இடுகைகள்

ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

படம்
  விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.  சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நி

சிறுவர் காப்பக சிறுவர்களை தொழில்முனைவோர்களாக்கும் மாணிக்க பாரதி! - நமது தோள்கள் அறக்கட்டளையின் அரிய பணி

படம்
  மாணிக்க பாரதி, சமூக செயல்பாட்டாளர். இப்படி ஒற்றை வரியில் ஏதாவது சொன்னால் யாருக்குமே புரியாது அல்லவா? இவர் காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை தொழில்முனைவோராக்க பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதற்கு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் ஆதரவும் உதவியும் கிடைத்துள்ளது. பேக் அண்ட் சேஞ்ச் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முயன்று வருகிறார்.  தனது பேக்கரியில் உள்ள உணவுவகைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை இத்தொழிலுக்கு வர உதவி வருகிறார். இதில் ஐந்து பேர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு பேக்கரி கல்வித் திட்டத்தை தொடங்கியபோது ஒரு மாணவர்தான் இதில் இணைந்திருந்தார். மாணிக்க பாரதிக்கு, குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தரவேண்டும் எப்போது தோன்றியது? அதற்கு சோகமான முன்கதை 2015ஆம் ஆண்டில் அவரது சகோதரி இறந்துபோனார். கடைசி வார்த்தையாக உன்னை உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயங்களைச் செய் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப்பிறகுதான் அரசு அமைப்புகளோடு இணைந்து மக்களுக்கு வாழ்க்கைத்திறன்களை சொல்லிக்கொடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கிய

மொழிபெயர்ப்பில் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பது அவசியம்! - டாக்டர் கே. செல்லப்பன், மொழிபெயர்ப்பாளர்

படம்
            டாக்டர் செல்லப்பன் மொழிபெயர்ப்பாளர் அண்மையில் மார்ச் 12 அன்று தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்த்த பணிக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார் . 2020 க்கான விருது இது . மொழிபெயர்ப்புக்கான விருது என்றாலும் கூட இது தாமதமாகவே இவருக்கு கிடைத்துள்ளது . தாகூரின் நாவல் இன்று கலாசாரம் சார்ந்து ஒருவருக்குள் எழும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்படி அமைந்துள்ளது . செல்லப்பன் புதுக்கோட்டையில் உள்ள ராஜா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார் . பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான கல்லூரிகளில் ஆசியராக பணியாற்றியுள்ளார் . இவரது கற்பித்தல் முறைகளை மாணவர்களே தன்னார்வமாக பணம் சேகரித்து ஆவணப்படமாக்கியுள்ளனர் . தூங்கும்போது வரும் கனவு அழகாக இருக்கிறது . எழும்போது கண்முன்னே உள்ள வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தத்துவமாக பேசுபவர் அப்படியேதான் வாழ்ந்தும் இருக்கிறார் அவரிடம் பேசினோம் . இந்த நேர்காணல் புத்தகத்திலுள்ளதன் சுருக்கமே ஆகும் . தாகூரின் கோராவை மொழிபெயர்ப்புக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ? அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அகாதெமியின் முடிவு . எனக்

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்

பசுமை விருதுகளைப் பெற்ற இயற்கை செயல்பாட்டாளர்கள்!

படம்
  சுந்தர்லால் பகுகுணா சுந்தர்லால் பகுகுணா சிப்கோ இயக்கத்தை தொடங்கிய தலைவர். இமாலயத்திலுள்ள மரங்களை காக்கும் இயக்கம், காந்திய அணுகுமுறை போராட்டத்திற்காக புகழ்பெற்றது. 1980-2004 வரையிலான ஆன்டி டெரி டாம் எனும் இயக்கத்தை நடத்தி தலைமை தாங்கினார். சிப்போ இயக்கம் இவரது மனைவியினுடையது.  உத்தரகாண்டில் மரங்களை ஒப்பந்ததாரர் வெட்ட வந்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்து தடுத்தனர். 1981-83 வரையிலான காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரங்களை வெட்டக்கூடாது என பிரசாரம் செய்தார்.  இந்திராகாந்தியை சந்தித்து மரங்களை வெட்டுவதற்கான தடையைப் பெற்றார். இதனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒருவர் மரங்களை வெட்ட முடியும்.    சாலுமாரதா திம்மக்கா சாலுமாரதா திம்மக்கா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 385 ஆலமரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஹூலிகல் குதூர் நெடுஞ்சாலையோரம் இப்பணியை செய்துள்ளார்.  குவாரியில் வேலை செய்த திம்மக்காவுக்கு முறையான கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்சொன்ன மரங்கள் இல்லாமல் எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வ

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போத