இடுகைகள்

வங்கிகள் இணைப்பு - அரசைக் காப்பாற்றுமா சீர்திருத்தங்கள்?

படம்
வங்கிகள் இணைப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை அறிவித்துள்ளார். ஊழியர்கள் சங்கம் பயத்தையும் திகைப்பையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனால் பயன்கள் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 21 வங்கிகளை 12 ஆக மாற்றும் யோசனையை தேசிய ஜனநாயக கூட்டணி கூறியது. பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த இணைப்புக்கான முதலீடாக 55 ஆயிரத்து 200 கோடி ரூபாயைக் கொடுப்பதமாக அரசு கூறியுள்ளது. பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகள் இணைகின்றன. இவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி. கனரா வங்கி , சிண்டிகேட் வங்கி இணைப்பு மதிப்பு 15.2 லட்சம் கோடி. யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைப்பு - 14.6 லட்சம் கோடி, இந்தியன் வங்கி , அலகாபாத் வங்கி இணைப்பு 8.08 லட்சம் கோடி கடன் கொடுப்பதை வழங்க தனி ஏஜன்சி, 250 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கண்காணிப்பு, தன்னாட்சி அதிகாரம் என பல்வேறு விஷயங்களை அறிவித்துள்ளார். கடந்தவாரம் அறிவித்த 70 ஆயிரம் கோடி ஊக்கத் தொகையும் இதில் இணையும். 8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் மோச

உளவியல் ரீதியாக அகதிகளை மேற்கு நாடுகள் வதைத்து வருகின்றன- அகதியின் குரல்!

படம்
நேர்காணல் இரானிய குர்தீஸ் எழுத்தாளர்  பெருஸ் பூசானி ஆஸ்திரேலியாவிலுள்ள மானுஸ் முகாமில் வசித்து வருகிறார் பெருஸ் பூசானி. அங்குள்ள வாழ்க்கையை தொடர்ச்சியாக உலகின் பார்வைக்கு கொண்டு வருவதில் இவர் முக்கியமானவர். பெரும்பாலான அகதிகளை நாடுகள் குற்றவாளிகள் போலவேதான் நடத்துகின்றன. நீங்கள் என்ன அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள்.  சிறையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கென அங்கு சில உரிமைகள் உண்டு. மேலும் எத்தனை நாட்கள் அங்கிருப்பீர்கள் என்பதற்கு ஒரு கணக்கு உண்டு. அகதிகள் முகாமில் அதற்கான வாய்ப்பு இல்லை. போன் பேசக்கூட அனுமதி பெறவேண்டும். இங்கு பல்வேறு உரிமைகள் உங்களுக்கு அளிக்கப்படாது. நேரம் இங்கு செல்வதே கடினம். தீவிரமான உளவியல் பாதிப்பை நீங்கள் எதிர்கொள்வதாக இருக்கும். எப்படி நிலைமையை சமாளிக்கிறீர்கள்? இங்கு நடக்கும் அநீதிகளுக்கு இரண்டு வகையில் பதிலளிக்கலாம். ஒன்று போராட்டம். இரண்டு அதனை எழுத்தாக்குவது. இங்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளோம். இது பொதுவான முறைதான். உடலை ஆயுதமாக்கி போராடுவது புதிதா என்ன? 2015 முதல் 2017 வரையில் நாங்கள் அதிகாரிகளால் நா

கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!

படம்
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று?  டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது? நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது. சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது. பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர். இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அவஸ்த

மூக்கின் அமைப்பு மனிதர்களுக்கு மாறுபட்டிருப்பது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நமது மூக்கு முன்னோர்களான குரங்குகளை வேறுபட்டிருக்கிறது. கூடுதலாக இரு துளைகள் இருப்பது ஏன்? பரிணாம வளர்ச்சியில் சிம்பன்சி, கொரில்லா, மனிதக்குரங்கு ஆகியவற்றிலிருந்து நாம் வந்ததாக கூறுவார்கள். ஆனால் நாம் அந்தப்பயணத்திலிருந்து கிளை பிரிந்து வந்தவர்கள். இந்த வகையில் அவர்கள் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் பங்காளிகள் என்று சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு மூக்கு பெரும்பாலும் பிளாட்டாக இருக்கும்.  நமக்கு அப்படியில்லை. காரணம் நமது மூக்கு வாசனையை நுகர்வதோடு, உடலின் வெப்பத்தை சரியாக வைத்திருக்கும் பணியையும் செய்கிறது. இதன் விளைவாக, மூக்கில் நீர் தேங்க கூடாது. சளி, நீர் என எதுவந்தாலும் குற்றால அருவி போல கொட்டி விடும். ரிசர்வ் வங்கி போல உபரிநிதியை சேமிப்பது போல, நீரைச் சேர்த்தால் உடலில் அதுவே பெரிய நோய் பாதிப்பு ஆகிவிடும்.  நன்றி: பிபிசி

