இடுகைகள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும் சிம்பிளான சில பழக்கங்கள்!

படம்
            சிகரெட் புகைப்பதை எப்படி நிறுத்துவது ? நடக்கலாம் குதிக்கலாம் ஓடலாம் பொதுவாக சிகரெட் பிடிப்பதற்கான துடிப்பு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஏற்படுகிறது . எனவே அந்த நேரத்தில் எழுந்து நடப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது . இதன்மூலம் உடனே சிகரெட் பிடிப்பதற்கான எண்ணம் ஏற்படாது . தினசரி உடற்பயிற்சி செய்வது என்பது மன அழுத்தத்தைப் போக்கும் . புகைப்பதை எழுதுங்களேன் எப்போது புகைப்பிடிக்க தோன்றினாலும் உடனே அதனை நோட்டில் எழுதி வையுங்கள் . இதன்மூலம் எந்த நேரத்தில் சூழலில் புகைப்பது தொடங்குகிறது என்பதை அறியலாம் . கொஞ்சம் பழங்கால டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான வெற்றி சூத்திரம்தான் . தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆலோசனை குழுவாக , தனியாக ஆலோசனை செய்யலாம் . இதன்மூலம் பிறரின் அனுபவங்கள் இழப்புகள் ஆகியவை மற்றவருக்கு பாடமாக அமையும் . போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு குழு தெரபி கூட வழங்கப்படுகிறது .. ஒருவர் டூ ஒருவர் என ஆலோசனை செய்வது புகைப்பிடிப்பதில் பெரிய பலனை அளிக்காது . இணையத்தில் பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன . இதற்கென தொலைபேசி எண்களும் உ

பதற்றமான சூழலில் ஒருவருக்கு ஏற்படும் பழக்கங்கள்!- நகம் கடிப்பது, சிகரெட் பிடிப்பது, விரல் சூப்புவது, அளவுக்கதிகமாக சாப்பிடுவது்

படம்
          ஒருவர் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா ? நகங்களை கடிப்பது , பேனாவைத் தட்டுவது , தலைமுடியை சுருட்டுவது , விசில் அடிப்பது , குதிகாலை அசைப்பது என பல்வேறு உடல்மொழிகளை வெளிப்படுத்துவார்கள் . இதனை நாளடைவில் ஒரே மேனரிசமாக மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள் . இப்படி பழக்கங்களை கற்றுக்கொள்வது ஒருவருக்கு ரிலாக்சாக அமையும் . அல்லது அதிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவர் பெறுவார் . அப்படியில்லாதபோது , அப்பழக்கத்தை ஒருவர் செய்யவேண்டியதில்லை . நகம் கடிப்பது பொதுவாக ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படும்போது இப்பழக்கம் ஏற்படுகிறது . உலகில் 44 சதவீத இளைஞர்களுக்கு இப்பழக்கம் உள்ளது . இவர்களின் பொதுவான வயது 19 முதல் 29 வயது வரையில் உள்ளது . குழந்தையாக இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறுபவர்கள் இப்பழக்கத்தை கற்கிறார்கள் . அதுவும் கூட பிறரைப் பார்த்துதான் . விரல் சூப்புதல் இதுவும் கூட பாலருந்தும் குழந்தை , அந்த நினைவிலேயே தன்னை இருத்திக்கொள்வதற்கான நிலைதான் . இந்த பழக்கம் தொடரும்போது குழந்தையின் முன்பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதற்கான வாய்ப்

ஏழை மனிதர்களுக்கு வீடுகட்டிக்கொடுக்க முயன்ற மனுஷகுமாரன்! - பறவைக்கும் கூடுண்டு - லாரி பேக்கர் - ஈரோடு வெ.ஜீவானந்தம்

