இடுகைகள்

மரணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகிலுள்ள வினோதமான காடுகள்- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

படம்
  ஆவோகிகாகரா, ஜப்பான் வினோதமான காடுகள் விஸ்ட்மேன்ஸ் வுட் இங்கிலாந்து டர்ட்மூர் தேசியப்பூங்காவின் ஒருபகுதியாக விஸ்ட்மேன்ஸ் வுட் காடு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இந்தக் காடு அமைந்துள்ளது. உயரமாக ஓக் மரங்களின் கிளைகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பதே கடினமாக இருக்கும். பேய், பூதம், பிசாசு இருக்கும் என்றாலும் நம்பியே ஆகவேண்டிய அனைத்து செட்டப்புகளும் இக்காட்டில் உண்டு.  தி ஸ்வார்ஸ்வால்ட் ஜெர்மனி இதனை கருப்புக்காடு என்று சொல்லுகிறார்கள். பிரதர்ஸ் கிரிம்ப் போன்றோர் இக்காடு பற்றி ஏராளமான கதைகளை எழுதியுள்ளனர். ஓநாய் இருக்குமாம், சூனியக்காரிகள் இருப்பார்களாம், தீய சக்திகள் குடியிருக்கும் காடாம் என அரண்மனை 4, 5 எடுக்கும் அளவுக்கு சமாச்சாரங்கள் உள்ளன. இக்காட்டிற்குள் நுழையும் சிறுவர்கள், அவர்களின் பாவக்கணக்கிற்கு ஏற்ப தண்டிக்கும் அரக்க மனிதனும் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். இக்காட்டிற்குள் உள்ளே போனவர்கள் திரும்ப வெளியே வரமுடியாது எனவும் கதை கட்டி வருகிறார்கள்.  தி ஹோயா பசியு காடு ரோமானியா வடமேற்கு ரோமானியாவில் அமைந்துள்ள காடு. இதனை ரோமானியாவின் பெர்முடா டிர

கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு!

படம்
கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு உலகில் பத்தில் ஒருவருக்கு கொசுக்கள் பல்வேறு நோய்களை பரப்புவதாக வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இப்போது அதனை முற்றாக அழிக்கும் ஆய்வுகளும் கூட உலக நாடுகளில் நடந்து வருகின்றன. ஆனாலும் கூட இதற்கான முழுமையான தீர்வுகள் நமக்கு கிடைக்கவில்லை.  பாலூட்டிகள், முதலைகள் என  பல்வேறு விலங்குகளிடமிருந்து ரத்தத்தை கொசுக்கள் உறிஞ்சி எடுக்கின்றன. மனிதர்களை மட்டுமே இப்போது குறிவைத்து தாக்கினாலும் இதற்கு காரணம், பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதுதான்.  இருவாழ்விகள், பாலூட்டிகள், மீன்கள், புழுக்கள் ஆகியவற்றிடமிருந்தும் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி உணவைப் பெறுகின்றன. கூடுதல் போனஸாக விலங்குகளுக்கு பல்வேறு நோய்களையும் பரப்புகின்றன.  கொசுக்கள் இரவு நேரத்தில் பூக்களின் மீது சென்று அமர்ந்து மகரந்தசேர்க்கைக்கு  உதவுகின்றன என்று பொதுவாக பலரும் கூறுகின்றனர். இதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிகம் கிடையாது என லாரி ரீவ்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.  இதுபற்றிய முழுமையான தகவல் ஸ்மித்சோனியல் இதழில் வெளியா

