இடுகைகள்

கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போரைத் தடுக்க நினைக்கும் மவுண்ட் குவா இனக்குழுவைச் சேர்ந்த வாள் துறவியின் சாகசங்கள்!

படம்
  வல்கானிக் ஏஜ்  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம்  160 அத்தியாயங்கள்  மவுண்ட் குவா செக்ட்டைச் சேர்ந்த பெரிய தலைவர்களில் ஒருவர். மரணப்படுக்கையில் கிடக்கிறார். நிறைய விஷயங்களை அறிந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி நினைத்த வெற்றிகளை அவரால் அடைய முடியவில்லை. குறிப்பாக காதல் இல்லை, திருமணம் இல்லை. நட்பு இல்லை. தொடர்புகள் இல்லை. இதனால் சாகும் நிலையில் வருத்தப்படுகிறார். நாம் நினைத்தது போல சந்தோஷமாக வாழ முடியவில்லையே என.... அந்த உயிர் அப்படியே மவுண்ட் குவாவில் உள்ள எட்டு வயதான சிறுவனின் உடலில் புகுகிறது.  அந்த சிறுவனின் பெயர் ஜூ சூ சியோன். அவனுக்கு இப்போது, மூத்த தலைவரின் நினைவுகள் இருக்கின்றன. அதை வைத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னதாக அறிந்து அதை தனக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே கதை.  ஜூவின் மாஸ்டர் ஓவியத்தில் ஆண் போல இருக்கிறார். ஆனால் உரையாடலில் அவரை பெண்பாலாக குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இருந்தால் கதையின் போக்கில் நாம் அவரை ஆண்பாலாகவே புரிந்துகொள்வோம். மவுண்ட் குவா செக்ட், தாவோயிசத்தை கடைபிடிக்கும் துறவி மடம். எனவே, அங்குள

புத்தக கடை உரிமையாளரைக்கொன்ற கொலையாளி - 11 ஆண்டுகள் போராடி பிடித்த காவல்துறை!

படம்
  உணமையான சமத்துவமான நீதி என்பது உலகில் எங்குமே இல்லை. ஏனெனில் மனிதர்களிடையே சாதி, மதம், இனம், அந்தஸ்து, செல்வாக்கு, சமூக அடுக்கு என்ற வகையில் ஏராளமான பாகுபாடுகள் உள்ளன . அரசியலமைப்பு அடிப்படையில் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைக்கும் இடம நீதிமன்றம், ஆனால் அங்குள்ள நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்கள், மனதிலுள்ள முன்முடிவுகளும் கருத்துகளும் கூட தீர்ப்பில் வெளிப்படுகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே பார்த்து தேவையான சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி தண்டனை வழங்குவது சரியானது. பெரும்பாலான நேரங்களில் அரசியல் அழுத்தங்கள், இறந்துபோனவரின் குடும்ப செல்வாக்கு, பணபலம், ஏழையின் நிர்க்கதியான பலவீன நிலை கூட தீர்ப்பை மாற்ற வைக்கிறது. இப்போது இங்கே நீங்கள் வாசிக்கப்போகும் குற்றச்சம்பவம் கூட அத்தகையதுதான்.  ஒரு புத்தக்கடையை வயதான பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் வழியாக பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். வயதான பெண்ணுக்கு புத்தகடை மேல் தனிப்பிரியம் உண்டு. இவர் ஒருநாள் கடையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அதே கடையில்தான் அவரின்

சீரியல் கொலைகாரரான அப்பாவை போலீசில் பிடித்துக்கொடுத்த மகள்!

படம்
  அப்பா, தொடர் கொலைகாரர். தன்னை வெளி உலகில் நல்லவராக காட்டிக்கொண்டு கொலைகளை மறைவாக செய்துவருகிறார். இதை மகள் ஏப்ரல் மெதுவாகத்தான் சந்தேகம் வந்து விசாரணை செய்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட ஐந்துபேர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். ஆனாலும் நீதியுணர்வும், குற்றவுணர்ச்சியும் அவரை துன்புறுத்த தானாகவே சென்று காவல்துறையில் தந்தை எட்வர்ட்ஸ் பற்றி புகார் கொடுக்கிறார்.  காவல்துறையும் முப்பது ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை. ஏப்ரல் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் எட்வர்ட்ஸை பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சிறையில் இறந்துவிட்டார்.  இந்த கொலை வழக்கை சற்று விரிவாக பார்ப்போம்.  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வாட்டர்டவுன் நகரம். அப்போது ஏப்ரலுக்கு ஏழு வயது இருக்கும். அவருக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் உண்டு. ஒருநாள் இரவில், அவரது அப்பா, சீக்கிரமாக கிளம்பவேண்டும் என ஏப்ரலை எழுப்புகிறார். கனசரக்கு வண்டி ஓட்டுநரான எட்வர்ட்ஸ், ஆண்டில் ஆ

செக்ஸ் குற்றவாளிகளை வேட்டையாடி பழியை மர்மநாவல் விற்கும் புத்தகடைக்காரர் மீது போடும் கொலைகாரன் யார்?