படம்
      லாரிபேக்கர் தனது மனைவி எலிசபெத்துடன்     மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க வீட்டைக் கட்டியவர் - லாரிபேக்கர் பறவைக்கும் கூடுண்டு ! லாரி பேக்கர் தமிழில் வெ . ஜீவானந்தம்   இங்கிலாந்தில் கட்டிடக் கலையை பயின்ற லாரி பேக்கரின் மனைவி எலிசபெத் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு . அண்மையில் மறைந்த மருத்துவர் வெ . ஜீவானந்தம் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் . லாரிபேக்கர் இங்கிலாந்தில் கட்டிடக்கலை பயின்றவர் . 1943 ஆம் ஆண்டு மிஷனரி சேவைகளுக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகிறார் . காந்தியை அவர் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது . அதனால் ஊக்கம்பெற்றவர் பின்னாளில் தனது தாய்நாட்டிற்கு திரும்பினாலும் கூட இந்தியாவை அவர் மறக்கவில்லை . மீண்டும் இந்தியாவுக்கு க்வாக்கர் குழு மூலம் பல்வேறு சேவைகளை செய்ய வருகிறார் . அவர் காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துகொண்டே இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வருகிறார் . இளம் வயதில் , போருக்கு எதிரான மனநிலை கொண்டவராக இருந்து க்வாக்கர் குழுவில் சேர்கிறார் .. உலகப்போரில் இவரை ராணுவத்திற்கு அழைக்க , புனி

அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்

படம்
              ஜாதி ரத்னாலு  Director: Anudeep KV Produced by: Nag Ashwin Writer(s): Anudeep KV     ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.  ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.    ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க  ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன். அவன் நினைப்பு எப்போதுமே சோறு, அதற்கு குழம்பு, கூட்டு, பொரியல் என்ன வ

காதல் துணைவரால் பகிரப்படும் மோசமான பழக்கவழக்கங்கள்! - தடுக்க முடியுமா?

படம்
              உறவுகளை நூடுல்ஸாக சிக்கவைக்கும் பழக்க வழக்கங்கள் ! யாராவது முக்கியமான விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் இன்ஸ்டாவில் துபா புயுகிஸ்துனின் புகைப்படத்தை அல்லது பார்க் சின் ஹையின் குறும்பான போஸை ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் பெயர்தான் பப்பர் . இப்படி பேசும்போது , ஏதாவது கேள்விகளை பிறர் கேட்கும்போது ஜெல்லி சூயிங்கம்மை அசுவாரசியமாக மென்றபடி கட்டைவிரலால் போனை தேய்த்துக்கொண்டிருக்கிறீர்களா ? இப்படி செய்வது நாளடைவில் ஒருவரின் உறவுகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சியில் கூறியுள்ளனர் . காதலர்களாக உள்ளவர்களி்ல உள்ளவர்களில் ஒருவர் அழைப்பை ஏற்று பேசியபடியே இருப்பது , அல்லது சமூக வலைத்தளங்களில் உலாவியபடியே இருப்பது அவர்களிடையே உறவின் நெருக்கத்தை குறைக்கிறது என்றார் பேய்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் மெரிடித் . இப்படி போனை விரலால் தேய்ப்பதை ஸ்னப்பிங் என்று சொல்லலாம் . இப்படி போனை தேய்த்துக்கொண்டே இருக்கும் பழக்கம் பப்பிங் என்று கூறுகின்றனர் . இந்த ஆய்வு இரண்டு வகையானது . இதில் ஒருவர் போனை அடிக்கடி சோதிப்பது ஆகிய பழக்கமும் இடம்பெற்றது . ஆய

கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?

படம்
              கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா ? சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழவேண்டியது ஆரோக்கியத்திற்கு முக்கியம் . ஆனால் இன்று நகரவாசிகள் நள்ளிரவில் படுத்து காலையில் 9.30 க்கு ஆபீஸ் செல்லவேண்டிய அவசரத்திற்கு வேகமாக எழுந்து வருகின்றனர் . இது அவர்களின் உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தை பாதிக்கிறது . உயிரியல் கடிகாரம் என்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குமுறைபடுத்துகிறது . இதுவே பகலா , இரவா எந்த நேரத்தில் உறங்குகிறோம் என்பதை கவனிக்கிறது . ஆனால் இந்த கடிகாரம் நாம் தூங்கவேண்டிய நேரத்திற்கு அலாரமடித்து நம்மை உஷார் செய்யாது . ஆனால் எழவேண்டிய நேரத்தை இதுவே தீர்மானிக்கிறது . இதுபற்றி சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது . அதில் ஒருவ்ர் தூங்கச்செல்வது அவரின் கலாசார அழுத்தம் சார்ந்தது . ஆனால் எழுவதை உயிரியல் கடிகாரம் தீர்மானிக்கிறது என்றார் ஒலிவியா வாட்ச் . இவர் , மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தூக்கம் பற்றிய ஆய்வை செய்து வரும் பட்டதாரி மாணவி . . இந்த ஆய்வில் நூறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் . பல்வேறு

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம் , மனநிலை , புகைபி