இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள் - புரட்சியைக் காற்றில் பரப்பும் பாடகன்!

படம்
நம்பிக்கை மனிதர்கள்/ நாயகர்கள் பாடகர் எசல் பத்திரிகையாளன், பாடகன், நடிகன் இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது நடப்பு நிகழ்ச்சிகளை த த்தமது துறை சார்ந்து வெளிப்படுத்தும் திறமை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் அரசியல் பற்றியோ, நாட்டின் நிலை பற்றியோ, ஏழைகளைப் பற்றியோ, பட்டினிச்சாவுகளைப் பற்றியோ எப்படி பேசாமல் இருக்க முடியும். இங்கும் துருக்கியைச் சேர்ந்த பாடகர் அதைத்தான் தன் பாட்டில் செய்தார். செய்துகொண்டிருக்கிறார். ஆனால் தன் நாட்டில் அல்ல; ஜெர்மனியில். என்ன காரணம்? அரசின் சிறை தண்டனைக்கு பயந்துதான். முன்னமே விதித்த ஐந்தாண்டு தண்டனை இவரை பெரியளவு பயமுறுத்தி இருந்தது. பாடல்களில் போதைப்பொருள் மற்றும் செக்ஸ் பற்றி பேசியதுதான் குற்றச்சாட்டாக பதிவானது. ஆனால் உண்மை என்ன என்பது அங்குள்ள மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். துருக்கி சர்வாதிகாரியான எர்டோகனின் குருட்டு ஆட்சி குறித்தும், அதன் வழியாக மக்கள் படும் பாட்டையும் மக்களிடமே சென்று பாடினார் புரட்சிப்பாடகர் எசல். அதுதான் அரசு இவரை தன் ஹிட் லிஸ்டில் சேர்க்க காரணம். ஒரு காலத்தில் 50 டாலர்களைக் கொடுத்து ஸ்பாட்டிஃபை இண

அமெரிக்கர்களை மகிழ்வித்த ஃபுளோரிடாமேன்! - உண்மையா - பொய்யா?

படம்
es.sott.net தெரிஞ்சுக்கோ! அமெரிக்காவில் இணையம் புகழ்பெறத்தொடங்கிய காலகட்டம். உள்ளூர் பத்திரிகைகள் செய்த காரியம், பத்திரிக்கை துறையையே மாற்றியது. இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் உருவாக்கியது. புளோரிடா மேன் நாயை கிளப்பில் அனுமதிக்காததால் போலீசை அழைத்தார், மருத்துவமனையை கொளுத்தினார் என்கிறரீதியில் செல்லும் செய்தி மக்களுக்கு எதிர்பார்த்த சுவாரசியத்தைத் தந்தன. ஆனால் மலினமான பத்திரிக்கை செயல் என பின்னர் விமர்சிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் உணர்ச்சிவசப்பட்ட, மனநிலை சீரற்ற தன்மை கொண்டதும் இதற்கு காரணம். அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் மட்டுமே மனநலம் சார்ந்து செலவழிக்கும் தொகை குறைவு - 36 டாலர்கள் மட்டுமே செலவழிக்கின்றனர். இங்கு அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஃபுளோரிடா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான அலிகேட்டர் வகை முதலைகள் உண்டு. நன்றி: க்வார்ட்ஸ்

கடன் பத்திர வெளியீடு இந்திய அரசைக் காக்குமா?

படம்
flipboard.com  கடன் பத்திர வெளியீடு அரசைக் காக்குமா? இந்தியா, சரிந்துவரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளுக்கான நிதி திரட்டும் முயற்சியாக, இந்திய அரசு கடன் பத்திரங்களை ('Sovereign Bond') வெளியிட்டு வருகிறது. தற்போது புதிய நடவடிக்கையாக வெளிநாட்டினரும் இப்பத்திரங்களை வாங்க முடியும் என்ற அரசின் முடிவு, பொருளாதார வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசு தன் செலவுகளுக்கான நிதியை இருவழிகளில் பெறலாம். வரி மற்றும் பத்திரங்கள் வெளியீடு. வரியை உயர்த்துவது கடுமையான சட்டச்சிக்கல்களைக் கொண்டது. எனவே பல்வேறு நாடுகள் முதிர்வுகாலத்தைக் கொண்ட கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதனை மக்கள் அல்லது நிறுவனங்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அரசு, குறிப்பிட்ட முதிர்வுகாலத்தில் வட்டியுடன் கடன் பத்திரத் தொகையைத் திருப்பி தரவேண்டும். அரசு இப்பொறுப்பில் தவறினால், ரிசர்வ் வங்கி தொகையைத் திருப்பித் தரும்.  இதில் என்ன பிரச்னை? தன் செலவுகளுக்கான நிதி திரட்ட இந்திய அரசு உள்நாட்டுச்சந்தையில் பத்திரங்களை வெள

சட்டம் போட்டால் சமூக பொறுப்புணர்வு கூடுமா?

