இணையம் நிறுத்தம்!

படம்
சிறப்பு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, ஏறத்தாழ 60 நாட்களுக்கு மேலாக அங்கு இணையம் செயல்படவில்லை. அனைத்து சமூக வலைத்தளங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வன்முறை ஏற்படும் பயம்தான். இனி பியூட்டிஃபுல் காஷ்மீர் என நிச்சயம் பாட முடியாது. மாநிலமே கொந்தளிப்பில் கிடக்கிறது. எனவே அங்கு செயல்பட்டு வந்த இணைய இணைப்பு பற்றிய டேட்டா இதோ..... அக்டோபர் 3 ஆம் தேதியோடு அறுபது நாட்கள் காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு 180 முறை இணையம் தடை செய்யப்பட்டு உள்ளது. 2019 இல் இதுவரை 55 முறையும், கடந்த ஆண்டில் 68 முறையும் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இணைய இணைப்பு துண்டிப்பு 196 முறை நடைபெற்றிருக்கிறது.இதில் இந்தியாவில் மட்டும் 134 முறை நடந்திருக்கிறது. பாகிஸ்தான் என்று கேள்வி வருமே? ஆம் அங்கு 12 முறை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. புர்கான் வானி படுகொலையான பின்னர் மொபைல் இணையம் 133 முறை காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ளது. - இந

மலம் கழித்தால் மரணதண்டனை - ஆல் இஸ் நாட் வெல்!

படம்
மத்தியப்பிரதேசத்திலுள்ள பஞ்சாயத்து பவன் அருகில் திறந்த வெளியில் மலம் கழித்த ரோஷினி என்ற சிறுமியும், அவினாஷ் என்ற சிறுவனும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். குச்சிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துள்ளனர். சிறுவர்களை  சோதித்த மருத்துவர்கள் அவர்கள் முன்னமே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். கொலைகாரர்கள் யாதவ் சாதியைச் சேர்ந்தவர்கள். அடித்துக்கொன்றதாக கைது செய்யப்பட்ட இருவருமே சகோதர ர்கள்தான். சிறுவன், சிறுமியைக் கொல்லும் முன்பு அவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். கடவுள் சாத்தான்களை கொல்ல உத்தரவிட்டுள்ளார் என போலீசில் வாக்குமூலம் கூறியுள்ளார் கொலைகாரர்களில் ஒருவரான  ஹக்கீம் யாதவ். கொல்லப்பட்ட சிறுவர்களின் வீட்டில் கழிப்பறை இல்லை. கட்டுவதற்கு சில முட்டுக்கட்டைகள் இருந்துள்ளன. அதற்காக மலம் கழிக்காமல் இருக்க முடியுமா? 2016 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள குற்ற சம்பவங்களின் அளவின் படி அதுவே நம்பர் 1 இடத்தில் உள்ளது. தலித் மற்றும் பட்டியலின மக்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஊரில் இருந்த ஒரே தலித் குடும்பம் அதுதான் என்பதோடு, அங்கு

கலைந்துபோன கனவு - இந்திய சுயராஜ்ஜியம் - காந்தி

படம்
pixabay இந்திய சுயராஜ்ஜியம் காந்தி ரா.வேங்கடராஜூலு இன்று இந்தியா பெரும் சிதைவில் உள்ளது. கலாசாரம், மதிப்பீடுகள் என அனைத்திலும் பிரதானமாக பணமே உள்ளது. மேலும் ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர் பயத்துடன் ஆமோதிக்க வேண்டிய  கட்டாயம் உள்ளது காரணம், கருத்தை கூறுபவரின் பின்னே ஆயுதங்களுடன் கும்பல் நிற்கிறது. இவர்களின் தலைவர் ஆல் இஸ் வெல் என்று அயல்நாட்டில் சொல்லும்போதே, உள்நாட்டில் இறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒருவர் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம், அவர் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணம்தான். உ.பியில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்த  ஊழல் உண்மையைச் சொன்ன பத்திரிகையாளர்  மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதியப்படுகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று இனி கூறுவது கஷ்டம். இந்து கும்பலை விரட்டி, கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய போலீஸ்காரர்,  திட்டமிட்டு கொலை செய்யப்பட மாநில முதல்வரே உதவுகிறார்.  இதுபோன்ற சிதைவுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மற்றொரு அபாயம், அடிப்படைவாத தலைவர்கள் ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரத்த