படம்
  லீக்கிங் புக்ஸ்டோர்  தாய்லாந்து டிராமா - டி டிராமா 10 எபிசோடுகள் மழைக்கு ஒழுகும் புத்தக கடை, இதை கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அதேதான் தொடரின் பலமும் கூட. மொத்தம் நான்கு கல்லூரி நண்பர்கள் டிடக்‌ஷன் எனும் மர்மக்கதைகள் மட்டுமே விற்கும் புத்தக கடையில் சந்திக்கிறார்கள். இதில் முதன்மையானவர், அதாவது நாயகன் காவோ வென். இவர்தான் நால்வரில் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை, முன்னாள் நீதிபதியின் மகன். ஆனால் சட்டம் படிக்காமல் புத்தக கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அடுத்து, உளவியல் மருத்துவராக உள்ள நண்பர், அவரோடு ஒரே அறையில் வசிக்கும் பெண் தோழி, அவள், தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் வேலை செய்கிறாள். இவர்களுக்கு அடுத்து கல்லூரியில் ஜூனியராக படித்த லான் என்ற இளம்பெண். இவர் மருந்துக்கடையி்ல் வேலை செய்கிறார்.  காவோ வென்,புத்தக கடை வருமானத்தை வைத்துதான் தனது செலவுகளை சமாளிக்கிறார். மர்மநாவல் போட்டி ஒன்றில் பங்கேற்று கதை ஒன்றை எழுதி வருகிறார். தி யெல்லா டாக்சி கேப் என்பது அதன் பெயர். இதில் பரிசாக கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் மழைநீர் ஒழுகும் பிரச்னையை சரி செய்ய நினைக்கிறார். நண்பர்க

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய

கொலைக்குற்றவாளியாக்கப்பட்ட தங்கையின் கணவரைக் காப்பாற்ற நாயகன் செய்யும் அசகாய செயல்கள்!

படம்
  மாநகரிலோ மாயகாடு சிரஞ்சீவி, விஜயசாந்தி  சிரஞ்சீவி ஹைதராபாத்தில் சிறியளவு பிக்பாக்கெட், பணத்தை திருடும் மனிதராக வாழ்கிறார். இவருக்கென தனி திருட்டு நண்பர்கள் குழுவே உள்ளது. அவர்களுக்கு வேலை சொல்லி திருட்டை நடத்துவது சிரஞ்சீவிதான். இப்படியான அவரது வாழ்க்கையில் முக்கியமான நோக்கம், தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதுதான். தங்கை கிராமத்தில் வாழ்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு திருமணம் நடந்திருப்பதும், மாப்பிள்ளை ஹைதராபாத்திற்கு வந்திருப்பதாகவும் கிராமத்து மனிதர்கள் மூலம் தகவல் கிடைக்கிறது. ஆனால் சிரஞ்சீவி செய்யும் தவறான பொய்சாட்சியால் மாப்பிள்ளை சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்டு உண்மையை வெளியே கொண்டு வருகிறார். அது என்ன உண்மை என்பதே கதை.  படத்தில் நடக்கும் கொலை முயற்சி என்னவென்பதை பார்வையாளர்கள் முன்னமே அறிந்தாலும் அதில் உள்ள பாத்திரங்கள் அறிவதில்லை.  போலீஸ் அதிகாரி, பாசத்தால் ஈர்க்கப்பட்டு தனது கடமை, பொறுப்பை துறப்பதுதான் முக்கியமான திருப்புமுனை. ஆனாலும் கூட அவர் தான் பிடித்து வைத்திருப்பவர்களை இம்சிப்பதில்லை. தனது மகளின் வாழ்க்கையைக் காக்க நினைக்கிறார். ஆனால் அது சட்டவிரோத கும்பலுக்கு

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சி

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி பேசுகிறார்கள் . ஆனால் ரகுராம் சற்று மன

மனநலன் பிரச்னையை, குறைபாட்டை அடையாளம் காட்டி குற்றத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள்!

படம்
            பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் , வல்லுறவு செய்பவர்கள் சமூகத்தில உயர்ந்த அடுக்கில் இருந்தால் அவர்களுக்காக நீதி வளையும் . ஒடுங்கி காலில் விழுந்து பணியும் . நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் வரும்போது , குற்றவாளிகள் செய்த குற்றத்திற்கு வருந்தும் இயல்பில் இருக்கிறார்களா என நீதிமன்றம் கவனிக்கிறது . மனித தன்மையே இல்லாத நிலையில் உள்ளவர்களை தண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை . ஒருவேளை தான் என்ன மனநிலையில் இருந்தேன் , எப்படி கொலை செய்தேன் என்று தெரியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் கூறினால் , மருத்துவசோதனை செய்து , மனநிலை குறைபாடு உடையவர் என நிரூபித்தால் அவருக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் . பதிலாக மனநல மையத்தில் ஒரு படுக்கை உறுதி செய்யப்படும் . சிறையில் இருப்பதை விட மனநல மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பானது என பலரும் நம்புகிறார்கள் . ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை ஏமாற்றமளிக்கும் . ஆனால் சட்டம் இதை அனுமதிக்கிறது . ஒருவரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவராக வெளிப்படுத்துவது உண்டு . அதற்கு அவரின் செயல்களை கவனிக்க வேண்டும் . தன்னைப் பற்றி