தாலிபான்கள் சீக்கியர்களை மோசமாக நடத்தவில்லை! எழுத்தாளர் அமர்தீப் சிங்
இந்துஸ்தான் டைம்ஸ் அமர்தீப் சிங், எழுத்தாளர், சிங்கப்பூர். 2014ஆம் ஆண்டு தனது அலுவலகப் பணியை அமர்தீப் கைவிட்டார். சீக்கிய மதம் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் பயணம் செய்து கிடைக்கும் தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார். இவ்வகையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். சவுதி அரேபியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணித்து தன் அனுபவங்களை திரைப்படமாகவும் உருவாக்க முயன்று வருகிறார். இச்சமயத்தில் காபூலில் உள்ள குருத்துவாரா தீவிரவாதிகளில் தாக்குதலுக்கு ஆட்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த நாற்பது ஆண்டுகளாக எப்படி சீக்கியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள் என்பதை நம்மிடம் பேசினார். இந்தியாவில் அமலாகியுள்ள குடியுரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சட்டம் பற்றிக் கேட்டதும் ஆப்கானிஸ்தானிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இப்போதாவது நீதி கிடைத்ததே என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் அந்த சட்டத்திலுள்ள பல்வேறு சிக்கலான அடுக்குகளை உணர்ந்தேன். இந்தியாவுக்கு வெளியே உள்ள சிறுபான்மை மக்களை அதிக ஆரவாரம் இல்லாமல் இந்தியாவுக்கு அழைத்துவர இந்த சட்டம் உதவும் என ந