படம்
mallenbaker.net சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா? இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன. சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.  “2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக்கெடு உள்ளது. அவர்கள் செலவிடாத பணம் அரசின் பொருள

நாஜி கொடுமைகளை உலகறியச் செய்தவர்! - ஹென்ரிக் ராஸ்

படம்
போலந்து புகைப்படக்காரர் ஹென்ரிக் ராஸ் போலந்து நாட்டை நாஜிப்படையினர் ஆக்கிரமித்தனர். ஆண்டு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இப்போரின் விளைவாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு லோட்ஸ் கெட்டோ சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் யூத புகைப்படக்காரரான ஹென்ரிக் ராஸ், லோட்ஸ் கெட்டோ நகரில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சிறைக்கைதிகள் அடையாள அட்டை பணிக்கான புகைப்படங்களை இவரே எடுத்தார். இவர் யூதர் என்ற அடையாளம் தெரிந்தால் தானும் தன் குடும்பமும் சித்திரவதை செய்து கொல்லப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1944 ஆம் ஆண்டு கோடையில் மட்டும் 44 ஆயிரம் மக்கள் நாஜிப்படையின் சித்திரவதை, பட்டினியால் இறந்துபோனார்கள். இவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டும், நச்சு வாயு சேம்பர்களில் அடைக்கப்பட்டும் இறந்தனர். இம்மக்களை பதிவு செய்த ராஸ் உதவியால்தான், அன்று நடந்த ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிந்தது. சிலுவைப்போர்களாலும மக்கள் வதைபட்டு இறந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இனத்தை பழிகூறி அதனை வேட்டையாடி அழித்த சுவடுகள் என்பது ஹிட்லரின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இறுதியில் ரஷ்ய செம்

ஹிப்பி திருவிழா - 1969 வுட்ஸ்டாக் கொண்டாட்டம்!

படம்
அரை நூற்றாண்டுக்கு முன்பு இசைக்கலாசாரம் ஒன்று தொடங்கியது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விநோதர்கள் கலந்துகொண்டனர். ஆம் இவர்கள்தான் இசை, ஆன்மிகம் என நாடோடியாக அலைந்து திரிந்த கேசுவல் ஹிப்பிகள். எல்எஸ்டி போர்டு வைத்து அதனை விற்று காசு சேர்த்து ஜமாய்த்த கில்லாடிகள். அமைதியும் இசையும் என்ற பெயரில் இந்த இசை விழாக்கள் அக்காலத்தில் மரபு ஆட்களையும் அமைப்புகளையும் அதிரடித்தன. அதைப் பலரும் பின்பற்றி இசையமைத்து பாடல்களும் வெளியிட்டனர். வுட்ஸ்டாக் இசைவிழாவை மைக்கேல் லாங், ஆர்டி கான்ஃபெல்ட், ஜோயல் ரோசன்மென், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோர்தான் தொடங்கினர். இவர்கள் பல்வேறு இசை நட்சத்திரங்களை அணுகி, நிகழ்ச்சி நடத்தக் கேட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டனர். ஆனாலும் இளைஞர்களை சந்திக்க முடியும் காரணத்தினால் புகழ்பெற்ற சிலர் இசைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் புகழின் உச்சத்தைத் தொட்டனர். வால்கில் எனுமிடத்தில் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் இசைவிழாவுக்கு இடம் தர மறுத்துவிட்டனர். பின் பெதல் பகுதியில் நிலமுள்ள பால்பண்ணை விவசாயி இடம் தர முன்வந்தார். அதற்கும்

நாய்களுக்கு உருவாகியுள்ள பரிணாம வளர்ச்சி தசைகள்!

படம்
ஆல்பா படம் ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் பேசியது. ஓநாய்கள்தான் மெல்ல மனிதர்களிடம் பழகி வீடு, பண்ணை என காவல் காத்து மெல்ல நாய் என மாறியது என்று கூறப்படுகிறது. இன்றுவரையிலும் கூட பிற விலங்குகளை விட நாய் மனிதர்களோடு அந்நியோனியமாக உள்ளது. காசுள்ளவர் வீட்டு நாய், ஆடி காரில் உட்காருகிறது. காசில்லாத ரிக்சாவில் தூங்குபவரின் காலடியிலும் ஆதரவாக நாய் இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டை ஏன் கூறுகிறேன் என்றால், நாய்க்கு தேவையானது மனிதர்களின் அன்பு ஒன்றே. அது உங்களை காசிற்காக மதிக்காது. நீங்கள் அதன் மீது கொண்ட நேசத்திற்காகவே உங்கள் மீது விழுந்து புரண்டு விளையாட அழைக்கிறது. தற்போது ஓநாய்களின் கண்களில் இல்லாத தசைகள் நாய்க்கு உருவாகியுள்ளதாக  Proceedings of the National Academy of Sciences  என்ற   அறிவியல் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பிற விலங்குகள் மனிதனை நேரடியாக கண்ணோடு கண் பார்க்காது. முடிந்தளவு அப்படி பார்ப்பதைத் தவிர்க்கும். நாய் மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற இயல்பாக மனிதனின் கண்களைப் பார்க்கும். அப்படிப் பார்க்காதே அது சண்டைக்கு வா என்று சொல்லுவதைப் போல என்ற