நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா
நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா மோடியின் விரைவான சீர்திருத்தங்களினால் தொழிலாளர்களின் நலன்கள் சீர்குலைந்துபோகும். - பர்வேஸ் ஹபீஸ் தமிழில்: தியோ வான்யா மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான குருதேவ்தாஸ் குப்தா பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களுக்கான திருத்தம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தலை வணங்குவது போன்றதாகும் என்பவர் இந்த திருத்தங்கள் முறைகேடான வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சுரண்டலை சட்டபூர்வமாக்கும் வழிமுறை என்று உறுதிபடக்கூறுகிறார். பிரதமர் மோடி இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் முடிவு பெற்றதாக அறிவித்திருக்கிறார். அதன் தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமரின் அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முதலிலேயே இங்கு இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் இல்லை. அத்திட்டம் என்றோ முடிவுக்கு வந்துவிட்டது. மேற்பார்வையிடுதல் என்பதை குறைந்த அளவிலும், தொழிலாளர் துறையில் செயல்படுத்தப்படுவது இல்லை. தொழிலாளர் வைப்பு நிதி உயர்வு பற்றி பிரச்சனைகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் போதுமா