இடுகைகள்

சீரியல் கொலைகாரர்கள் புத்தகம் எழுதுவது இதற்காகத்தான்!

படம்
  குற்றவுணர்ச்சி  சீரியல் கொலைகார ர்கள் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது குற்றவுணர்ச்சி பற்றி கேட்டால் என்ன சொல்வது? குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அவர்களின் மூளையில் தேய்ந்துபோயிருக்கும். காவல்துறையில் பிடிபட்டு தூக்கு தண்டனை கொடுக்கும்போது மட்டுமே இனிமேல் கொலைகள் செய்ய முடியாது என கர்த்தரே, பாலாஜி, அல்லா என அலறுவார்கள். ஆனால் சாட்சிகள் கான்க்ரீட்டாக இருந்தால் என்ன செய்வது? உறுதியாக சாவுதான்.  மன்னிப்பு கூட கேட்கமாட்டார்களா என்றால் அதுவும் கூட கிடையாதுதான். அவர்கள் மன்னிப்பு கேட்பதே இன்னும் கொடூரமாக இருக்கும். உங்கள் மகள் இறக்கும்போது வலியாலும், பயத்தாலும் கத்தியது எனக்கு வேடிக்கையாக இருந்தது என சொல்லி மன்னிப்பு கேட்பார்கள். இதனை நீங்கள் மன்னிப்பாக ஏற்பீர்களா? குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விடுவார்கள். அந்தளவில் சிறைக்கு சென்றாலும் கூட நான்தான் அதனை செய்தேன் என்று ஏற்கமாட்டார்கள். அதனை கடவுள் வந்து கட்டளையாக செய்யச் சொன்னார் என புருடா விட்டு எரிச்சலை கிளப்புவார்கள். இதெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேசுவதுதான்.  புத்தக எழு

எரிபொருளுக்கான மத்திய அரசு வரியைக் குறைக்க முடியாது! - நிதியமைச்சர் நிர்மலா

படம்
  நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் பொருளாதாரம் மெல்ல நல்ல நிலைக்கு மீள்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? பொருளாதாரம் மீள்வதை நான் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன்.  அனைத்து துறைகளிலும் நேர்மறையான விஷயங்கள், அறிகுறிகள் தெரிய வேண்டுமென நினைக்கிறேன். இதனை சிலர் சென்டிமென்ட் என்று கூறுவார்கள். சென்டிமென்ட் நேர்மறையாக இருக்கும்போது நிறைய மாற்றங்களை தரும் என நினைக்கிறேன்.  பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? இரண்டுமே ஒன்றுபோலவே இருக்காது என்பது உண்மை. மக்களை பாதிக்காத அளவில் பணவீக்கம் இருப்பது பிரச்னையில்லை. இதை தடையாக நினைத்து வளர்ச்சிக்காக திட்டமிடாமல் இருக்கமுடியாது. வளர்ச்சிக்கான எங்களது செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலைகளை ஏன் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவில்லை? அப்படி கொண்டுவருவது மாநிலங்களின் முடிவுகளைச் சேர்ந்தது. எரிபொருள், மது தொடர்பான வரி விஷயங்களை மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். இதில் அவர்கள் வரிகளை குறைக்க அல்லது உயர்த்துவது பற்றி முடிவெடுக்கலாம்.  இந்த நேரத்த

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

டீன் ஏஜ் இளைஞர்களுக்கான நூல்கள் 2015-2017

படம்
  2015 சிக்ஸ் ஆப் கிரௌஸ்  லெய் பர்டுகோ புனைவுக்கதையில் நாயகர்களுக்கும் எதிர்மறை பாத்திரங்களுக்கும் இடையிலுள்ள குண வேறுபாடுகளை லெய் நூலில் விளக்கியுள்ளார்.  2016 சால்ட் டு தி சீ ரூடா செப்டிஸ் கிழக்கு ப்ருஸ்யாவில் நடைபெறுகிற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு படகு வழியாக மூன்று பாத்திரங்கள் எப்படி செல்கிறார்கள், இவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள்தான் கதை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பிறகு நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது.  2016 தி சன் ஈஸ் ஆல்ஸோ எ ஸ்டார் நிக்கோலா யூன் நியூயார்க்கில் நடைபெறும் காதல் கதை. எழுத்தாளர் டேவிட் யூன் மற்றும் நிக்கோலாவின் கணவர் ஆகியோருடனான காதல் சம்பவங்களை இந்த நாவல் தழுவியுள்ளது.  2016 வீ ஆர் தி ஆன்ட்ஸ் சாவுன் டேவிட் ஹட்சின்சன் பள்ளியில் கடுமையாக கேலி செய்யப்படும் ஹென்றி, உலகை காப்பாற்ற முயலும் கதை. உலகை ஹென்றி காப்பாற்றுவானா என்பதுதான் முக்கியமான அம்சம்.  2016 வென் தி மூன் வாஸ் அவர்ஸ்  அன்னா மேரி மெக்லெமோர் இரண்டு இளம் வயதினர் தங்களுக்குள் கொள்ளும் காதல் உறவுதான் கதை. உலகையே மறந்து இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள்தான் முக்கியமான அம்ச

குற்றங்களை ஆவணப்படுத்துபவருக்கும் போலீசாருக்குமான வேறுபாடு!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துதல் காவல்துறை குழு, சிறந்த குழுவை கொண்டிருக்கவேண்டியது அவசியம். அதாவது, விருப்பு வெறுப்பு ஈகோ இல்லாமல் கொலை நடந்த இடத்தில் உள்ள விஷயங்களை காரண காரியத்தோடு ஆராயும் தன்மை  தேவை. அப்போதுதான் அவர்கள் குற்றங்களை ஆவணப்படுத்துவர் சொல்லும் தகவல்களை சரியாக உள்வாங்கி வேலை செய்யவேண்டும்.  குற்றங்களை ஆவணப்படுத்துபவர் பல்வேறு தகவல்களை சேகரிப்பார். அவற்றில் காவல்துறைக்கு எது பயன்படுமோ அதை மட்டுமே அவர்களுக்கு கோப்பாக எழுதி கொடுப்பார். அதை வைத்து உடனே குற்றவாளியை  பிடித்து வந்துவிட முடியாது. காவல்குழு துடிப்பான ஆட்களை கொண்டிருந்தால் குற்றவாளியை செவுளிலேயே போட்டு இழுத்து வந்துவிட முடியும். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், கொலை, கொலைக்கான காரண காரியங்கள் ஆகியவற்றை வைத்து விசாரணைக்கு உதவும்படியான விஷயங்களை தொகுத்து வைத்திருப்பவர் என்று கூறலாம்.அவர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டே உடனே குற்றவாளியின் வீடு தேடி போலீஸ் பேட்ரோல் காரை அனுப்பி வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  குற்ற ஆவணப்படுத்தல் வல்லுநருக்கும் காவல்துறையினருக்குமான வேறுபாடு இன்ஸ்பெக்டர், குற்றங்களை ஆவணப்

கொலையாளியின் இடத்தை கண்டுபிடிக்கும் நுட்பம்!

படம்
  ஒரு கொலையை சீரியல் கொலைகாரர் செய்துள்ளார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்..... மூளையைக் கொஞ்சம் யூஸ் பண்ணுங்க என ஹெக்கிமோக்ளு டிவி தொடரில் டாக்டர் அட்டீஸ் அடிக்கடி சொல்லுவார். அதே பஞ்ச்தான்.கொலை செய்யப்பட்டவர், கொலையான விதம், அதில் கிடைக்கும் தகவல்கள் என ஆராய்ந்து பார்த்துத்தான் முடிவுக்கு வரவேண்டும்.  இதனை சரியாக உணராமல் ஒருவர் முடிவெடுத்தால், கொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். போலீசாரும் வலையை வீசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். குற்றவாளியை பிடிப்பது கடினம்.  கொலைசெய்யப்பட்டவர் கூடுதல் போனஸாக வல்லுறவு செய்யப்பட்டிருந்தால் அதனை சீரியல் கொலைகார ர் செய்துள்ளார் என தீர்மானிக்கலாம். அல்லது கொல்லப்பட்டவரின் உடலில் ஏதாவது குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச்செல்லலாம். குறிப்பிட்ட காவல்நிலைய  எல்லை தாண்டிக் கூட இதுபோல கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். எனவே, வேறு காவல் நிலையங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்களின் வரலாற்றையும் ஆராய வேண்டும். இதெல்லாம் சந்தேகத்தில்தான் செய்யவேண்டும். அடுத்த கொலை நடக்கும் வரை காத்திருந்தால் எளிதாக குற்றவாளியை பிடித்து விடலாம்.  கொலையாளியின் வசிப்ப

அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

படம்
  மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ்  உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர் வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.  ஆன்டிலியோகோட்ரைன்ஸ் இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.  புரோன்சோடிலேட்டர்ஸ் ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அறிகுறி தெரிந்தவுடனே