மன்னருக்கு போலி!
வரலாற்று சுவாரசியங்கள் 3 மன்னருக்கு போலி! ரா . வேங்கடசாமி பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு எவ்வித கொள்கையும் கோட்பாடும் இல்லை. தாங்கள் பிழைக்க வேண்டும் ; சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சிய தாகம் கொண்டவர்களான இவர்களுக்கு , மேல்தட்டு மனிதர்களை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அன்லிமிடெட் திருப்தி. அப்படிப்பட்ட அசகாய எத்தர்களில் ஒருவர் ஹாரிடோமிலா . மறைந்த மன்னர் கெய்சரின் பேரன் என்று சொல்லி உலா வந்தவர் . ஜெர்மனியில் கெய்சரின் பேரன் வில்ஹெம் வான் ஓகன் ஜோலரின் இருக்கும்போதே அப்படி சொல்லி ஏமாற்ற முயற்சித்தது ஹாரிடோமிலாவின் சமர்த்து . ஹாரிடோமிலா , 1904-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார் . நடுத்தரக்குடும்பம் . இவரது தந்தை ஹாரி , சிறு குழந்தையாக இருக்கும்போது இறந்துவிட்டார். 1915- ஆம் ஆண்டு ஜெர்மனியில் லேட்வியாவை ஆக்கிரமித்தபோது ஹாரிக்கு 11 வயது. சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார் ஹாரிடோமிலா . 1918- ஆம் ஆண்டு சில ஜெர்மனி புரட்சியாளர்கள் , முன்னர் அந்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த புரூசியின் நிலங்களை மீண்டும் ஜெர்மனியோடு இணைக்கவேண்டும் என்று வெட்டியாக போராட்டம்