அம்மா மீதான வெறுப்பு கொலைகளுக்கு முக்கிய காரணமா இல்லையா? - சைக்கோ டைரி

படம்
      சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்களை படங்களில் யாரும் உள்ளது உள்ளபடியே காட்டமாட்டார்கள் . அப்படி காட்டினால் தியேட்டரில் , ஓடிடியில் படம் எப்படி ஓடும் . அப்படியானால் எந்த படமும் சீரியல் கொலைகாரர்களை நிஜமாக ரத்தமும் சதையுமாக காட்டவில்லையா என்று கேள்வி எழும் . An eye for an eye என்ற படம் ஓரளவுக்கு சீரியல் கொலைகா ர்களை திரையில் சரியாக காட்டியது என்று கூறலாம் . படத்தை விமர்சகர்களை கழுவி ஊற்றினர் . ஆனாலும் நடித்தவர்கள் தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருந்தனர் . வேறுபடங்களைக் கூட இந்த வகையில் கூறலாம் . தி பேட் சீட் , சிட்டிஷன் எக்ஸ் , எ ஸ்ட்ரேஞ்சர் அமாங் அஸ் , டு கேட்ச் எ கில்லர் ஆகிய படங்களை எப்படி நிதானமாக பாருங்கள் . ஸ்டான்லி குப்ரிக் தனது மனவோட்டத்தின்படி எடுத்த எ கிளாக்வொர்க் ஆரஞ்ச் என்ற படமும் முக்கியமானது . இப்படியொரு குற்றவாளியை அதுவரை யாரும் யோசித்தே பார்த்ததில்லை என்று கூறலாம் . வில்லன் யார் சீரியல் கொலைகாரர்கள் நூறு சதவீதம் வில்லன்கள் என்று கூறிவிட முடியாது . அவர்களிடம் சில நல்ல அம்சங்கள் இருக்கலாம் . ஆனால் வன்முறையும் , கொலை மீதான ஆர்வமும் பிற விஷயங்களை அமுக்கிவ

கோவிட் இறப்புகளை கணக்கிடுவது முக்கியமா?

படம்
  கோவிட்டில் இறந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை பல்வேறு மாநிலங்கள் ஊடகங்களுக்கு அறிவிப்பதில்லை. காரணம், அப்படி கூறினால் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற பயம்தான்.  ஆனால் உண்மையில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தால்தான் நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தும்படியான வசதிகளையும், கொள்கைகளையும் உருவாக்க முடியும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் இந்த எண்ணிக்கையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதெல்லாம் பெரும்பாலும் நகரங்களில் எளிதாக கடைபிடிக்க முடியும். ஒருவர் இறந்துவிட்டால் அதற்கான சான்றிதழை பெற்று அவரை தகனம் செய்கிறார்கள். இதனால் அவருடைய இறப்பு மருத்துவமனையில், அரசு அமைப்பிலும் என இரண்டு இடங்களில் முறையாக பதிவாகிறது. ஆனால் அரசு அமைப்புகளுக்கு எட்டாத தொலைதூர கிராமங்களில் இம்முறை செயல்படாது. இங்கு ஒருவர் கொரானாவில் இறந்தாலும் கூட அதைப்பற்றி அரசுக்கு தெரிவிக்காமல் உடலை தகனம் செய்துவிடுகிறார்கள்.  இதனைத் தவிர்க்க மத்திய அரசு வெர்பல் ஆட்டோஸ்பை எனும் முறையைக் கொண்டுவந்தது. மருத்துவர் இல்லாத சூழலில், குடும்பத்தினர், நண்பர்கள் கூறும் தகவல்களை வைத்து அவரின் இறப்பு முட

சடலங்களை மறைக்க சீரியல் கொலைகாரர்கள் மெனக்கெடுகிறார்களா?

படம்
                சித்திரவதை தொடர் மற்றும் சைக்கோ கொலைகார ர்களை மோசமானவர்கள் என்று எப்படி பிரிப்பது , இதற்கு பலரும் பல்வேறு வித எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள் . ஆனால் எளிதான ஒன்று யார் உங்களையும் , உங்களது நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்களை கொல்கிறார்களோ அவர்கள்தான் என்று கூறலாம் . ஒரு கொலைகாரர் எந்தளவு மோசமானவர் என்பதை அவர் செய்யும் சித்திரவதையை வைத்து முடிவு செய்யலாம் . இந்த வகையில் டெப்ரி டாமர் , அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்னோடியான ஆள் . இவர் , தான் கொல்லும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு தலையில் ட்ரில்லிங் மெஷி்ன் வைத்து துளையிடுவார் . பிறகு அமிலங்களை எடுத்து உள்ளே ஊற்றுவார் . இதனால் பலரும் மயக்கத்தில் இருக்கும்போது , இறந்துபோனார்கள் . எதற்கு இப்படி சித்திரவதை செய்தீர்கள் என்று விசாரித்தபோது , நான் செய்யும் விஷயங்களை வலியில்லாமல் செய்ய நினைத்தேன் என பேட்டி கொடுத்தார் டாமர் . பிரான்சில் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்ற கில்லெ்ஸ் டி ரைஸ் , பதினைந்தாம் நூற்றாண்டில் முக்கியமான கொலையாளி . இதற்கு அடுத்து ஆல்பர்ட் பிஷ் உள்ளே வர