இடுகைகள்

போலீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமெடி டோஸில் தேசப்பற்று படம்! - சூர்யவன்சி - ரோகித் ஷெட்டி

படம்
  சூர்யவன்சி ரோகித் ஷெட்டி மும்பையில் தொண்ணூறுகளில் நடைபெறும் குண்டுவெடிப்பு அதைத்தொடர்ந்து அதை ஏற்பாடு செய்து வைக்கும் தீவிரவாதிகளை எப்படி சூர்யவன்சி என்ற போலீஸ் அதிகாரி களையெடுக்கிறார் என்பதே கதை.  ரோகித் ஷெட்டி இந்தியில் தெலுங்கு சினிமா எடுப்பவர் என்பதால், ஆக்சன் காட்சிகள், வண்டிகள் வெளிப்பது. பசூக்காவிலிருந்து புறப்பட்டும் குண்டுகளை கூட தோளை சற்றே கீழிறக்கி நாயகன் தப்பிப்பது, புல்லட் ப்ரூப் ஜாக்கெட் கூட போடாமல் சண்டை போடுவது என அத்தனை டூமாங்கோலித்தனங்களும் படத்தில் உண்டு.  அத்தனையையும் தாண்டி படத்தை ரசிக்க வைப்பது படத்தின் கதையும், இந்து முஸ்லீம்கள், இந்தியாவை துண்டாட நினைக்கும் பாகிஸ்தான் முஸ்லீம்கள் என பிரித்து வைத்து நேர்மையாக பேச நினைத்திருப்பதுதான். அந்த வகையில் படம் தனித்து தெரிகிறது.  இந்தி படம்தான். கையாளும் விஷயம் கூட சீரியஸ்தான். ஆனால் படம் நெடுக காட்சிகள் நகைச்சுவையோடு நகர்கின்றன. நாயகன் சூர்யாவிற்கு அமைச்சர் கொடுக்கும் அந்த லூசாய்யா என்ற பில்டப் மட்டுமே. மற்றபடி அவர் தன்னுடைய சக குழு உறுப்பினர்களின் பெயரையே மாற்றிச்சொல்லும் வியாதி இருக்கிறது. அதையே காமெடிக்காக பயன்படுத்

தன் குடும்பத்தை வெட்டிக்கொலை செய்தவர்களை ரத்தப்பொரியலாக்கும் சென்னகேசவரெட்டி! - சென்னகேசவரெட்டி- விவி விநாயக்

படம்
                    சென்னகேசவ ரெட்டி   Director: V. V. Vinayak Produced by: Bellamkonda Suresh Writer(s): Paruchuri Brothers (dialogues) ரெட்டி குடும்பங்களுக்குள் நடக்கும் நீதி , அநீதி போராட்டம்தான் படம் .   கிராமத்தில் உள்ள பள்ளியில் சென்ன கேசவ ரெ ட்டியின் சிலை உள்ளது . அதனை பற்றி பிரார்த்தனை கூட்டத்தில் பெருமையாக சொல்லும் ஒருவர் , அவர் எங்கிருந்தாலும் திரும்ப நம் ஊருக்கு வருவார் என்கிறார் . அதேநேரம் பெரிய மாளிகை போன்ற வீட்டில் ஒரு போட்டோவை எடுத்துப் பார்க்கும் தேவயானியை , அவரது கணவர் அடித்து உதைக்கிறார் . அதில் இருப்பவர் வேறு யார் , சென்ன கேசவ ரெட்டிதான் . பிறகு கதை மும்பைக்கு செல்ல அங்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக தன் போக்கில் அரசியல்வாதிகளுக்கு போக்கு காட்டி நீதியை நிலைநாட்டும் அதிகாரி வேறு யார் பாலையாதான் . வாலிபராக இருக்கிறார் . இவரை கல்லூரியில் பார்க்கும் மருத்துவப்படிப்பு படிக்கும் பெண் தங்கள் ஊர் பெரியவருக்கு தகவல் சொல்ல , அவர் இவரைப் பார்க்க வந்து உண்மையைத் தெரிந்துகொள்கிறார் . ஆனால் அவர் யார் என்ற உ்ண்மையை சொல்லக்கூடாது என தங்கள் ஊரைச் சேர்ந்த பெர

மலையாள மொழியில் தெலுங்குப்படம் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  - மலையாளம் இயக்கம் பிரவீன் பிரபாராம் ஒளிப்பதிவு  கௌதம் சங்கர் இசை ஜேம்ஸ் பிஜய் ஆஹா மலையாளப் படமா அல்லது தெலுங்குப் படமா என திகைக்கும்படி சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கிறது. எஸ்.ஐ கே, நஞ்சன் கோட்டை எனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார்,. அந்த ஊரில் அமர்நாத் என்பவர், மக்களை ஊருக்கு வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வருகிறார். இருவருக்குமான டிஷ்யூம் டிஷ்யூம்தான் கதை. இதை எப்போதும் போல மலையாளப்படங்களின் வேகத்தில் சொல்லாமல் பரபரவென சொல்லியிருப்பதுதான் படத்தைப் பற்றிப் பேசக்காரணம். டோவினோ தாமஸ்தான் படத்தின் பெரும்பலம். அடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் பிஜய். தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்து எதிரிக்கு எதிராக நின்று போராடும் வேகம், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரவுடியை தீவைத்து எரிப்பது, ஊருக்குள் அமைதி கொண்டுவரை அசுரனாக நடந்துகொள்வது என காட்சிக்கு காட்சி பின்னி எடுக்கிறார். இவருக்கு நேர் எதிராக தில்லாக நிற்கிறார் சிவஜித் பத்மநாபன். நெஞ்சில் எப்போதும் எரியும் வன்மத்துடன் மீசையை முறுக்கியபடி நடக்கும்போது கத்தியை செருகி இழுத்த

உண்மையைப் பேசினால் உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் -ஜூவாலா கட்டா

படம்
ஜூவாலா கட்டா, பாட்மின்டன் விளையாட்டு வீரர். காமன்வெல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர். தெலங்கானாவில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டார் என்று போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்களின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க மக்கள், ஊடகங்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்விளைவாக அவர்கள் தப்பித்துச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை போலீசார் அடுத்த நாள் ஊடகங்களிடம் கொடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் ஆதரித்தாலும், மனித உரிமைக்கு எதிரானது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த என்கவுன்டர் அழித்துவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஜூவாலா கட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை. என்ன காரணம்? இந்தியாவில் கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். என்னைப் பாருங்கள். எனக்கு தவறு என்று தோன்றும் விஷயங்களில் நான் தைரியமாக பேசுவேன்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச

குப்பையில் உடல் பாகங்களை தேடிய போலீஸ் - பட்சர் அட்டூழியம்

அசுரகுலம் சென் யாங்ஃபெங் சென் யாங்ஃபெங் ஒரு சீரியல் கொலைகாரர். 1983 ஆம் ஆண்டு பிறந்தவர், செய்த கொலைகளுக்காக 2003 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். சென், சீனாவின் வென்சூ பகுதியில் பத்து பேர்களைக் கொன்றார். காரணம் , குப்பை பொறுக்குவதில் ஏற்பட்ட தகராறுகள்தான். தனக்கு தொழில் போட்டியாக இருந்தவர்களை ஜாலியாக பேசி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அத்தனை பேர்களையும் வெண்டைக்காய் நறுக்குவது போல கொன்று நறுக்கி ஊரின் மூலை முடுக்கெங்கும் ஒவ்வொரு பார்ட்டாய் வீசி எறிவது சென்னின் வழக்கம். இவர் கைதானது ஆச்சரியமான நிகழ்வுதான். சென் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போலீஸ், ஜஸ்ட் உங்களது சைக்கிளை சற்று நகர்த்திக்கொள்ளுங்கள் என்று கேட்கத்தான் காலிங்பெல் அழுத்தினர். ஆனால் கதவு நீக்கியபோதுதான், சென் தன் போட்டியாளரை கொன்று உப்புக்கண்டம் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. சென் ஆன் தி டூட்டியாக ஒரு ஆளைக் கொன்று கொண்டிருந்தார் அல்லவா? அவர்தான் சைக்கிள் ஓனரும் கூட. சென் கைதானது தெரிந்தவுடன் வென் சூ ஏரியாவே மிரண்டு போனது. வெளியாட்கள் அங்கு வந்தாலே சந்தேகமாக பார்க்கத் தொடங்கினர். சென்னின் கைவண்ணத்தா

குற்றவாளி காக்கிச்சட்டை - கவச்சம் எப்படி?

படம்
கவச்சம் (தெலுங்கு) இயக்கம்: ஸ்ரீனிவாஸ் மாமில்லா ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு எஸ்எஸ். தமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய், நேர்மையான போலீசாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரின் அம்மாவின் ஆசை. அவரின் அப்பாவும் போலீஸ்தான். சாதாரணமாக ரிவைவ் இரண்டு லிட்டர் குடித்தது போல படத்தில் உலாவும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸூக்கு இது போதாதா?  யெஸ். படம் பார்க்கும் நமக்கும் வில்லன்களை அடிக்கும்போதே நவ துளைகளின் வழியாக ரத்தம் வழிகிறது. கதைக்கான முக்கியத்துவத்தை கைவிட்டு ஹீரோவுக்கு ஆரத்தி எடுப்பதிலேயே முழுப்படமும் நாசமாக போய்விட்டது.  விஜய், வேலை பார்க்கும் ஸ்டேஷனலில் சின்டகாயலா ஆவேசம் அவரின் உயரதிகாரி. ஆனால் அனைத்துக்கும் கமிஷன் பார்ப்பதில் வேகமாக இருக்கிறார். விஜயின் ஹானஸ்ட் வேகத்தை தடுக்க மாட்டேன் என்று கூறி, அதற்கான கிரடிட்டை தனக்கு கொடுக்க வற்புறுத்துகிறார். விஜய், சரி நல்லது நடந்தால் போதும் என அதையும் ஏற்கிறார்.  இதுவே ஒப்பனிங் பாடலோடு இருபது நிமிடமாச்சே! ஹீரோயின் எங்கப்பா என்றால் காஜல்(சம்யுக்தா சக்சேனா) ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகிறார். மாலில், தொலைந்த பர்சை எடுத்துக்கொடுத்த