அரிதாரம். அவதாரம்.. அரங்கேற்றம்…
அரிதாரம். அவதாரம்.. அரங்கேற்றம்… ஜனனி சம்பத் தமிழில்: ஹெலன் ஃபாக்ஸ் அறுபது வயதான நாடகக் கலைஞர் பி.கே சம்பந்தம் வியாசரின் மகாபாரதத்தில் வரும் துச்சாதனன் வேடம் தரித்து அந்த கதாபாத்திரத்தினை கண்முன் நிகழ்த்திக் காண்பித்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தை சேர்ந்த கலைஞர்கள் ‘வஸ்திராபரணம்’ எனும் திரௌபதியினை மையப்படுத்திய நாடகத்தை அரங்கேற்றி பல்வேறு மக்களை காட்சியில் உருக்கமும், உணர்வுமாக நடித்து மெய்மறந்து போக வைத்திருக்கிறார்கள். சென்னையில் ஸ்பிக்மெகே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமது நாடகத்தை நிகழ்த்தியபின் அவரிடம் பேசினேன். தன் அண்ணன் துரியோதனின் கட்டளைக்கு இணங்க சூதாட்டத்தில் தோற்றுப்போன பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை அவளின் கூந்தலைப்பிடித்து அனைவரும் கூடிய சபைக்கு இழுத்து வருகிறான் துச்சாதனன். அவளின் ஆடையை உருவி பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்கள் கௌரவர்கள். வஸ்திராபரணம் என்ற பகுதியில் நாடகமாக நிகழ்த்தப்படும் இந்த சம்பவங்கள் பின்னால் நிகழும் குருஷேத்ரம் எனும் பெரும்