மனித உரிமைகளை நசுக்கும் சவுதி அரேபியா- கொல்லப்படும் ஏமன் மக்கள்

படம்
சவுதி அரேபிய படைகள், ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.இதன் விளைவாக கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 47 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை நடந்த ஐந்து தாக்குதல்களில் ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீனவர்களின் படகுகளில் இருந்த சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சவுதி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியாகி உள்ளது. வயிற்றுப்பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை எதற்கு ராணுவ எதிரிகள் போல கனரக ஆயுதங்களை வைத்து சவுதி ஆதரவுப்படைகள் தாக்குகின்றன என்பது புரியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநரான பிரியங்கா மோடாபர்த்தி. சவுதி - ஏமன் போருக்கு முன்பு மீன்பிடித்தொழில் நன்றாக நடந்துவந்திருக்கிறது. போர் தொடங்கிய பிறகுதான் நிலைமை மாறியிருக்கிறது. சிறையில் அகப்பட்ட 115 மீனவர்கள் மருத்துவ வசதி, சட்ட உதவி என எதையும் பெற அனுமதிக்கப்படவில்லை. தற்போது பெருமுயற்சி செய்து விடுதலை ஆகியுள்ளவர்களும் ஒன்ற

நாஜி கொடுமைகளை உலகறியச் செய்தவர்! - ஹென்ரிக் ராஸ்

படம்
போலந்து புகைப்படக்காரர் ஹென்ரிக் ராஸ் போலந்து நாட்டை நாஜிப்படையினர் ஆக்கிரமித்தனர். ஆண்டு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இப்போரின் விளைவாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு லோட்ஸ் கெட்டோ சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் யூத புகைப்படக்காரரான ஹென்ரிக் ராஸ், லோட்ஸ் கெட்டோ நகரில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சிறைக்கைதிகள் அடையாள அட்டை பணிக்கான புகைப்படங்களை இவரே எடுத்தார். இவர் யூதர் என்ற அடையாளம் தெரிந்தால் தானும் தன் குடும்பமும் சித்திரவதை செய்து கொல்லப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1944 ஆம் ஆண்டு கோடையில் மட்டும் 44 ஆயிரம் மக்கள் நாஜிப்படையின் சித்திரவதை, பட்டினியால் இறந்துபோனார்கள். இவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டும், நச்சு வாயு சேம்பர்களில் அடைக்கப்பட்டும் இறந்தனர். இம்மக்களை பதிவு செய்த ராஸ் உதவியால்தான், அன்று நடந்த ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிந்தது. சிலுவைப்போர்களாலும மக்கள் வதைபட்டு இறந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இனத்தை பழிகூறி அதனை வேட்டையாடி அழித்த சுவடுகள் என்பது ஹிட்லரின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இறுதியில் ரஷ்ய செம்

சிரிய சிறைகளில் என்ன நடக்கிறது தெரியுமா?