மூக்கு தினந்தோறும் வளருகிறதா? - அறிவியல் என்ன சொல்லுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எனக்கு என் பெரிய மூக்கைப் பிடிக்கவேயில்லை. அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமா? உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுதான். மூக்கும், காதும் தொடர்ந்து நம் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அனிமேஷன் படங்களில் வருவது போல, படுவேகமாக அல்ல; நிதானமாகத்தான். மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 65 வயதுடையவர்களையும், இளைஞர்களையும் ஆராய்ச்சி செய்தார்கள். இதன் விளைவாக, வயதானவர்களுக்கு இளைஞர்களை விட 20 சதவீதம் மூக்கு நீளமாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. மூக்கின் அமைப்பு வயதாகும்போது நிறையவே மாறும். ஆனால் என்ன பெரிய குடைமிளகாய் மூக்குள்ளவர்கள் புத்திசாலிகள் என்று வதந்தியைக் கிளப்பிவிடுங்கள். அவ்வளவுதான். துப்பறியும் சாம்பு போல தானாகவே விஷயங்கள் அனுகூலமாக நடக்கும் பார்த்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜோகன்னா சிகுர்டர்டோடிர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான். 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக்

கார்மின் ஸ்மார்ட்வாட்ச் - அசத்தும் அம்சங்கள்!

படம்
கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்! கார்மின் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகளில் ஃபெனிக்ஸ் சீரிஸ் புதியது. தற்போது அதில் ஃபெனிக்ஸ் 6 ரக வாட்சுகள் வெளியிடப்பட்டடுள்ளன. புதிய வாட்சில் என்ன இருக்கிறது?  சோலார் சக்திதான் புதியது. பேட்டரி மூன்று நாட்கள் தாங்கும் திறனோடு இருக்கிறது. இந்த வகையிலேயே பெரிய வாட்சுகள் இவை. ஜிபிஎஸ், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், உங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிப்பது என அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. வேறு என்ன தேவை என்ன என இமெயில் அனுப்பினால் அதனையும் செய்து தருவார்கள். இந்த வகையில் அத்தனை வசதிகளையும் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். நன்றி - நியூ அட்லஸ்

நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டமுடியாதா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி நம்மால் நமக்கு நாமே  கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ள முடியாதது ஏன்? இப்படியெல்லாம் யோசித்து கேள்வி கேட்க முடியும் மூளையின் சக்தி அபாரமானதுதான். பதில் சிம்பிள். உங்கள் மூளைக்கு உங்களுடைய கைகளின் தொடுகையும், பிறரின் தொடுகையும் தெரியும். பிரித்துணர முடியும். அதனால்தான் உங்களுடைய கிச்சு கிச்சு மூட்டும் காரியத்தை மூளை புரிந்துகொள்கிறது. இதனால் பிறரின் தொடுகையில் ஏற்படும் கிச்சுகிச்சு சந்தோஷம் நம் கைமூலம் நமக்கு ஏற்படுவதில்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!

படம்
dna india உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்! 2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.  7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது. நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நி

பிஸ்கெட் விற்பனையிலும் சுணக்கமா? தடுமாறும் பிரிட்டானியா, பார்லே!

படம்
better india பிஸ்கெட் வாங்கத் தயங்கும் மக்கள்! பொருளாதாரத்துறை மந்த நிலை என்பது இந்திய வாகனத்துறையை மட்டுமல்ல; நொறுக்குத்தீனி வகைகளையும் பாதித்துள்ளது. நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சியும் ஒற்றை இலக்கமாக உள்ளதை நாளிதழ்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடும் நிலை வந்துவிட்டது. எனவே, நொறுக்குத்தீனி வாங்குவதற்குக் கூட கிராம, நகர தொழிலாளர்கள் குறைவான காசை செலவழித்து வருகின்றனர். இந்தியாவின் முதன்மை பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா உள்நாட்டு விற்பனை தேக்கம் பற்றி அறிவித்துவிட்டது. இதன் போட்டியாளரான பார்லே, பத்தாயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பார்லே இதனை மறுத்துள்ளது.  இதற்கு முக்கியமான காரணமாக கூறுவது 2016ஆம் ஆண்டு அமலான பணமதிப்பு நீக்கம், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி என்கின்றது பார்லே நிறுவன வட்டாரம். இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள 33.2 சதவீத தொழிலாளர்கள் நுகர்வுப்பொருட்களை வாங்கும் முக்கியமான சக்தியாக இருந்தனர். தற்போது அந்த பகுதியும் பலவீனமடைந்துள்ளது. ரூ.5

கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

படம்
கண்காணிக்கும் விளக்கு கம்பம்! ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம். அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது. மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு க