காமெடி டோஸில் தேசப்பற்று படம்! - சூர்யவன்சி - ரோகித் ஷெட்டி

 









சூர்யவன்சி

ரோகித் ஷெட்டி


மும்பையில் தொண்ணூறுகளில் நடைபெறும் குண்டுவெடிப்பு அதைத்தொடர்ந்து அதை ஏற்பாடு செய்து வைக்கும் தீவிரவாதிகளை எப்படி சூர்யவன்சி என்ற போலீஸ் அதிகாரி களையெடுக்கிறார் என்பதே கதை. 

ரோகித் ஷெட்டி இந்தியில் தெலுங்கு சினிமா எடுப்பவர் என்பதால், ஆக்சன் காட்சிகள், வண்டிகள் வெளிப்பது. பசூக்காவிலிருந்து புறப்பட்டும் குண்டுகளை கூட தோளை சற்றே கீழிறக்கி நாயகன் தப்பிப்பது, புல்லட் ப்ரூப் ஜாக்கெட் கூட போடாமல் சண்டை போடுவது என அத்தனை டூமாங்கோலித்தனங்களும் படத்தில் உண்டு. 

அத்தனையையும் தாண்டி படத்தை ரசிக்க வைப்பது படத்தின் கதையும், இந்து முஸ்லீம்கள், இந்தியாவை துண்டாட நினைக்கும் பாகிஸ்தான் முஸ்லீம்கள் என பிரித்து வைத்து நேர்மையாக பேச நினைத்திருப்பதுதான். அந்த வகையில் படம் தனித்து தெரிகிறது. 



இந்தி படம்தான். கையாளும் விஷயம் கூட சீரியஸ்தான். ஆனால் படம் நெடுக காட்சிகள் நகைச்சுவையோடு நகர்கின்றன. நாயகன் சூர்யாவிற்கு அமைச்சர் கொடுக்கும் அந்த லூசாய்யா என்ற பில்டப் மட்டுமே. மற்றபடி அவர் தன்னுடைய சக குழு உறுப்பினர்களின் பெயரையே மாற்றிச்சொல்லும் வியாதி இருக்கிறது. அதையே காமெடிக்காக பயன்படுத்தி இயக்குநர் வெற்றிகண்டுவிட்டார். கிளைமேக்ஸ் காட்சி வரையில் இந்த பெயர் மறக்கும் விஷயம் சிறப்பாக வேலை செய்கிறது. 

சூர்யா, அவரது மனைவி ஆகியோரின் வாழ்க்கையில் காவல்துறை வேலை கொடுக்கும் அழுத்தம், விளைவுகள் ஆகியவற்றையும் இயக்குநர் இலகுவாக கையாண்டு மனதில் பதிக்க நினைத்துள்ளார். ஆனால் மழைப்பாடல் பொறுமையை சோதிக்கிறது. 



படத்தின் உருவாக்கம், சண்டைக்காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் தமிழ் டப்பிங் கூட நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. தேசப்பற்று படம்தான். ஆனால் அதனை கதைக்கு தேவையானபடி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரோகித். 

சரவெடி

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்