இடுகைகள்

நாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறியாளர் பெண்மணி!

படம்
  கோவையில் உள்ளது சீரநாய்க்கன்பாளையம். இங்குதான், ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சுவர்கள் முழுவதும் விதவிதமான நாய்கள் நம்மை பல்வேறு வித குணங்களுடன் செய்கைகளுடன் பார்க்கின்றன. ஐ லவ் யூ, யூ வில் ஃபீட் மீ என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தெருநாய்கள், காயமுற்ற நாய்களை பாதுகாக்கும் அமைப்பு இது.  தன்னார்வ தொண்டு அமைப்பாக 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 70 ஆயிரம் நாய்களை பாதுகாத்து பராமரித்துள்ளனர். இந்த செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தவர் மினி வாசுதேவன். இவர் தனது கணவரோடு அமெரிக்காவில் பொறியாளராக வேலை செய்து வந்தவர். பிறகே, பதிமூன்று ஆண்டுகள் கழித்து அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார். இவரது கணவர் பெயர், மது கணேஷ்.  2019இல் மினி வாசுதேவனுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சீரநாய்க்கன்பாளையத்தில் உள்ள காப்பக இடம் போதாமல், கோவை வழுக்குப்பாறை அருகில் 15 ஏக்கர் நிலத்தில் காப்பகம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இங்கு இயற்கை சூழலில் நாய்களை பாதுகாத்து பராமரிக்கிறார்கள். இதில் வேலை செய்யும் சம்பள பணியாளர்களின் எண்ணிக்கை

தெரு நாய்களைப் பராமரிக்கும் மருந்துகடை உரிமையாளர்!

படம்
  ஜெய்ப்பூரைச் சேர்ந்த வீரென் சர்மா பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் கால்நடை, செல்லப்பிராணிகளுக்காக மருந்துக்கடை நடத்துகிறார். அதையும்கூட இவர் தொடங்கவில்லை. சர்மாவின் தாத்தா 1957இல் தொடங்கியதை அப்படியே பின்தொடர்கிறார். அப்போது எதற்கு நாம் இவரைப் பற்றி பேசுகிறோம்?  தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார். அதற்காகத்தான். 2000இல் நாய்க்குட்டிகளை வணிக ரீதியாக விற்கத் தொடங்கினார். முதலில் தெருவில் இருந்த நான்கு குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தவர், உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். பிறகு பார்த்தால், அவரது மருந்துக்கடை முழுக்க நாய்களை தத்து எடுக்க நிறைய பேர் வந்துவிட்டனர். இப்படித்தான் தெருவில் இருக்கும் நாய்க்குட்டிகளை வளர்க்க நிறைய பேர்  உருவாகியிருக்கிறார்கள். இந்த வகையில் 2500 நாய்க்குட்டிகளுக்கு புதிய வளர்ப்பு பெற்றோர் கிடைத்துள்ளனர்.  பொதுமுடக்க காலத்தில் வாரம்தோறும் சனியன்று நூறு நாய்களுக்கு உணவளித்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து 1200 நாய்களுக்கு சென்றிருக்கிறது. நா

பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?

படம்
              பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் ? மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம் . இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான் . விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது . பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே . இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம் . முடிவுகளை முன்னரே யோசித்தல் பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம் , இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான் . இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும் , பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது . இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது . ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான் . சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்

நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      1. ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன . ரியல் : இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை . ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது . அதன் பெயர் ஓவர்டூன் . இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது . இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து . ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன . பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ் . இருண்ட , மேகங்கள் சூழ்ந்த , வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் , தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன . இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன . 2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை ! ரியல் : அவசியமில்ல

2020ஆம் ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள் ஐந்து!

படம்
                          முக்கியமான அறிவியல் செய்திகள் 2020 விண்ணில் பெண் ! ஆர்டெமிஸ் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் பங்கேற்பார்கள் என நாசா நிறுவனம் செப்டம்பரில் அறிவித்தது பலரையும் கவர்ந்தது . எஸ்எல்எஸ் எனும் லாஞ்ச் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது . ஓரியன் விண்கலத்தை இதற்கு பயன்படுத்தவிருக்கிறது . இந்த திட்டம் நவம்பர் 2021 இல் திட்டமிடப்பட்டுள்ளது . மொத்த நாட்கள் விண்வெளியில் இருப்பது என 26 நாட்கள் திட்டமிட்டுள்ளனர் . இதில் ஆறு நாட்கள் நிலவைச்சுற்றி வரும் திட்டம் உண்டு . ஆர்டெமிஸ் 2 திட்டம் 2023 இல் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் . இந்த திட்டம் வெற்றிபெற்றால் அப்போலாவுக்கு பிறகு 1972 க்குப் பிறகு வெற்றிகரமாக மனிதர்களோடு நிலவுக்குசெல்லும் திட்டம் இதுவாகவே இருக்கும் . ஆர்டெமிஸ் 3 என்பது மனிதர்கள் நிலவுக்கு செல்லும் திட்டத்தைக் கொண்டது . இது வெற்றியடைந்தால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்வது சாத்தியமானது என்று வரலாற்றில் பதிவாகலாம் . புற்றுநோயை குணமாக்க முடியும் நடப்பு ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய் செல்களை செயலிழக்க