படம்
நம்பிக்கை நாயகர்கள்!  - அலி அபு டென் சிறை. இருட்டில் முழ்கிய அறைக்குள் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. அலி அபு டென் அப்போதுதான் தூங்கி எழுந்தார். சிறிது நேரத்தில் காலை உணவுக்கான அழைப்பு வந்தது. ஒரு முட்டையை வேகவைத்து ஐந்து பேர் சாப்பிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கதவுகள் திறக்கப்பட உணவுக்கூடத்திற்கு சக கைதிகளோடு வந்தார். அங்கு கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. சிறைக்காவலர் சோறு, கோழிக்குழம்பில் சிறுநீர் பெய்துகொண்டிருந்தார். தாயோழி என லெபனான் கைதி ஆவேசமாக முன்னேற, அபு உடனே அவரைத் தடுத்தார். உணர்ச்சியை கட்டுப்படுத்தியபோதுதான் அக்கைதி உணர்ந்தார். தான் அப்படி காவலரை சத்தமாக சொன்னால், எலும்புகள் மொத்தமாக நொறுக்கப்படும் என்று. திரைப்படத்தில் ஒரு காட்சி! இது அபுவுக்கு மட்டுமல்ல; சிரியாவில் சிறைப்பட்ட கைதிகள் தினசரி சந்தித்து வந்த கொடுமைகள்தான் அவை. அவற்றை அபு பின்னாளில் திரைப்படமாக்கியபின்தான் அக்கொடூரங்களை உலகம் அறிந்தது. சிறை என்பது தனி உலகம். பெரும்பாலும் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாத அங்கு, உருப்படியான செயல்கள் நடக்கும் என குழந்தை கூட நம்பாத

துப்பாக்கி விதிகள் மாற்றவேண்டுமா? - கலிஃபோர்னியாவில் புதிய பிரச்னை!

படம்
வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள கில்ராய் எனுமிடத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் வெள்ளை இனவெறியர் துப்பாக்கியில் சுட்டதில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஏழாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. டெக்சாஸ் மாநிலம் இவ்வகையில் நான்கு துப்பாக்கிச்சூடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச்சூட்டை செய்தவருக்கு வயது 19 தான். சான்டினோ வில்லியம் லீகன் என்பவர் போலீசாரால் உணவுத்திருவிழா இடத்திலேயே கொல்லப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் துப்பாக்கிச்சூட்டிற்கு சில மணிநேரம் முன்பு மைட் ஈஸ் ரைட் எனும் ராக்னர் ரெட்பியர்டு 1890 ஆண்டு எழுதிய நூலை பகிர்ந்துள்ளார். இது வெள்ளையர்களின் இனமேன்மையை தூக்கி பிடிக்கும் நூல். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறும் சமயம் மட்டும் பேசப்படும் சமாச்சாரமாக மாறிவிட்டது. தேசிய ரைபிள் அசோசியேஷனின் பணம் பெற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் நிச்சயம் துப்பாக்கிகளை இளைஞர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. வெள்ளை இனவாதம் என்பதை போலியாக உருவாக்கி தேர்தலில் வெல்ல

சீனா மற்றுமொரு வடகொரியா நாடு போலத்தான் மாறும்!

படம்
தியான்மென் சதுக்கம் சூ யூயு அரசியல் அறிவியல் படித்த மாணவர். இவர், சீனாவில் கலாசார மாறுதல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டம் குறித்து எழுதியிருப்பதோடு, அங்கு கலந்துகொண்டும் இருக்கிறார். சார்ட்டர் 08 எனும் சட்ட தீர்திருத்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மே 2014 ஆம் ஆண்டு செமினார் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரிடம் பேசினோம். தியான்மென் சதுக்க படுகொலைகளுக்கு இன்றோடு 30 ஆவது ஆண்டு. இதுபற்றி உங்கள் கருத்து. எனக்கு சோகமாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இங்கிருந்து வெளியேறியவர்கள் திரும்ப தாய்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. தியான்மென் சதுக்க கொலைகளுக்கு எதிரான ஜனநாயகப் பேரணி  இயக்கத்தில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்களா? ஆகஸ்ட் 15 -20 என்று நினைக்கிறேன். தேதி சரியான நினைவில்லை. அன்று படுகொலைகளுக்கு எதிரான அனைத்து கூட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். அரசு எங்களுடைய போராட்டங்களுக்கு செவி கொடுத்து நீதி கிடைக்கச்செய்யும் என