இடுகைகள்

இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட முகங்கள்! - 2021 முகங்கள் புதிது

படம்
  கங்கனா  ரணாவத் மணிகர்ணிகா படத்தில் பொம்மைக் குதிரையில் அபிநயம் பிடித்து தேசப்பற்றில் பொங்கினார். ஆனால் ஷூட்டிங் முடிந்தும் கூட அம்மணியிடம் வைப்ரேஷன் குறையவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கிடைத்தது, அமைதி வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்னது, விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாப் பாடகியை முட்டாள் என்று சொன்னது என ஏதாவது உளறி வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் அவர் பத்ம விருது வாங்கிய செய்தி கூட காணாமல் போனது. தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அரிதாரம் பூசி நடித்தார். ஆனால் படத்தில் அவருக்கு எதுவுமே சிங்க் ஆகவில்லை என்பதால்,  படம் அப்பளமாய் நொறுங்கியது. நடிப்பை விட வாய்ப்பேச்சால் சமூக வலைத்தளங்களில் வலிமையாக இருந்தார் கங்கனா.  நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். அப்புறம் அவர் வேறு ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஏராளமான பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. நூறு ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வாங்க காத்திருந்தோம் என ஊடகங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் பொங்கின. இந்த நேரத்தில் பாஜக ஐடி ஆட்

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் புழங்கிய வார்த்தைகள் ஒரு பார்வை!

படம்
  2021 ஆம் ஆண்டு திகைப்பு, அதிர்ச்சி, பயம், தைரியம், நம்பிக்கை, நிம்ம்மி என ஏராளமான உணர்ச்சிகளை அடைந்திருப்போம். அதனை இப்போது திரும்பி பார்க்கும் நேரம். அதில் நாம் அதிகம் பயன்படுத்திய சில வார்த்தைகளை இப்போது பார்க்கலாம்.  கேலா ஹோப் மேற்கு வங்கத்தின் அக்கா அதாவது தீதி சொன்ன ஸ்லோகன் இது. சொன்ன மாதிரியே அடித்து விளையாடினார். ஆனால் அவரை தேர்தலில் தோற்றதாக சொல்லி உளவியல் ரீதியான பாதிப்பை பாஜக ஏற்படுத்த முயன்றது. ஆனால் மீண்டும் நடந்த தேர்தலில் தீதி மாஸ் காட்டி வென்று தாமரையை பொசுக்கினார். பாஜகவிற்கு எதிரான போராட்டமாக இப்போது கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் விரிவாக்கி வருகிறார். காங்கிரஸூக்கு மாற்றாக திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. கோவாவில் பாஜகவிற்கு எதிராக இதே ஸ்லோகன் சற்று மாற்றம் பெற்று கேல் ஸட்லோ என்று மாற்றம் பெற்றிருக்கிறது.  டூல்கிட் விவசாயிகளின் போராட்டம், இயற்கையைக் காக்கும் போராட்டம், அதற்கான செயல்முறை, எப்படி போராடுவது என்ற திட்டங்களைத்தான் டூல் கிட் என்று சொல்லுவார்கள். இதனை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற வகையில் பாஜக பார்த்தது. இப்படி தான் செய்வதை எதிர்த்த ப

வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!

  வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும் ஆராய்ச்சி முற

சிறந்த தொழிலதிபர்

   சிறந்த தொழிலதிபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் , டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க் , பார்ச்சூன் இதழால் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் . ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன . இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான் . கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது . நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன . கடந்த ஆண்டு நவம்பரில் , அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன் , ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ் . இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம் . செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டகால திட்டம் . இவரின் டெஸ்லா நிறுவ

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்

டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா?

  டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா ? 2008 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்று வெளியானது . அதில் அட்லஸ் ஜெனடிக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர் , டிஎன்ஏ மூலம் குழந்தைகள் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களாக ஆவார்களா , இல்லையா என்பதை தங்களால் கண்டுபிடித்துச் சொல்லமுடியும் என்று கூறியிருந்தார் . இக்கட்டுரை வெளியானதற்கு பிறகு , உலகமே பரபரப்பானது . அப்படியும் இருக்குமோ என்று பலரும் டிஎன்ஏ எடுத்து ஒரே இரவில் தங்கள் குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக்கி விட துடித்தனர் . குழந்தைகளுக்கு உடனே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சோதித்தால்தான் பள்ளி , கல்லூரி முடியும் முன்னர் நீங்கள் அவர்களை விளையாட்டு வீரர்களாக்க முடியும் என்று அக்கறையும் பயமுறுத்தலும் கூட கட்டுரையில் இருந்தது . 2015 இல் வெளியான ஸ்போர்ட்ஸ் ஜர்னல் மெடிசின் இதழில் , மரபணுக்கள் விளையாட்டு வீரர்களின் திறனில் எந்த பங்கும் வகிப்பதில்லை என்று கூறப்பட்டது . இந்நிறுவனம் ஆக்ட்என் 3 என்ற மரபணு சோதனை மூலம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண முடியும் என கூறியது . விளையாட்டு வீரர்களின் உடலில் 9,900 ஆயிரம் பல்வேறு வ
  இந்தியாவை உயர்த்தும் கிராமப் பொருளாதாரம் ! கொரானோ நோய்த்தொற்று இந்தியாவை தாக்கி ஆறு மாதங்களாகின்றன . மத்திய அரசும் , மாநில அரசுகளும் பொதுமுடக்க தளர்வுகளை மெதுவாக அறிவித்து வருகின்றன . கொரானோ காரணமாக அனைத்து தொழில்துறைகளும் முடங்கிவிட்டன என்பது உண்மைதான் . அதேசமயம் கிராமங்களிலுள்ள வேளாண்மைத்துறை மெல்ல மீண்டெழுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன . கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மட்டும் 111.61 டன் உரம் விற்பனையாகியிருக்கிறது . மேற்குவங்கம் , உத்தரப்பிரதேசம் , பஞ்சாப் , தெலங்கானா , ஹரியாணா , சத்தீஸ்கர் , ஒடிஷா , ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வருமானத்திற்கு நெற்பயிரையே நம்பியுள்ளனர் . நெற்பயிர் பயிரிடும் பரப்பு கூட 17 சதவீதம் ( ஜூன் 24 படி ) அதிகரித்துள்ளது . விவசாயத்திற்கான டிராக்டர் விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகரித்துள்ளது . மத்திய அரசு வழங்கிய கடன் திட்டங்களும் , பருவகால மழையும் , இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதும் கிராம பொருளாதாரத்தை மீட்கும் என வேளாண்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர் . இந்தியாவின் பொருளாதார