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன

அதிக இரைச்சலுக்கு நாய்கள் பயப்பட்டு பதுங்குவது ஏன்?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி திடீரென தரை அதிரும் சத்தம் கேட்டால் நாய்கள் நடுங்கி பெட்டின் அடியில் பதுங்குவது ஏன்? நாய்கள் மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட இடிக்கு, பட்டாசுக்கு, வெடிகுண்டுக்கு பயந்து பதுங்குவது உண்டு. நாய்கள் பயப்படுவது அதிகமாக இருபதற்கு காரணம், அவற்றின் கேட்கும் திறன் மிக கூர்மையாக இருப்பதுதான். காரணம், திருவிழாவில் போடும் வேட்டுச்சத்தம் கேட்டால் கூட எங்கள் வீட்டு நாய் பெட்டுக்கு அடியில் போய் பதுங்கிவிடும். இதற்கு ஒலி பற்றிய பயம்தான் காரணம். 2015ஆம் ஆண்டு ஆஸ்லோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வுப்படி, வயதான நாய்கள் அதிக ஒலிக்கு பயந்து நடுங்குவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியோ துக்கமோ அதற்கு ஏற்றபடி நாயை பழக்கப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். அது சாத்தியமா என்று நாயை வளர்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். நன்றி - பிபிசி 

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா பூனை, நாய்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூழலைக் கெடுக்கும் வளர்ப்பு பிராணிகள்! ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஏனெனில் மத்திம சைசில் உள்ள நாய், எஸ்யூவி கார் வெளியிடும் அளவுக்கு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது.இது பூமிக்கு ஏற்புடையதல்ல. பூனைகள், நாய்கள் மனிதர்களுக்கு அடங்கி நடப்பது போல தெரிந்தாலும். அது உண்மையல்ல. அவைகளுக்குத் தான் நாம் சேவை செய்கிறோம். அவை, பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடுவதையும் பெடிகிரி சாப்பிட்டுக்கொண்டே செய்கின்றன. இப்பாதிப்பு இங்கிலாந்தில் அதிகம். இதன் பொருள் நீங்கள் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது என்பதல்ல. அதன் உணவுக்கான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் சரியாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிக்கல்தான். நன்றி - பிபிசி 

சிறிய நாய்களுக்கு ஆக்ரோஷம் ஏற்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி பெரிய நாய்களை விட சிறிய நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஏன்? அக்கறைதான். நாய்களும் ஓர் உயிர் என்று நினைத்தால் பரவாயில்லை. அதனை ஒரு பொருளாக, தொந்தரவாக உரிமையாளர்கள் நினைத்தால் அதனை நாய்கள் உடனே உணர்ந்துகொள்ளும். இதனால்தான் கவனத்தை ஏற்படுத்த சைக்கிளில் வருபவரை கடிக்கப்போவது, வீட்டுக்கார ஆட்களை பிறர் தொட்டால் கூட மேலே விழுந்து பிறாண்டுவது, எப்போதும் ஷோல்டரை தூக்கிக்கொண்டு சண்டைக்கோழி விஷால் மாதிரியே திரிவது என இருக்கும். இதற்கு மரபணு ஒரு காரணம் என்றாலும், நாய்களின் குணம் இப்படி மாற்றுவழியில் போனால் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த பேண்ட் எய்ட் உங்களுக்குத்தான். நன்றி - பிபிசி 
படம்
மிஸ்டர் ரோனி நாய்கள் எப்படி மனிதர்களை விட அதிகளவிலான ஒலியை கேட்கும் விதமாக உருவாகிறது? நாய்கள் அப்படி திறன்களைப் பெற்றிருப்பதால்தான் நாம் அதனை காவல் வைத்துவிட்டது நிம்மதியாக தூங்க முடிகிறது. பயன் இல்லாத எந்த விஷயத்தையும் மனிதர்கள் வைத்திருப்பது இல்லை. அப்போது பூனை என்கிறீர்களா? பூனை எஜமானன் போல. தனிமையை யார் வைத்து நிரப்பினால் என்ன? பெண்களுக்கு பூனை பிடிக்கும். அதனால் வளர்க்கிறார்கள். மனிதர்களால் 20 கிலோஹெர்ட்ஸ் ஒலியைக் கேட்க முடியும் என்றால், நாய்களால் 45 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான ஒலியைக் கேட்க முடியும். பொதுவாக விலங்குகளால் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட செறிவான ஒலியைக் கேட்க முடியும். என்ன காரணம்? உலகில் பிழைத்திருக்க வேண்டுமே? அதற்காகத்தான். இயல்பாகவே நாய்களுக்கு அமைந்துள்ள தலை அமைப்பு மனிதர்களை விட சிறியது. மேலும் இதன் காது அமைப்புகளும் நம்மிலிருந்து மாறுபட்டவை. இதனால் இவற்றின் ஒலி கேட்கும் சக்தியும் அதற்கேற்ப அமைந்துள்ளது. நன்றி - பிபிசி

நாயிடம் இருக்கும் சூப்பர் பவர்! - என்ன தெரியுமா?

படம்
டாக்டர். எக்ஸ் எலி, முயல், கிளி என நாம் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டோம். ஆனால் நம் கூடவே வளைய வரும் நம் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நாய் பற்றி நாம் பெரிதாக கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. பெடிகிரி போட்டால் போதும். பால் சோறு வெச்சால் போதும் என்று இருந்தால் எப்படி? மனிதர்களுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்து பிழைத்து வரும் உயிரினங்களில் முக்கியமானவை நாய்கள். பொதுவாக ஒருவரை நமக்கு ஏன் பிடிக்கிறது? அவர் புத்திசாலி என்பதாலா அல்லது அன்பாக இருப்பார் என்பதாலா? புத்திசாலியாக இருந்தால் அவரைப் பற்றி தமிழ், ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதலாம். அதற்கே கூட அவரிடம் நீங்கள் பழக வேண்டும். மனிதர் தேள் போல கடித்துக்கொண்டே இருந்தால் அவரிடம் உங்களுக்கு பழகத் தோன்றுமா? நாய் அப்படித்தான். பூனைகள் எஜமானர் போல நடந்துகொள்ளும். நாய் அடிமை போலத்தான் நடந்துகொள்ளும். பணம் வைத்திருக்கிறோமோ இல்லையோ, பிஸ்கட் போடுகிறோமோ இல்லையோ  வீட்டிற்குள் நீங்கள் நுழைந்ததும் உங்களை ஆவலோடு ஆக்ரோஷமாக வரவேற்கும் அதனுடைய காட்டுத்தனமான பாசம்தான் அதன் விசேஷம். நாம் வாழ்வில் சிலரிடம் புகழையும் சிலரிடம் பணத்தைய

நாய்களுக்கு உருவாகியுள்ள பரிணாம வளர்ச்சி தசைகள்!

படம்
ஆல்பா படம் ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் பேசியது. ஓநாய்கள்தான் மெல்ல மனிதர்களிடம் பழகி வீடு, பண்ணை என காவல் காத்து மெல்ல நாய் என மாறியது என்று கூறப்படுகிறது. இன்றுவரையிலும் கூட பிற விலங்குகளை விட நாய் மனிதர்களோடு அந்நியோனியமாக உள்ளது. காசுள்ளவர் வீட்டு நாய், ஆடி காரில் உட்காருகிறது. காசில்லாத ரிக்சாவில் தூங்குபவரின் காலடியிலும் ஆதரவாக நாய் இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டை ஏன் கூறுகிறேன் என்றால், நாய்க்கு தேவையானது மனிதர்களின் அன்பு ஒன்றே. அது உங்களை காசிற்காக மதிக்காது. நீங்கள் அதன் மீது கொண்ட நேசத்திற்காகவே உங்கள் மீது விழுந்து புரண்டு விளையாட அழைக்கிறது. தற்போது ஓநாய்களின் கண்களில் இல்லாத தசைகள் நாய்க்கு உருவாகியுள்ளதாக  Proceedings of the National Academy of Sciences  என்ற   அறிவியல் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பிற விலங்குகள் மனிதனை நேரடியாக கண்ணோடு கண் பார்க்காது. முடிந்தளவு அப்படி பார்ப்பதைத் தவிர்க்கும். நாய் மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற இயல்பாக மனிதனின் கண்களைப் பார்க்கும். அப்படிப் பார்க்காதே அது சண்டைக்கு வா என்று சொல்லுவதைப் போல என்ற

பகிர்வதில் யார் பெஸ்ட் நாயா? ஓநாயா?

படம்
ஓநாய் வில்லனாக நினைக்காதீர்கள். நாய்க்கு மூதாதையர்தான் அவை. நாய்களை நாம் நம் வீட்டு விலங்காக மாற்றி முதலில் வாசலில் நின்ற நாயை இன்று பெட்ரூம், சோபா செட்டில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறோம். மனிதர்களிடமிருந்து அவர்களின் குணங்களுக்கேற்ப சமாளித்து வாழ்வதில் பறவைகளில் காக்கை பெஸ்ட், என்றால் விலங்குகளில் நாய்தான் சிறந்தது. அதேசமயம் உணவைப் பகிர்வது, உணர்வுகளை புரிந்து நடந்துகொள்வது ஆகியவற்றில் சாமர்த்தியசாலி. திருடன் மணியன்பிள்ளை நூலில் கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அதற்கு அயிரைமீன் ஆசை காட்டியதும் கடமையை ஐந்து நிமிடங்களுக்கு மறந்துபோகிறது. திருட்டு போனபின்பு ஓனர் அதனைச் சொல்லி கிண்டல் செய்ய இரு நாய்களும் உணவு உண்ணாமல் இருந்து செத்து போகின்றன என்ற செய்தி எனக்கு பதற்றம் தந்தது. திருட்டு கொடுத்தவரின் உணர்வை நாய் புரியாமல் இருக்குமா? சொல்லுங்கள். வியன்னாவிலுள்ள அறிவியல் மையத்தில் இதுகுறித்த சோதனை ஒன்றை செய்தனர். ஆறு நாய்கள், ஒன்பது ஓநாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. திரையில் தெரியும் உணவுகளை தொட்டு ஓநாய்கள் அதனை பி

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தோழன் யார்?

படம்
அட்லஸ் அப்ஸ்குரா ஸ்காட்லாந்தின் ஆர்க்னேயில் புதுமையான தொல்பொருள் புதுமை அரங்கேறியுள்ளது. தொல்பொருள் படிமத்திலிருந்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த நாயின் முகத்தை புதுப்பித்து வடிவமைத்துள்ளனர். மனிதனோடு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நண்பனாக புழங்கி வரும் அடிமை விலங்கு நாய் மட்டுமே. காலத்திற்கேற்ப மனிதர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் மட்டுமே நாய் தாக்குப்பிடித்து வாழ்கிறது. இதைப்போல மற்றொன்றைக் குறிப்பிடலாம். பறவைகளில் அது காக்கை. ஐரோப்பிய சாம்பல் ஓநாயை ஒத்த உடல் அமைப்பைக் கொண்ட நாய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் குவீன் கைர்ன்  எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நாயின் மண்டை ஓடு தொடர்பான படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டது. மேற்சொன்ன இடத்திலுள்ள கல்லறையில் நிறைய நாய்களின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா

ஓநாய்களை நாய்களாக்க முடியுமா?

படம்
பிபிசி ஓநாய்களும் மனிதர்களும் நண்பர்களாவது சாத்தியமா? நாய்கள் ஏறத்தாழ ஓநாய் குடும்பத்திலிருந்து உருவானது என்பது அறிவியல் உண்மை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம்முடன் பழகி நண்பனாக ஏறத்தாழ நம் அடிமையாக உள்ளது. தற்போது வெளிவந்துள்ள புதிய ஆராய்ச்சி, ஓநாய்களையும் நாய்களைப் போல வளர்க்க முடியும் என்று உறுதியாக கூறியுள்ளது. ஆக்ரோஷம் நிறைந்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட விலங்குகளோடு இனப்பெருக்கம் செய்ய வைத்து நாய்கள் உருவாயின. ஆக்ரோஷம் குறைந்தவை வீட்டுக்கும், ஆக்ரோஷம் மிகுந்தவை ராணுவம் மற்றும் காவல்துறைக்கும் தேர்வாயின. காடுகள், பனிப்பிரதேசங்களில் நாய்களின் துணையின்றி மனிதர்கள் வாழ்வது கடினம். எதிர்பாராத ஆபத்துகள் அங்கு அதிகம். அமெரிக்காவின் பண்ணை நிலங்களிலும்  காட்டு விலங்குகளை எச்சரிக்க நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பண்ணை விலங்குளை வேட்டையாடும் ஓநாய்களை எப்படி நாய்களைப் போல வீட்டுக்குள் அனுமதிப்பீர்கள் என வியன்னாவைச் சேர்ந்த கால்நடை கழகம் கேள்வி கேட்டுள்ளது. இதுவும் சரியான சந்தேகம்தான். செரி விடுங்கள். அறிவியலில் எதுதான் சாத்தியம் இல்லை. நன்ற